சொத்துக்குவிப்பு வழக்குச் செலவு ரூ.12.4 கோடியை கோரி தமிழக அரசுக்கு கர்நாடகா கடிதம்
பன்னீர்செல்வத்தை ஆதரிக்கிறார் மயிலை உறுப்பினர் நட்ராஜ்
சென்னை:
பன்னீர்செல்வத்துக்கு தனது ஆதரவு என்று தெரிவித்துள்ளார் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர்.
முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு நாளை சட்டசபையில் நடைபெற உள்ளது. இந்நிலையில், அரசுக்கு எதிராக மயிலாப்பூர் எம்.எல்.ஏ., நட்ராஜ் வாக்களிப்பேன் என்று கூறியதாக தகவல் பரவியது. ஆனால் நட்ராஜ் தரப்பில் சரியான பதில் ஏதும் கிடைக்கவில்லை.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் நட்ராஜ் பேசுகையில்,
இது போன்ற பிரிவினை ஓட்டெடுப்பு என்பதில் உடன்பாடு இல்லை. இரு பிரிவினரையும் இணைக்க முயற்சிப்பேன். அதிமுக ஓ.பி.ஸ்., தலைமையில் இயங்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். என் தொகுதி மக்களின் எண்ணமும் அதுதான். நேர்மையும், சத்தியமும் எனது உணர்வு. மக்கள் உணர்வுகளை மதிப்பேன். நான் ஓ.பி.எஸ்சு.,க்கு ஆதரவாக ஓட்டளிப்பேன் என்பது உண்மை.
– என்று கூறினார்.
நாட்டு நடப்பு: தீர்ப்பும் அரசியல் கட்சிகளும்
பூஜை அறை தெய்வங்கள்
சசிகலாவின் மூன்று கட்டளைகள்: எடப்பாடி கலக்கம்!
சென்னை:
முதல்வராகப் பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு தற்போது பெங்களூரு சிறையில் இருக்கும் அதிமுகவின் தாற்காலிக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா மூன்று முக்கிய கட்டளைகளைப் பிறப்பித்துள்ளாராம். இதனை தாற்காலிகப் பொதுச் செயலாளரால் நியமிகப்பட்டுள்ள துணைப் பொதுச் செயலாளர் தினகரன், எடப்பாடியின் வலியுறுத்திச் சொன்னதாகக் கூறப்படுகிறது.
சசிகலாவின் முக்கிய மூன்று கட்டளைகள் என தினகரன் கூறியவை:
1. முக்கியமான பொறுப்புகள் அனைத்தையும் உங்களிமே கொடுக்க வேண்டும் என்பதால்தான் சசிகலா இவ்வாறு செய்திருக்கிறார். பொதுச் செயலர், ஆட்சி நிர்வாகத்தை கவனிப்பதற்கு உங்களை நியமித்திருந்தாலும், அதை நீங்கள் மட்டுமே தனித்து செய்ய வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்.
2. ஆட்சி நிர்வாகத்தில் எடுக்க வேண்டிய எந்த முக்கிய முடிவானாலும், என்னிடமும், திவாகரனிடமும், நடராஜனிடமும் தெரிவித்து ஒப்புதல் பெற்றே, அதை செயல்படுத்த அறிவுறுத்தி இருக்கிறார். அதனால், ஆட்சி நிர்வாகத்தில் உள்ள அனைத்து விவரங்களையும் மூவரிடமும் அப்டேட் செய்து, மூவரின் வழிகாட்டுதலோடு ஆட்சியை நடத்துங்கள். இதற்கு யார் இடையூறாக இருந்தாலும், அவர்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.
3. நீங்கள் முதல்வராக இருந்தாலும், வாரத்தில் ஒரு நாள், பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள சசிகலாவை கட்டாயம் சந்தித்தாக வேண்டும். ஆட்சி நிர்வாகத்தில் நடக்கும் அத்தனை முக்கிய விஷயங்களையும் அவரிடமும் சொல்லி, ஒப்புதல் பெற வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்.
இப்படி மூன்று முக்கியக் கட்டளைகளை விதித்து, ஆட்சி நிர்வாகப் பொறுப்பை கொடுத்திருப்பதால், முதல்வராக பதவியேற்ற சந்தோஷத்தைக் காட்டிலும், நிபந்தனைகளை நினைத்து அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்பு
சென்னை:
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 31 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை வியாழன் அன்று (பிப். 16) பதவியேற்றது. முதல்வர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நிதி , உள்துறை , நிர்வாகம், வருவாய் , பொதுப்பணி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட முக்கிய துறைகளை கவனிப்பார்.
முதல் வரிசையில் சசிகலா சகோதரர் திவாகரன் , தினகரன் , தம்பித்துரை உள்ளிட்டோர் இருந்தனர்.
தான் சேலம் செல்லும் வழியில், இந்தப் பதவி ஏற்பு விழா குறித்த தகவல் வந்ததால், தம்மால் கலந்து கொள்ள இயலவில்லை என்று மு.க. ஸ்டாலின் கூறியிருந்தார். எனவே எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இதில் பங்கேற்கவில்லை.
பதவியேற்றுக் கொள்பவர்களின் பெயர்களை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பட்டியல் பிரகாரம் வாசித்தார்.
பதவியேற்ற பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள், தினகரன் உள்ளிட்டோர் மெரினாவில் உள்ள ஜெ., மற்றும் எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
என்ன செய்யும் சூரியதோஷம்?
என்னப் பாத்து சிரிச்சிடாதீங்க: எடப்பாடிக்கு ஸ்டாலின் அட்வைஸ்
சென்னை:
சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்னைப் பார்த்து சிரிக்காமல் இருக்க வேண்டும் என எதிர்க் கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
புதிய முதல்வர் குறித்து அவர் கூறுகையில், தற்போது மக்கள் விரோத ஆட்சி அமைந்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமது பதவியை காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்றால், சட்டசபையில் என்னைப் பார்த்து சிரிக்காமல் இருக்க வேண்டும் என்றார்.
நீட் தேர்வும், நீடிக்கும் குழப்பமும்! – புதிய முதலமைச்சர் கவனம் செலுத்துவாரா?
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., போன்ற இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் (NEET – NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST) எனப்படும் தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வின் அடிப்படையில்தான், இனி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்ற சூழலில், அதிலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்கும் வகையில் சட்டப்பேரவையில் சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறி இருக்கிறது. இதன்மூலம் தமிழக மாணவர்கள் இனி நீட் தேர்வு எழுத தேவையில்லை என்றும், +2 இறுதித்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் அரசு கூறுகிறது. சட்டம் நிறைவேற்றப்பட்டு ஒரு மாதம் ஆகப் போகிறதே தவிர, அதற்கு இன்னும் அங்கீகாரம் கிடைக்கப் பெறாததால் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது.
நீட் தேர்வுக்கு விலக்கு ஏன்?
சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., மாநில பாடத்திட்டம், மெட்ரிக் பாடத்திட்டம் போன்ற பல்வேறு பாடத் திட்டங்களில், நாடு முழுவதும் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில், சி.பி.எஸ்.இ., என்.சி.ஆர்.டி., ஆகிய பாடத் திட்டத்தின் அடிப்படையிலே நுழைவுத் தேர்வு நடைபெறும். இதனால், மற்ற பாடத் திட்டங்களில் பயின்றவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்ற கருத்தாக்கம் எழுந்த நிலையில், நீட் நுழைவுத் தேர்வை நடத்துவதற்கான சட்டம் மத்திய அரசால் முதலில் அவசரச் சட்டமாகப் பிறப்பிக்கப்பட்டு, பின்னர் கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாகியுள்ளது.
இந்திய மருத்துவக் கவுன்சில் திருத்தச் சட்டம்-2016 என அழைக்கப்படும் அந்தச் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டு அரசியலமைப்புச் சட்ட அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. மத்திய அரசின் அதிகாரப் பட்டியலில் மருத்துவக் கல்வி இருப்பதால், அதில் உள்ள உயர்கல்வியின் தரத்தை நிர்ணயிக்கும் 66-வது பிரிவின் அடிப்படையிலும், உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலும் இந்திய மருத்துவுக் கவுன்சிலின் பரிந்துரைகளின் படியும் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டிருக்கிறது.
மத்திய அரசின் அதிகார வரம்பில் பொதுப்பட்டியலில் கல்வி இருந்தாலும், அதில் சட்டத்திருத்தம் செய்வதற்கு மாநில அரசுக்கு உரிமையும், அதிகாரமும் உள்ளது. அதன்படிதான், பொதுப்பட்டியலில் உள்ள ”மிருகவதை தடுப்புச் சட்டத்தில்” திருத்தம் செய்து, மத்திய அரசு உதவியுடன் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு வழிவகுத்தது. இதே வழியின்படிதான், தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்களிக்கும் வகையில் பேரவையில் சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கிறது
ஆனால், தமிழக அரசின் சட்டமும், மத்திய அரசின் நீட் தேர்வு சட்டமும், இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் 1956 மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் திருத்தச் சட்டம் 2016-க்கு முரண்பாடாக இருப்பதை சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதனால், நீட் நுழைவுத் தேர்விலிருந்து மாணவர்கள் விலக்குபெற முடியாது என்றும், நீதிமன்றத்தை நாடினாலும்கூட, மத்திய அரசின் பக்கமே சாதகமான தீர்ப்பு வரும் என்றும் சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.
வரும் மே 7-ம் தேதி நடைபெறும் நீட் தேர்வுக்கு ஜனவரி 31-ம் தேதி முதல் மார்ச் 1-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்ற நிலையில், கால அவகாசம் குறைவாக இருப்பதால், மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் ஒருவித குழப்பமும், கவலையும் ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசுக்கு உள்ள வாய்ப்புகள் என்ன?
ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்திற்கு எப்படி மத்திய அரசின் உதவியுடன் தமிழக அரசு சட்ட அங்கீகாரம் பெற்றதோ, அப்படி தற்போதைய நீட் தேர்வு சட்டத்திற்கும் சட்ட அங்கீகாரம் பெற்றால்தான், நுழைவுத் தேர்விலிருந்து மாணவர்கள் பயன்பெற முடியும் என்கிறார்கள் சட்ட நுணுக்கங்களை அறிந்தோர். அதற்கு முதலில் பிரதமர் நரேந்திர மோடி சம்மதம் தெரிவிக்க வேண்டும். பிறகு மத்திய சட்ட அமைச்சகம், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகங்களின் ஒப்புதலோடு, குடியரசுத்தலைவர் அங்கீகாரம் அளிக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டத்தை 24 மணி நேரத்திலும், நிரந்தரச் சட்டத்தை ஒரு வாரத்திலும் இயற்றியது போல், இதையும் பெற்று விடலாம் என்று நினைத்தால், தமிழகம் மீண்டுமொரு மக்கள் போராட்டத்தை சந்தித்தால் ஒழிய சாத்தியமில்லை. மத்திய அரசுக்கு அரசியல் ரீதியாக பல்வேறு அழுத்தங்களை தமிழக அரசு தந்தால்தான் நீட் நுழைவுத் தேர்வு சட்டம் நிறைவேறும். ஆனால் அதை செய்யும் அளவுக்கு எடப்பாடி பழனிச்சாமி அரசு இப்போதைக்கு இருக்கிறதா என்பதுதான் நாம் எழுப்பும் கேள்வி. தற்போதைய நிலையில், பேரவையில் நாளை மறுநாள் பெரும்பான்மையை நிரூபிக்கவே பெரும் பாடுபட்டு கொண்டிருக்கும் சூழலில், இது சாத்தியமாகுமா?¬
தமிழக அரசின் நடவடிக்கையை நம்பி, மாணவர்கள் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் இருப்பதும், தேர்வுக்கு தயாராகமல் இருப்பதும் பெரும் பின்விளைவுகளையே மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்கொள்ள நேரிடும். எனவே, நீட் தேர்வுக்கு மனதளவிலும், பயிற்சி அளவிலும் மாணவர்கள் தயாராவதும், அவர்களை பெற்றோர்கள் தயார்படுத்துவதும்தான் நம்முன் இருக்கும் வாய்ப்பு.
கட்டுரை: – ஜி.எஸ்.பாலமுருகன், மயிலாடுதுறை. 9842940657

