Home Blog Page 5845

அரசியல் கட்சியை தொடங்கிய அணு உலை எதிர்ப்பாளர் !

 
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமார் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். ‘பச்சை தமிழகம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இக்கட்சியின் அறிமுக நிகழ்ச்சி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று நடைபெற்றது.
 
நிகழ்ச்சிக்கு பின்னர் உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
 
பதவிகளை பிடிக்கவோ, பணம் சம்பாதிக்கவோ அரசியலுக்கு வரவில்லை. சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோம். மக்கள் விரோத கொள்கைகள் உடைய எந்த கட்சிகளுடனும் கூட்டணி வைக்கமாட்டோம். வேட்பாளர்கள் பட்டியலில் பெண்கள், இளைஞர்கள், தலித்துகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.
 
சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தும் அணுஉலை, மீத்தேன் திட்டம் என தமிழக மக்கள் மீது திட்டமிட்டு தீமைகள் திணிக்கப்பட்டு வருகிறது. இதனை தடுக்க பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். மக்களின் நலனுக்காக போராடும் கோரிக்கைகளை அரசியல் அளவில் எடுத்துச்சென்று தீர்வு காணும் வகையில் போராட்ட யுக்தியாகத்தான் கட்சியை தொடங்கியுள்ளோம்.
சிறுபான்மையினர், தலித் மக்களின் கோரிக்கைகளுக்காக நாங்கள் போராடுவோம். வளங்களை மீட்டெடுக்கவும், வாழ்வாதாரங்களை காக்கவும் போராடும் நாங்கள் அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்க முயற்சி செய்வோம். என்று உதயகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்டு உதயகுமார் தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி அலுவலக உதவி செக்ஷன் அதிகாரிகள் 12 பேர் அதிரடியாக பணியிட மாற்றம்

 
பிரதமர் மோடி அலுவலகத்தில் உதவி செக்ஷன் அதிகாரி அந்தஸ்தில் பணியாற்றி வந்த 12 இளநிலை ஊழியர்கள், அங்கிருந்து விடுவிக்கப்பட்டு பல்வேறு மத்திய அமைச்சகங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.அதே சமயத்தில், பிரதமர் அலுவலகத்தில் புதிதாக 16 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
பாதுகாப்பு அமைச்சகத்துக்கு 3 பேரும், வேளாண்மை, தகவல் ஒலிபரப்பு ஆகிய அமைச்சகங்களுக்கு தலா 2 பேரும், வர்த்தகம், உணவு, உயர் கல்வி, பெட்ரோலியம், சாலை போக்குவரத்து ஆகிய அமைச்சகங்களுக்கு தலா ஒருவரும் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது. ஆனால் மாற்றத்துக்கான காரணம் கூறப்படவில்லை

நாட்டு மக்களிடம் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் : முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

 
ஐதராபாத் பல்கலைகழகத்தில் ஆராய்ச்சி படிப்பு தலித் பிரிவு மாணவர் ரோகித் வெர்முலா தற்கொலை விவகாரம் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது டுவீட்டர் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடியை கடுமையாக சாடியுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:-
 
மோடி அரசின் அரசியல்சாசன கடமை தலித்துகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வரையறுக்கப்பட்டது. மாறாக, மோடி அரசின் மந்திரிகள் ஐந்து மாணவர்களை சஸ்பெண்ட என்ற பெயரில் விலக்கி வைத்துள்ளனர்.
 
இது தற்கொலை அல்ல. இது கொலை. இது ஜனநாயகத்தின் படுகொலை. மோடிஜி முதலமைச்சரை பதவி நீக்கம் செய்துவிட்டு நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்” என்று தனது டுவிட்டரில் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

ராகுல்காந்தி அழைப்பால் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் டெல்லி விரைவு

 
ராகுல்காந்தி அழைப்ப்பால் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் டெல்லி விரைந்துள்ளனர். நாளை (புதன்கிழமை) முக்கிய ஆலோசனை ராகுல்காந்தியுடன் நடத்த உள்ளார். இதற்காக, காங்கிரஸ் நிர்வாகிகள் டெல்லி விரைந்துள்ளனர்.
 
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் எல்லாம் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. தி.மு.க. கூட்டணியில் சேர காங்கிரஸ் கட்சிக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ள தகவலை காங்கிரஸ் கட்சி தலைமைக்கு அக்கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஏற்கனவேதெரிவித்துவிட்டார்.
 
இந்த நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு அக்கட்சியின் அகில இந்திய துணைத்தலைவர் ராகுல்காந்தி அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, டெல்லியில் உள்ள ராகுல்காந்தி வீட்டில் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
 
இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், முன்னாள் மத்திய மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், தனுஷ்கோடி ஆதித்தன், சுதர்சன நாச்சியப்பன், தேசிய செயலாளர்கள் சு.திருநாவுக்கரசர், செல்லக்குமார், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் குமரி அனந்தன், கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கோபிநாத் உள்பட 13 பேர் டெல்லி செல்கின்றனர். தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கும் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்.
 
ராகுல்காந்தி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், யாருடன் கூட்டணி என்பது குறித்தும், எத்தனை தொகுதிகள் கேட்பது என்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. ஏற்கனவே, பீகார் சட்டமன்ற தேர்தலில் நிதிஷ்குமார் – லாலு பிரசாத் யாதவ் கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி 41 இடங்களில் போட்டியிட்டு, 25 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில், 5 பேருக்கு அமைச்சர் பதவியும் கிடைத்துள்ளது. இந்த திட்டத்தை வகுத்தவர் ராகுல்காந்தி தான்.
 
எனவே, தமிழக சட்டமன்ற தேர்தலிலும் இதே கூட்டணி பார்முலாவை கடைபிடிக்கவே ராகுல்காந்தி விரும்புகிறார். அதுவும் தி.மு.க. கூட்டணியில் தான் காங்கிரஸ் கட்சி இடம்பெறும் என தெரிகிறது. ஏற்கனவே, கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ், 63 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதன்பிறகு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு ஒரு இடத்தில்கூட வெற்றி பெறமுடியாமல் படுதோல்வி அடைந்தது.
 
இதே விஷப்பரீட்சையில் மீண்டும் இறங்கக்கூடாது என்ற முடிவில் காங்கிரஸ் கட்சி உறுதியாக இருக்கிறது. இந்த முறை, தி.மு.க. கூட்டணியில் மீண்டும் இணைந்தாலும், கடந்த முறை போல 63 இடங்களை காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால், காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜி.கே.வாசன் பிரிந்து சென்று தனிக்கட்சி தொடங்கிவிட்டார். அதுமட்டுமல்லாமல், அப்போது 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
 
எனவே, வரும் சட்டமன்ற தேர்தலில் 35 இடங்கள் வரை தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கேட்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதே கூட்டணிக்கு தே.மு.தி.க. வும் வர வேண்டும் என காங்கிரஸ் விரும்புகிறது. எப்படியும் இந்த சட்டமன்ற தேர்தலில் வலுவான கூட்டணியாக உருவெடுத்தால், 2019-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்கு இது பெரும் உதவியாக இருக்கும் என்று காங்கிரஸ் கட்சி நம்புகிறது.
 
எனவே, இதன் அடிப்படையிலான விஷயங்களே ராகுல்காந்தியின் ஆலோசனையில் இடம் பெறும் என்று காங்கிரஸ் வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் கூறுகிறது .

தை கிருத்திகை – திருப்பரங்குன்றம் கோபுர தரிசனம்

தை கிருத்திகையான இன்று, திருப்பரங்குன்றம் கோபுரங்களின் தரிசனம்:

திருப்பரங்குன்றம்

#1

https%3A 3.bp.blogspot.com - 2026

கோபுர தரிசனம்

#2

https%3A 1.bp.blogspot.com FayHGV4fqd0 VkXt1lYwYQI AAAAAAAAIss Tj40Y0e4aJ4 s640 thiruparangumdram%2B1aa - 2026

 
 

‘குன்றிருக்கும் இடமெல்லாம்.. 

குமரன் இருப்பான்..’

#3

https%3A 4.bp.blogspot.com - 2026

 

மேலும் படங்கள்.. மயில் வாகனமும், முருகப் பெருமானும்.. இங்கே: https://tamilamudam.blogspot.com/2015/11/blog-post_15.html 

 

ஜனவரி 27முதல் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான விருப்ப மனு பெறப்படும் : பா.ம.க

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான விருப்ப மனுக்கள் ஜனவரி 27முதல் பெறப்படும் என்று பா.ம.க அறிவித்துள்ளது
இதுகுறித்து. பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
 
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைகளுக்கு வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. அத்தேர்தலை எதிர்கொள்ள பாட்டாளி மக்கள் கட்சி தயாராகி விட்டது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை விரைந்து வெளியிடுவதற்கு வசதியாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து வரும் 27 ஆம் தேதி புதன்கிழமை முதல் விருப்ப மனுக்கள் பெறப்படவுள்ளன.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் உள்ள பா.ம.க. அலுவலகத்தில் ஜனவரி 27ஆம் தேதி முதல் பிப்ரவரி 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை தினமும் காலை 10.00மணி முதல் மாலை 4.00 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும். மனுவுடன் கட்டணமாக ரூ.5,000 செலுத்த வேண்டும்.
 
மனுக்கள் பெறப்பட்ட பின்னர் அவற்றை ஆய்வு செய்து, இரு மாநிலங்களிலும் போட்டியிட விண்ணப்பித்தவர்களை அழைத்து நேர்காணல் நடத்தி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

வானதி பதிப்பக உரிமையாளர் ‘வானதி திருநாவுக்கரசு’ காலமானார்

Y. Thirunavukkarasu Proprietor of Vanathi Pathippakam aged about 88yrs expired on 19/01/2016 Tuesday at 00.30am at his residence New No.6,  Krishnaswamy street  Abhiramapuram Chennai 600 018.

Funeral on 19/01/2016 at Nagarathar Viduthi South Mada street, opp to MSM theater thiruvottiyur  Chennai  600 019 at 3.30 pm

.

Contact: Son TR. Ramanathan call skype logo - 20269884809246 / call skype logo - 2026044-24996344

பழம்பெரும் பதிப்பக உரிமையாளர் வானதி திருநாவுக்கரசு காலமானார்
சென்னை:
தமிழ்ப் பதிப்பக உலகில் முக்கியப் பங்கு வகித்தவரும் பழம்பெரும் பதிப்பக உரிமையாளருமான வானதி திருநாவுக்கரசு ஜன.19 செவ்வாய்க்கிழமை இன்று அதிகாலை 12.30 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 88.
சில நாட்களாக உடல் நலம் குன்றி இருந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை சென்னை அபிராமபுரத்தில் உள்ள அவரது வீட்டில் அவர் காலமானார். 
அவரது இறுதிச் சடங்குகள் செவ்வாய்க்கிழமை இன்று மாலை 3.30க்கு சென்னை திருவொற்றியூர் எம்.எஸ்.எம். தியேட்டர் எதிரில் உள்ள தெற்கு மாட வீதி, நகரத்தார் விடுதியில் நடைபெறும் என்று அவரது குடும்பத்தார் தெரிவித்தனர். 
தகவலுக்கு: டி.ஆர். ராமநாதன், 98848 09246 / call skype logo - 2026044-24996344


REGARDS…

cleardot - 2026

VANATHI PATHIPPAKAM
23,Deenadayalu street,T.nagar, Chennai-17
Ph-no-call skype logo - 2026044-24342810/24310769

வானதி பதிப்பக உரிமையாளர் ‘வானதி திருநாவுக்கரசு’ காலமானார்

Y. Thirunavukkarasu Proprietor of Vanathi Pathippakam aged about 88yrs expired on 19/01/2016 Tuesday at 00.30am at his residence New No.6, Krishnaswamy street Abhiramapuram Chennai 600 018.
Funeral on 19/01/2016 at Nagarathar Viduthi South Mada street, opp to MSM theater thiruvottiyur Chennai 600 019 at 3.30 pm
.
Contact: Son TR. Ramanathan 9884809246 / 044-24996344
பழம்பெரும் பதிப்பக உரிமையாளர் வானதி திருநாவுக்கரசு காலமானார் சென்னை: தமிழ்ப் பதிப்பக உலகில் முக்கியப் பங்கு வகித்தவரும் பழம்பெரும் பதிப்பக உரிமையாளருமான வானதி திருநாவுக்கரசு ஜன.19 செவ்வாய்க்கிழமை இன்று அதிகாலை 12.30 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 88. சில நாட்களாக உடல் நலம் குன்றி இருந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை சென்னை அபிராமபுரத்தில் உள்ள அவரது வீட்டில் அவர் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் செவ்வாய்க்கிழமை இன்று மாலை 3.30க்கு சென்னை திருவொற்றியூர் எம்.எஸ்.எம். தியேட்டர் எதிரில் உள்ள தெற்கு மாட வீதி, நகரத்தார் விடுதியில் நடைபெறும் என்று அவரது குடும்பத்தார் தெரிவித்தனர்.
தகவலுக்கு: டி.ஆர். ராமநாதன், 98848 09246 / 044-24996344

REGARDS…
VANATHI PATHIPPAKAM 23,Deenadayalu street,T.nagar, Chennai-17 Ph-no-044-24342810/24310769

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் பலி

சென்னை:
சென்னையில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது, விஷ வாயு தாக்கி தொழிலாளர்கள் 4 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் துரைப்பாக்கத்தை அடுத்த காரப்பாக்கத்தில்  தலப்பாகட்டி பிரியாணி ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் பின்புறம் உள்ள  கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்த ஓட்டல் நிர்வாகம் அழைத்ததின் பேரில், குமார், சரவணன், வேல்முருகன் உள்பட 3   தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். இதில் முதலில் குமார் கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கினார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியில் வராததால் அவரது தம்பி சரவணனும் அடுத்து வேல்முருகனும்  உள்ளே இறங்கினர். 3 பேரும் நீண்ட நேரமாகியும் வெளியில் வராததால், ஓட்டல் ஊழியர்கள் கழிவு நீர் தொட்டியின் அருகில் நின்று சத்தமிட்டனர். ஆனால் உள்ளே இருந்து எந்த பதிலும் வரவில்லை.

இதனால், ஓட்டல் ஊழியர் ராஜேஷ் கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கினார். சிறிது நேரம் ஆனதும், அவரும் வெளியில் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டல் நிர்வாகத்தினர் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில், அடையாறு துணை ஆணையர் கண்ணன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்தனர். கழிவு நீர்த் தொட்டிக்குள் சிக்கிக் கொண்ட குமார், சரவணன், வேல்முருகன், ராஜேஷ்  ஆகியோரை மீட்கும் பணியில் போலீசாரும் அங்கிருந்தவர்களும் ஈடுபட் டனர்.  அப்போது, 4 பேரும் விஷவாயு தாக்கி அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து 4 பேரின் உடலையும் மீட்ட போலீசார், அவர்களின் உடல்களை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து கண்ணகி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி றார்கள்.

சர்ச்சையைக் கிளப்பிய விஜய் ஆண்டனியின் “பிச்சைக்காரன்”!

விரைவில் விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளியாகவிருக்கும் பிச்சைக்காரன் படத்தின் விளம்பரப்பாடலில் இடம்பெற்ற வரிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாடலின் சில வரிகள் இட ஒதுக்கீடு குறித்தும், மருத்துவர்கள் மீதான நம்பிக்கை பற்றியும் மிகவும் தவறான பார்வையை முன் வைப்பதாக பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

விஜய், அஜித் உள்ளிட்ட நட்சித்திர ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து தனக்கென ஒரு இடத்தை பிடித்த விஜய் ஆண்டனி, நான் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இவர் நடித்த சில படங்களும் வெற்றியடைந்தது. இவர், வித்தியசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில், அவருடைய சொந்த நிறுவனம் தயாரிக்கும் பிச்சைக்காரன் எனும் படத்தில் அவர் ஹீரோவாக நடித்தும், இசையமைத்தும் உள்ளார். இந்தப் படம் சில நாட்களில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் கிளாமர் சாங் என்னும் விளம்பரப் பாடலில் சர்ச்சைக்குரிய வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது.
 
அந்தப் படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகியது. அதில் கிளாமர் சாங் என்ற அடைமொழியுடன் விளம்பரப்பாடல் வெளியாகியுள்ளது.
அந்தப் பாடலில் இட ஒதுக்கீடு குறித்தும், மருத்துவர்கள் குறித்தும் சர்ச்சையை ஏற்படுத்தும் வார்த்தைகள் அதில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலைக் கேட்ட மருத்துவர்களும், சமூக ஆர்வலர்களும் விஜய் ஆண்டனிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.