Home Blog Page 72

மீண்டும் தலைதூக்க முடியாதபடி திமுக.,வுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்: கௌதமி

gowdami in srivilliputhur - 2026

வரும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் தலை நிமிர்ந்து பார்க்கக்கூட முடியாத அளவுக்கு திமுகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை கௌதமி செய்தியாளர்களிடம் பேசிய போது கூறினார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை கௌதமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது…

ஆண்டாளின் அழைப்பின் பெயரில் எதிர்பாராமல் கோயிலுக்கு வந்து வழிபாடு நடத்தியுள்ளேன்.

தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினர், அதிமுக பரம்பரை வாக்காளர்களை நேரில் சென்று சந்திக்க உள்ளேன். யாருக்கு எந்த தொகுதி என முடிவு செய்ய காலம் உள்ளது. இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி அண்ணன் முடிவெடுக்க வேண்டும். சரியான நேரத்தில் சரியான முடிவு எடுப்பார்.

திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும். மீண்டும் தலையெடுத்து பார்க்கக்கூட முடியாத அளவு திமுகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

உள்துறை அமைச்சர் கூட்டணி ஆட்சி என குறிப்பிட்டது குறித்த கேள்விக்கு, வார்த்தைகளின் அர்த்தம் பின்னணி குறித்து இந்த நேரத்தில் ஆராய வேண்டிய அவசியம் இல்லை.

அதிமுக பாஜக கூட்டணி முடிவான பின்னர் தேர்தலுக்கான அனைத்து பணிகளும் எடப்பாடி யார் தலைமையில் தான் நடைபெறும் என்பதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மிக உறுதியாக இருக்கிறார். அதை நேற்று ஒருமுறை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலையை வரவேற்பதா போனால் போகட்டும் என‌ பொறுத்து விட்டு விடவா என தெரியவில்லை. அதிமுக கூட்டணியில் எந்த கட்சியினைய வேண்டும் என்பதை எடப்பாடியார் சரியாக முடிவெடுப்பார்.

கமலஹாசன் திமுக கூட்டணிக்கு சென்றது குறித்த கேள்விக்கு, சூழ்நிலைக்கு தகுந்த முடிவு எடுக்கும் போது வார்த்தைகளை விட செயல்தான் பலமாக பேசும். புற்றுநோய் மற்றும் கல்வி குறித்த மனித வாழ்க்கைக்கு தேவையான பல்வேறு விழிப்புணர்வை மக்கள் மத்தியில் எடுத்து உரைத்துள்ளேன். 2026 தேர்தலை பொருத்தவரை கூடுதலான விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டியுள்ளது.

அடுத்த தேர்தலில் திமுகவை தலை நிமிர்ந்து கூட பார்க்க முடியாத அளவுக்கு முடிவு செய்தால்தான் எடப்பாடி யார் தலைமையில் நியாயமான மக்களாட்சி கொண்டு வந்து தமிழ்நாட்டை காப்பாற்ற இயலும்.

எடப்பாடி யார் மிகத் தெளிவாக இருக்கிறார். கூட்டணி குறித்து யார் என்ன சொன்னாலும் அது அவர்களுடைய கருத்து… என்றார்.

வைகாசி விசாகம்

murugan - 2026

கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்
ஆசிரியர் – கலைமகள்

வைகாசி விசாகம் முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகும். வைகாசி விசாகத்தில் தான் முருகப்பெருமான் அவதரித்தார்.

மணிபல்லவத் தீவில் தீவதிலகை என்ற காவல் தெய்வம் தோன்றி மணிமேகலையிடம் வைகாசிப் பவுர்ணமி அன்று கோமுகி என்ற பொய்கையில் இருந்து அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி அட்சயப் பாத்திரத்தைக் கொடுத்து, “மக்களின் பசிப்பிணியைப் போக்கு வதற்காகவே இப்படிப்பட்ட அட்சயப் பாத்திரத்தை உனக்கு வழங்குகிறேன்” என்று கூறி மறைந்தது!

மணிமேகலையும் புத்தர் பிறந்த வைகாசி முழுநிலவில் கோமுகி பொய்கையிலிருந்து வெளியே வந்த அட்சயப்பாத்திரத்தை எடுத்துக்கொண்டு புகார் நகருக்குத் திரும்பினாள் என்கிறது மணிமேகலை (ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று)

திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் என்ற மகான் வைகாசி விசாகத்தில் சித்தியடைந்ததால் இந்நாளில் அவரது குருபூஜை திருப்போரிலுள்ள அவரது சமாதியில் விசேஷமாக நடைபெற்று வருகிறது.

சோழ மாமன்னர் ராஜராஜ சோழனின் வாழ்க்கை வரலாற்று நாடகத்தை ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாகத் திருநாளில் நடத்துவதோடு நாடகத்தில் நடித்தவர்களுக்கும் சன்மானமாக நெல் வழங்கிய ராஜேந்திர சோழன் பற்றிய குறிப்பு தஞ்சை பெரிய கோவில் வடக்குச் சுவரில் கல்வெட்டாக உள்ளதைப் பார்க்கலாம்.

எம தர்மராஜனுக்குரியது வைகாசி விசாகமேயாகும். அன்று எம தர்ம ராஜனை வழிபடுவதால் நீண்ட ஆயுள் கிடைக்கும். சூரியன் உதித்த பின்னர் காலை வேளையில் அல்லது சூரியன் மறைவதற்கு முன்பாக மாலை வேளையில் தெற்கு முகமாகப் பார்த்து எமதர்ம ராஜனை வைகாசி விசாக நாளன்று வழிபட்டால் நீண்ட ஆயுள் நோயின்றி வாழ்வு கிடைக்கும் என்பார்கள்.

பழனி, திருச்செந்தூர், சுவாமி மலை போன்ற முருகன் திருத்தலங்களில் வைகாசி விசாகம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இந்நாளில் முருகனை வழிபடுவதால் பகை அழியும். விசாகம் குருவிற்குரிய நட்சத்திரமாதலால் குருவிற்கு உரிய தலமான திருச்செந்தூரில் வைகாசி விசாகப் பெருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது.

தமிழில் ஏ.ஐ. ; வித்தியாசமான முயற்சி!

ashwathaman allimuthu bjp - 2026

ஓலைச் சுவடிகளில் தமிழ் பல்லாயிரம் ஆண்டுகளாக காக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென 20 ஆம் நூற்றாண்டில் ஓலைச்சுவடிகள் அழிந்து அச்சு ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கின. ஓலைச் சுவடிகளை எழுதவோ படிக்கவோ ஆளில்லை என்ற நிலைமை வெறும் 70-80 ஆண்டுகளில் வந்துவிட்டது.

அச்சு ஊடகம் வந்த பிறகு ” யார் காப்பார் என்னை என தமிழன்னை ஏங்கிய போது நான் காப்பேன் உன்னை” என்று களமிறங்கியவர்கள் உ.வே.சாமிநாதய்யர், திருக்குறள் முனுசாமி கவுண்டர் போன்றோர். அவர்கள் சங்க இலக்கியங்களையும், திருக்குறள் போன்ற அரிய நூல்களையும் தேடித்தேடி கண்டறிந்து ஓலைச் சுவடியில் இருந்து காகித பிரதிகளாக மாற்றினர். இல்லையேல் ஓலைச் சுவடிகளோடு ஓலைச் சுவடியாக தமிழும் கரையான்களால் அழிக்கப்பட்டிருக்கும்.

இன்று புத்தங்கள் அழியும் நிலையை நோக்கி PDF பைல்களும் டாக்குமெண்ட் பைல்களும் கொண்டு சென்றுவிட்டன. நாம் யாரும் காகித புத்தகங்களை தூக்கிக் கொண்டு சுற்றுவதில்லை மிக எளிதாக PDF பைல்களை தான் படித்துக் கொண்டு இருக்கிறோம். இன்னும் 10 ஆண்டுகளில் PDF பைல்களையும் காலச்சக்கரம் முழுமையாக அழித்து, அனைத்தையும் AI வடிவில் மட்டுமே நிலைத்திருக்க செய்திருக்கும். இன்னும் 10 ஆண்டுகளில் அதாவது 2020 க்கு பிறகு பிறந்த குழந்தைகள் கல்லூரி நாட்களில் AI யையோ அல்லது அதற்கு அடுத்த அப்டேட் டெக்னாலஜியையோ தான் கட்டாயம் பயன்படுத்துவார்கள் அவர்களின் கையில் எந்த புத்தகமோ எந்த PDF பைல்களோ எந்த doc பைல்களோ இருக்க வாய்ப்பில்லை.

உண்மையை சொல்ல வேண்டுமானால் மரபு கவிதையை அழித்து புதுக் கவிதையைப் புகுத்திய பாரதி ” மெல்லத் தமிழில் இனி சாகும்” என்றான். ஆம் உண்மைதான் பாரதி மட்டும் புதுக்கவிதை என்ற ஒன்றை தோற்றுவிக்காமல் போயிருந்தால் இன்று ஒரே ஒருவர் கூட கவிஞர் என்றோ தமிழ் புலவர் என்றோ கூறித் திரிய வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும். புதுக் கவிதை எழுதவே எவருக்கும் சிந்தனை இல்லை என்னும் போது மரபு கவிதை எல்லாம் இக்காலத்தில் நினைத்துக் கூட பார்க்கமுடியாது, அதனால் தான் முக்காலமும் உணர்ந்த எங்கள் பாரதி இலக்கிய விதிகளை உடைத்து ஒரிஜினல் rugged boy ஆக மரபை உடைத்து புதுக்கவிதையைப் புகுத்தினான். அன்று அவன் அதை செய்யாமல் போயிருந்தால் தமிழ் பேரழிவைச் சந்தித்திருக்கும்.

தமிழோடு தோன்றிய ஏனைய மொழிகள் எல்லாம் கணினி யுகத்தில் தாக்குப்பிடிக்காமல் காணாமல் போனது போல AI புரட்சி தமிழையும் காணாமல் செய்யும் என்றே தோன்றியது. உண்மையில் யார் காப்பார் என்னை என கன்னித்தமிழ் முதுமை தாங்கிய குடுகுடு கிழவியாய் உயிருக்கு ஊசல் ஆடும் நிலையில், டெக்னாலஜி உலகில் நான் காப்பேன் உன்னை என களமிறங்கி இருக்கிறார் பாஜகவின் மாநில செயலாளர் அ. அஸ்வத்தாமன் .

தொழில்நுட்ப புரட்சி இன்னும் 20 ஆண்டுகளில் உலகை தலைகீழாக மாற்ற போகிறது. 1990 காலத்தையும் 2020 காலத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் எப்படி கற்பனை பண்ண முடியாத மாற்றத்தை கண் முன் காண்கிறோமோ அதை விட 100 மடங்கு மாற்றத்தை அடுத்த 20-25 வருடங்களில் காண இருக்கிறோம்.

இந்த மிக மிக இக்கட்டான மிக மிக முக்கியமான இந்த காலக்கட்டத்தில் அமெரிக்காவின் ChatGPT, சீனாவின் Deep seek இவற்றிற்கு இணையாக தமிழ் வழியில் ஒரு தனித்து சுயமாக இயங்கக்கூடிய AI பிளாட்பாரத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் அஸ்வத்தாமன். அவரது இந்த முயற்சி முழு வெற்றிபெறுமேயானால் அமெரிக்காவும், சீனாவும் நம்மை பார்த்து பயம்கொள்ளக் கூடும். இந்தியா எந்த வகையிலும் பிற நாடுகளை விட தாழ்ந்ததில்லை என நிரூபிப்பதோடு தமிழ் மொழி உலகை ஆளும் நாளும் மிக விரைவில் வரக் கூடும்.

தமிழ் என்பது ஏதோ கருத்தை மட்டும் பரிமாறும் சாதாரண ஒலிக்குறியீடோ வெறும் வேலை வாய்ப்பை மட்டும் தரும் மொழியோ அல்ல அது பிரபஞ்ச சக்தியின் மொழி, ஒவ்வொரு உயிரும் பேரின்ப நிலையை அடைய சித்தர்கள் மேம்படுத்திய மொழி. “என்னை நன்றாக படைத்தனன் தன்னை நன்றாக தமிழ் செய்யவே” என்று கூறிய ஆதி சித்தன் திருமூலரும், தமிழே உருவமாய் மாறி யுகம் யுகமாய் காத்து நிற்கும் அகத்தியரும், அந்த சித்தர் கூட்டத்தின் தலைவன் முருகனும் அஸ்வத்தாமனுக்கு துணை நின்று வழி நடத்த வாழ்த்துக்கள்.

  • பாலாஜி

டிரம்புடன் முறிந்த உறவு; புதிய கட்சி தொடங்கும் எலான் மஸ்க்?

1856631 elon musk 5 - 2026
#image_title

‘தி அமெரிக்கன் பார்ட்டி’ என்பதுதான் எலான் மஸ்க் தொடங்க உத்தேசித்துள்ள புதிய கட்சியின் பெயர்! இதனை அவர் அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பெரும் உதவி செய்து தேர்தலில் வெற்றிபெறக் காரணமானவர்களில் ஒருவராக இருந்த தொழிலதிபர் எலான் மஸ்க், இப்போது டிரம்புடன் உறவு கசந்து போனதால், புதிய கட்சி தொடங்கலாமா என ஆலோசித்து வருகிறார். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில்,

அமெரிக்காவில் தற்போதைய சூழலில் புதிய கட்சி தொடங்கலாமா என்று கருத்துக்கணிப்பு நடத்தினேன்; அப்போது நடுத்தர மக்கள் தங்களை பிரதிநிதித்துவப்படுத்த ஒரு புதிய அரசியல் கட்சி தேவை என்று 80 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் எனது கட்சியின் பெயர் ‘தி அமெரிக்கன் பார்ட்டி’ என்று தற்போது அறிவிக்கிறேன்; உண்மையிலேயே அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாக இது இருக்கும் – என்று தெரிவித்துள்ளார்.

  • அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் மோதல் போக்கை கையாண்ட டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் இப்போது புதிய கட்சி தொடங்கி, அமெரிக்கத் தேர்தலில் தனக்கென ஓர் இடத்தைப் பெற முயன்று வருவதாகவே கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்குக்கும் அண்மைக் காலமாக மோதல் ஏற்பட்டு வருகிறது. அமெரிக்க அரசு கொண்டு வந்த வரி மற்றும் செலவு மசோதா காரணமாக டிரம்ப்புக்கும், எலான் மஸ்க்குக்கும் இடையிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி, சமூக ஊடகங்கள் மூலம் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் எலான் மஸ்க், தனது எக்ஸ் வலைதளத்தில் புதிய கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தினார். அதில் அமெரிக்காவில் 80 சதவீத நடுத்தர மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு புதிய கட்சி தேவையா? என்று கேள்வி கேட்டு இருந்தார். இந்தக் கருத்துக்கணிப்புக்கு 80 சதவீத மக்கள் – அதாவது, 56.30 லட்சம் பேர் ‘ஆம்’ என்று பதில் அளித்தனர்.

இதையடுத்து எலான் மஸ்க் அமெரிக்காவில் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தார். மேலும் தான் தொடங்க இருக்கும் புதிய கட்சிக்கு ‘தி அமெரிக்கன் பார்ட்டி’ என்ற பெயரையும் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எலான் மஸ்க் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறி இருப்பதாவது:-

அமெரிக்காவில் தற்போதைய சூழலில் புதிய கட்சி தொடங்கலாமா என்று கருத்துக்கணிப்பு நடத்தினேன். அப்போது நடுத்தர மக்கள் தங்களை பிரதிநிதித்துவப்படுத்த ஒரு புதிய அரசியல் கட்சி தேவை என்று 80 சதவீதம் பேர் கருத்து தெரிவித்து இருப்பது விதி. கட்சியின் பெயரை ‘தி அமெரிக்கன் பார்ட்டி’ என்று சொல்வது நல்ல தொனியாக உள்ளது. உண்மையிலேயே அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாக இது இருக்கும். – என்று தெரிவித்துள்ளார்.

ஆபரேஷன் சிந்தூரில் அக்னிவீரர்கள்!

pm modi speech about operation sindoor - 2026
  • முரு. தெய்வசிகாமணி

அக்னி வீரர்களின் அட்டகாசம்! கொல்லன் வீதியிலேயே ஊசி விற்ற இந்தியா!

இந்திய, பாகிஸ்தான் போரில் பல அருமையான நிகழ்வுகள் நடந்ததும் அது ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்துகொண்டு உள்ளது.

1970 களில் இந்தியா ஸ்வீடனின் போஃபோர்ஸிடம் விமான எதிர்ப்பு பீரங்கிகளை வாங்கியது. அன்றைய காலகட்டத்தில் விமானங்கள் மெதுவாக பறந்ததால், அதை சுடுவதற்கு L70 என்ற பீரங்களை இந்தியா வாங்கியது. அதன் செயல்பாடுகள் மிக சிறப்பாக இருந்தது. அதனால் அதை இந்தியாவில் உற்பத்தி செய்யும் உரிமையை வாங்கி இங்கேயே உற்பத்தியும் செய்தோம்.

ஆனால் போர் விமானங்களின் மேம்பாடுகளாலும், அதன் வேகம் அதிகரிப்பாலும் அந்த டாங்குகள் அதன் இலக்கை அடைவதில் தொய்வு ஏற்பட்டு, அது தேவை அற்றதாகிப் போனது. அதனால் அது அவுட்டேட்டட் என்று அதன் உரிமத்தை சொற்ப விலைக்கு ஸ்வீடனின் ஃபோபார்ஸ் நமக்கு விற்றுவிட்டது.

அது அப்போதைக்கு மேன்யூல் ஆபரேஷனில் இருந்தது, அதை கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டோமேட் செய்து அதை நவீனமாக்கி, அதில் கணினியின் இணைப்புடன் மேம்படுத்தி, அதில் சில அறிவுசார் (Artificial Intelligence) விஷயங்களையும் புகுத்தி அதிநவீனமாக்கிவிட்டது.

சமீபத்தில் பாகிஸ்தான் ஏகப்பட்ட சிறிய, பெரிய ட்ரோன்களை ஏவி, நமது S-400 போன்ற முக்கிய வான் தடுப்பு பேட்டரிகளை வீணடிப்பது என்பது அவர்களது திட்டம். அதாவது ஒரு பேட்டரியின் விலை பில்லியனில் என்றால் அதம் திட்டம் என்ன என்பதை யோசித்தால் புரியும்.

ஆனால் நமது வான்பாதுகாப்பு என்பது நான்றடுக்கு கொண்டதாக மாற்றி அதில் கடைசி அடுக்காக S-400 பயன்படுத்தப்பட்டது. அதுவும் அதன் எடை, வேகம், போன்றவற்றை Artificial Intelligence மூலம் அதை ட்ரெய்ன் செய்து, வித்தியாசப்படுத்தி அதற்கு ஏற்ப தாக்கும் திறனை ஏற்படுத்தி இருந்தது.

அதனால் ஒரு சாதாரண ட்ரோன், சைசில் பெரியதாக இருந்தால் அது சில லட்சங்களில் வாங்கிவிடலாம். ஆனால் அதற்கு கோடிக்கணைக்கில் உள்ள ராக்கெட் ஏவுகணை பயன்படுத்துவது எப்படி முட்டாள்தனமோ, அதை செய்வார்கள் என்று சீனா, பாகிஸ்தான் எதிர்பார்த்தது.

ஆனால் இந்தியா அவற்றை இனம் பிரித்து சரியான கைனெடிக் சிறுரக ஏவுகணைகள் அல்லது L70+ பீரங்கிகளை அல்லது நான்-கைனெடிக் ஆயுதங்களை பயன்படுத்தி அதன் செயல்பாடுகளை எலெக்ட்ரானிக் வார்ஃபேர் மூல குளப்பி அழித்தது.

இதில் நிறைய விஷயங்கள் வீடியோ கேம்போல நவீன L70+ பீரங்கி குண்டுகளை பயன்படுத்தி அழித்தது. அதற்கு.

முந்தைய தலைமுறை இராணுவ வீரர்கள் பொறுத்தமில்லாதவர்கள் என்பதால் அக்னிவீரின் மூலம் இராணுவத்தில் சேர்ந்த பப்ஜி விளையாண்டவர்களை பயன்படுத்தி பாகிஸ்தானின் ட்ரோன்களை விளையாட்டாக நாசப்படுத்தி விட்டது இந்தியா.

அதாவது பாகிஸ்தான் எதிர்பார்த்த பெரிய ராக்கெட்டுகளை பயன்படுத்தாமல், சாதாரண பீரங்கி குண்டுகளை பயன்படுதேதி பெரிய ட்ரோன்கள், ராக்கெட்டுகளை அழித்துவிட்டது. அதுவும் நிறைய ட்ரோன்கள் நான்-கைனெடிக் எனும் எலெக்ட்ரானிக் வார்ஃபேர் மூலம் லட்சங்கள் விலை கொண்ட அந்த குண்டுகள் கூட பயன்படுத்தவில்லை..

அதற்கு மேற்சொன்ன L70 பீரங்கியின் மேம்பாடு அதை தயாரித்த ஸ்வீடன் கம்பெனிக்கு சர்ப்ரைஸை கொடுத்து சபாஷ் சொல்ல வைத்தது மட்டுமல்ல அதை வாங்கவும் தூண்டியது. ஆனால் அதற்கு ஒரு சிக்கல், இப்போது அதை வாங்க வேண்டுமென்றால், அதன் உரிமம் இந்தியாவிடம் உள்ளதால் செலவு அதிகமாகுமே என்று யோசிக்கவைத்துள்ளது. அதாவது கொல்லன் வீதியில் இந்தியா ஊசி விற்கிறது என்றால் மிகையில்லை!

அதுமட்டுமில்லாமல் D4 (Drone, Detect, Deter, Destroy) என்ற வான்பாதுகாப்பும், இந்தியாவில் Make In India மூலமும், நிறைய ஸ்டார்ட்டப்களில் செய்யும் நவீன ட்ரோன் வார்ஃபேர் உற்பட பல விஷயங்கள் உலகை ஆச்சரியத்தில் மட்டுமல்ல, நம் அண்டை எதிரிகளுக்கு பயத்தையும் ஏற்படுத்திவிட்டது.

அதைவிட தைவான், பிலின்பைன்ஸ் போன்று சீனாவால் பாதிக்கப்பட்ட நாடுகள் தீபாவளியே கொண்டடி விட்டது. ஏனென்றால் இந்த போர் என்ற சட்டை மட்டும்தானே பாகிஸ்தாப், அதன் பின்னஅல் இருந்தது சீனாதானே! அதுவும் அவர்கள் சேட்டிலைட் டேட்டா முதல், அவர்கள் டெக்னீஷியன்களே பாகிஸ்தானில் இருந்து இயக்கி இருக்கிறார்கள்.

இதில் அக்னிவீர்கள் இளைஞர்களாக இருப்பதால் இதுபோன்ற லேட்டஸ்ட் புரிதல் சிறப்பாக உள்ளது. ஆனால் அறிவியல் மாற்றங்கள் வேகமாக நடப்பதால் அவர்களே சில வருடங்களுக்கு பிறகு அவுட் டேட் ஆகிவிடுவார்கள். அதனால்தான், அடுத்த சில ஆண்டுகளில் (5?)அவர்கள் பணி முடிந்து 75% ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று வெளியே வந்துவிடுவார்கள்.

அப்போது அவர்களுக்கு நல்ல ஓய்வூதியம் கிடைக்கும். அவர்களுக்கு தொழிலும் தெரிந்திருப்பதால், அவர்கள் ஆயுத தொழிற்சாலைகளில் புதிய ஆயுத சோதனைகளை செய்வதற்கு மிகவும் தகுதியுடையவர்கள் ஆகிவிடுவார்கள். அவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலையும் கிடைக்கும்.

அதே சமயம் புதியவர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார்கள். இப்படி ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். அதனால் இந்தியாவிற்கு ஒரு போர் ஏற்பட்டு அதிக இராணுவ வீரர்கள் தேவைப்பட்டால், ஏற்கனவே நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட இவர்களை இந்திய ராணுவம் பயன்படுத்திக்கொள்ளும்..

புதிய டெக்ன்லாஜியை, அதில் ஏற்படும் மாற்றங்களை பயன்படுத்த இளைஞர்கள் தேவை. அதனால்தான் எந்த ராணுவத்தின் சராசரி வயது குறைவாக உள்ளதோ அதன் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும். அக்னிவீரருக்கு முன்பு நமது இராணுவத்தின் சராசரி வயது மிகவும் அதிகமாக இருந்தது. இப்போது அது வெகுவாக குறைய தொடங்கி உள்ளது.

அதுமட்டுமல்ல, இராணுவத்தின் ஒரு மிகப்பெரிய செலபினம் என்பது ஓய்வூதியம். ஆனால் இந்த அக்னிவீர்களுக்கு ஐந்தாண்டு பணி முடிந்தபின்னர் ஒரு பெரிய தொகை கொடுக்கப்படுகிறது, ஆனால் ஓய்வூதியம் இல்லை என்பதால் வருங்காலத்தில் இராணுவத்தின் ஓய்வூதிய செலவு தொகை வெகுவாக குறையும் என்கிறார்கள்.

ஆம், 25% அக்னி வீரர்கள் அல்லது தேவையான அளவிலான சிறந்தவர்களை இராணுவம் தொடர்ந்து நீண்ட பணியில் எடுத்துக்கொள்கிறது என்றால், அவர்கள் பணி ஓய்வுக்கு பின் அவர்களுக்கு மட்டும் ஓய்வூதியம் கொடுக்க வேண்டும் என்பதால் அடுத்த 30 ஆண்டுகளில் இந்திய ராணுவத்தின் ஓய்வூதிய செலவினம் பெருமளவில் குறையும்.

எனவே இந்தியாவின் பாகிஸ்தானுடான போரில், இந்தியாவின் போர் யுக்திகள் மட்டுமல்ல, அதன் பொருளாதாரா யுக்திகள் இப்போது நமது எதிரியான சீனா உற்பட மேற்கத்திய நாடுகளால் உற்று பார்க்கப்பட்டு ஆராயப்படுகிறது.

இந்த இந்திய- பாகிஸ்தான்(சீன) போர் உலகிற்கு பல புதிய யுக்திகளை கடந்த 10 ஆண்டுகளாக புகுத்தியது வெளிவர துவங்கியுள்ளது.

இந்தியா பற்றி தெரிந்ததாலும், இதன் முக்கியத்துவம் அறிந்ததால், சீனா, அக்னிவீர் வந்தபோது அதற்கு எதிராக போராட கோடி கோடியாய் கொட்டி போராட வைத்தது ஏன் என்பது நமக்கு இப்போது புரியுமல்லவா? எனவே இந்திய அரசின் நிலைப்பாடுகளை எமோஷனால பார்ர்க்க கூடாது.

இந்தியா இந்த 88 மணி நேர போரில் 88 ஆண்டுகளாக பயன்படுத்திய போர் யுக்திகளை மாற்றி, ஒரு மகத்தான சாதனையை எல்லா துறைகளிலும் செய்தது என்பதை நாம் மட்டுமல்ல உலகமே புரிந்துகொள்ள தொடங்கி இருக்கிறது.

அதன் விளைவாக மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்கள் குப்பைகளாக மாற துவங்கிவிட்டது. ஆனால் அந்த குப்பை ஆயுதங்களின் உரிமத்தை இந்தியா கேட்டால் கொடுக்குமா என்றால், போஃபோர்ஸ் அனுபவத்தில் சந்தேகம் என்றாலும், அவர்கள் பொருளாதார நிலை, விற்கும் நிலையில் நிறுத்திவிட்டது.

காலம் ஒரு நாள் மாறும், கவலைகள் யாவும் தீரும்! இப்போது வண்டியில் ஓடம்!

முருகன் மாநாடு கண்டு ஏன் இந்த வயிற்றெரிச்சல்?

kadeswara subramaniam hindu munnani - 2026

இந்துக்களின் எழுச்சி கண்டு, விடுதலைச் சிறுத்தை, காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் பதட்டம் அடைந்துள்ளதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்ரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

இந்து முன்னணி ஜூன் 22-ல் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்துகிறது. மாநாட்டில் லட்சக்கணக்கானோர் ஒன்றினைந்து கந்த சஷ்டி கவசம் படிக்க இருக்கிறார்கள்.

முருகபக்தர்கள் கந்த சஷ்டி கவசம் படித்து மாநாடு நடத்துவது இந்து விரோத காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக போன்றோருக்கு அரசியல் மாநாடாகத் தெரிகிறது.

கடந்த வருடம் கடவுள் இல்லை, முருகன் இல்லை, விநாயகர் இல்லை என்று இந்து கடவுள், இந்து வழிபாடு மட்டும் இல்லை என்று போலி நாத்திகம் பேசும் திமுக, முத்தமிழ் முருகன் மாநாடு என்று தங்கள் புகழ்பாடியபோது அது அரசியல் மாநாடாகத் தெரியவில்லையா?

முத்தமிழ் முருகன் மாநாடு என்று தலைப்பிட்டு முன் வரிசையில் முஸ்லீம்களை அமர வைத்து மாநாடு நடத்துவது எந்த வகையிலான மாநாடு என பக்தர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்களுக்கு விருது வழங்கி திமுக சிறப்பித்த போது, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக ஆகியோருக்கு அரசியலாகத் தெரியவில்லையா?

அரசியலில் ஈடுபடாத சமூக இயக்கமான இந்து முன்னணி நடத்தும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அரசியல் சாயம் பூச முற்படுவதேன்?

தினமும் இந்துக்களின் வழிபாட்டை விமர்சனம் செய்து கொண்டிருக்கும் போலி மதசார்பற்ற கட்சிகளின் கயமைத்தனத்தை உணர்ந்து, மாநாடு மூலம் இந்துக்கள் விழித்துக் கொள்வார்களே என்ற பயமும் பதட்டமும் இந்து விரோத கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக தலைவர்களின் கருத்துகள் மூலம் அப்பட்டமாகத் தெரிகிறது.

நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படவில்லை, திருப்பரங்குன்றம் மலையில் அசைவம் தின்று அக்கிரமம் செய்தபோதும், கந்த சஷ்டி கவசம் அவதூறு செய்யப்பட்ட போதும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிகவினர் எங்கே போனார்கள்?

இப்போது பக்தர்கள் மாநாடல்ல, அரசியல் மாநாடு என்று கருத்து சொல்பவர்கள் யாருக்கும் அப்போது இந்துக்களின் மன குமுறல் இவர்களுக்கு கேட்கவில்லையே ஏன்?

முருக பக்தர்கள் விழிப்புணர்வு பெற்று மாநாடு நடத்துகிறார்கள் என்றவுடன் அதற்கு அரசியல் சாயம் பூசி, திசை திருப்பி இந்துக்களை குழப்ப காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக போன்ற கட்சி தலைவர்கள் முயல்கிறார்கள். இவர்களின் கருத்துக்களால் இந்துக்களிடையே மிகுந்த எழுச்சி ஏற்பட்டு வருவதை கண்கூடாகக் காண முடிகிறது.

மேலும் இந்துக்களின் எழுச்சி அந்தக் கட்சிகளுக்கு பயத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளதை அவர்களின் கருத்துகள் வெளிப்படுத்துகிறது என்பதை மக்களும், பக்தர்களும் உணர்ந்துள்ளார்கள்.

எனவே இதுபோன்று இந்துக்களை திசைத்திருப்பும் தீய சக்திகளுக்கு பாடம் புகட்ட இந்துக்கள் தன்னெழுச்சியாக மதுரை மாநாட்டிற்கு வாருங்கள் என அறைகூவல் விடுக்கிறோம்.

ஆகவே எதிர்வரும் ஜூன் 22, முருக பக்தர்கள் மாநாடு முருகனின் அருளால் மாபெரும் வெற்றி பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

திருவனந்தபுரம் பத்மநாப ஸ்வாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

thiruvananthapuram ananthapadmanabhaswamy temple - 2026

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் குடமுழுக்கு கோலாகலம்!275 ஆண்டுக்கு பின் தற்போது 2025ல் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது.

கடந்த 1750ஆம் ஆண்டுக்குப் பிறகு, அதாவது 275 ஆண்டுகளுக்குப் பின், கேரள மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் குடமுழுக்கு இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.

கேரளா தலைநகர் திருவனந்தபுரம் மையப் பகுதியில் கிழக்கு கோட்டையில் அனந்த பத்மநாபசுவாமி கோயிலில், 275 ஆண்டுகளுக்குப் பின்னா் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

இதில், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தர்கள் மீது கலச நீர் தெளிக்கப்பட்டது.

திருவனந்தபுரத்தின் அடையாளமாக விளங்குகிறது பத்மநாபசுவாமி கோயில். இது உலகப் புகழ்பெற்ற கோயிலும் ஆகும். இந்தக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) காலை 7.40 முதல் 8.40 மணிக்குள் குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 2 ஆம் தேதி பிரசாதசுத்தி, 3 ஆம் தேதி பிராயசித்த ஹோம கலசம், 5 ஆம் தேதி சாந்தி ஹோம கலசம், 6 ஆம் தேதி திரவிய திவ்ய கலசமும் நடைபெற்றது.

இன்று அதிகாலை பிரதிஷ்டா பூதபலி நடைபெற்றது. தொடா்ந்து, குடமுழுக்கு வில்வமங்கலம் சாமியாா் மற்றும் மூத்த போற்றிமாா் தலைமையில் நடைபெற்றது.

கொல்லம் – கோவை ரயில்! பயணிகளுக்கு ‘இனிப்பு’ அளித்த அமைச்சர்!

railway news - 2026
#image_title

கேரளா தமிழகத்தில் ஆன்மீக சுற்றுலா பயணிகள் நலன் கருதி ரயில் பயண வசதிகளை அதிகரிக்கும் ஒரு பகுதியாக, கோயம்புத்தூர் -கொல்லம்- கோயம்புத்தூர் புதிய ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்ததால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த கோரிக்கை பரிசீலனையில் இருப்பதாக உறுதிப்படுத்தியதால், இந்த வழித்தடத்தில் பயணிப்பவர்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

கொல்லத்திலிருந்து கோயம்புத்தூருக்கு புனலூர், மதுரை மற்றும் பழனி வழியாக இந்த ரயில் சேவையை நடத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது. திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தின் கீழ் நடைபெற்ற எம்.பி.க்கள் கூட்டத்தில், மாவேலிக்கரை எம்.பி. கொடிக்குனில் சுரேஷ் இந்த ரயில் சேவையின் தேவையை கடுமையாக எழுப்பினார்.

அதைத் தொடர்ந்து, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்வுக்கு அவர் ஒரு கடிதம் கொடுத்தார், மேலும் இந்த கோரிக்கை தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படும் என்று அமைச்சர் பதிலளித்தார்.

இந்த பதிலில், கொல்லம்-பழனி-கோயம்புத்தூரு வழித்தடத்தில் புதிய ரயில் சேவையைத் தொடங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரிவான ஆய்வு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

இந்த ரயில் சேவை யதார்த்தமாக மாறுவதால், கொல்லம், புனலூர், தென்காசி, மதுரை, பழனி, கோயம்புத்தூர் போன்ற பகுதிகளுக்கு இடையிலான பயண உறவு வலுவடையும்.

இந்த ரயில் சேவை நிஜமாகும்போது, ​​மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் பழனி முருகன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு இது ஒரு பெரிய நிம்மதியாக இருக்கும். கேரளாவிலிருந்து வரும் பக்தர்களுக்கு, குறிப்பாக கொல்லம், ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களிலிருந்து வரும் பக்தர்களுக்கு இந்த பாதை மிகவும் முக்கியமானது, ஏனெனில் தற்போது இந்த திசையில் நேரடி ரயில் சேவைகள் குறைவாகவே உள்ளன.

இந்த பாதையில் ரயில்கள் கிடைப்பதால், தமிழ்நாட்டின் முக்கிய புனிதத் தலங்களுக்கு பயணம் செய்வது எளிதாகவும் வசதியாகவும் மாறும். மேலும், இது கேரளாவை கோயம்புத்தூர் போன்ற வர்த்தக-தொழில்துறை மையத்துடன் இணைப்பதால், இந்த ரயில் வணிக பயணிகள் மற்றும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஜி7 மாநாடு: பொருளாதாரத்தில் மீண்டு வரும் பாரதத்தின் பங்கேற்பு!

pm modi in rajastan pikaneer - 2026

கனடாவில் ஜி7 மாநாடு. இது இப்போது பேசு பொருளாகியிருக்கிறது இந்தியாவில். காரணம், இதனுள்ளே பொதிந்திருக்கும் அரசியல். முக்கியமாக காங்கிரஸ் செய்த அரசியல்.

இந்த ஆண்டு ஜி7 கூட்டத்தை நடத்தும் கனடா, பாரதப் பிரதமர் மோடிக்கு அழைப்பு கொடுக்காமல் அசிங்கப்படுத்தியது” என்று காங்கிரஸ் ஒரு புறம் புரளி கிளப்பியது. மறுபுறம் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், “இந்த ஆண்டு ஜி7 கூட்டத்தை கனடா நடத்துவதால் அதை பாரதப் பிரதமர் மோதிஜி புறக்கணித்துள்ளார்” என்று பாஜக., சமூகத் தளங்களில் பகிர்ந்து வர, ஜி7 கூட்டத்தை வைத்து ஓர் அரசியல் இந்தியாவில் பரபரப்பானது.

காங்கிரஸ் இவ்வாறு இந்த விஷயத்தைப் பேசிய போதே, அதில் சர்வதேச அரசியல் பொதிந்திருப்பதை இந்தியாவில் பலரும் புரிந்து கொண்டனர். காரணம், டீப் ஸ்டேட். அதற்கேற்ப, திடீரென கனடா பிரதமர், பாரதப் பிரதமரை தொலைபேசியில் அழைத்து, அவரது மறுமொழிக்காகக் காத்திருந்து, ஜி7 மாநாட்டுக்கான அழைப்பை விடுத்ததற்கு கனடாவின் இடதுசாரி ஊடகங்கள் டீப் ஸ்டேட் வகையறாவின் குரலை எதிரொலித்தன.

கனடாவில் இடதுசாரி ஊடகங்கள், டீப் ஸ்டேட்டின் கையாளாக கனடாவின் புது பிரதமராக அமர்த்தப் பட்டிருக்கும் கார்னேயிடம், “மோடி இங்கே நிஜ்ஜர் உள்ளிட்டோரை இவ்வுலகில் இருந்து அனுப்பி வைத்த குற்றச்சாட்டு இருக்கும் போது அவரை ஏன் அழைக்கிறீர்கள்?” என்று கேட்டன.

அதற்கு கனடா பிரதமர், “சட்டப்படி விசாரணை நடந்து கொண்டிருப்பதால் அது பற்றி நான் பேச மாட்டேன். மேலும் பாரதம் உலகின் நான்காவது பெரிய பொருளாதாரம். அதைப் புறக்கணித்து ஜி7 நடத்த முடியாது” என்றார். தொடர்ந்து கேள்விகள் எழுந்ததால், “இது என் முடிவில்லை. இது ஜி7இன் பிற உறுப்பு நாடுகளின் முடிவு” என்று பதிலளித்து, பத்திரிக்கையாளர் சந்திப்பை ஒருவாறு முடித்துக் கொண்டார்.

இதனிடையே, நேற்று பாரதப் பிரதமர் மோடி தன் எக்ஸ் தளப் பக்கத்தில், “கனடா பிரதமர் அழைப்பை ஏற்று ஜி7ல் கலந்து கொள்கிறேன்” என பதிவு செய்தார். உண்மையில், இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதால் பாரதத்துக்கு ஏதேனும் பலன் விளையாது என்று நினைத்திருந்தால், நிச்சயம் பிரதமர் மோடியே இந்த அழைப்பை நிராகரித்திருப்பார்.

இந்தப் பின்னணியில், இதனுள்ளே பொதிருந்திருக்கும் அரசியலைச் சற்றே பார்க்கலாம். 2025ல் கனடாவில் நடைபெறவுள்ள ஜி7 மாநாட்டுக்கு இந்திய பிரதமர் மோடியை அழைப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. தொடக்கத்தில் அமைதியாக இருந்துவிட்டு, திடீரென இந்த அழைப்பு வருவது போல் தோன்றினாலும், இதன் பின் அரசியல், ராஜதந்திர, புவிசார் அரசியல் காரணங்கள் இருப்பதை உணர முடிகிறது. கனடா பிரதமரே சொன்னது போல, இதை பிற உறுப்பு நாடுகள் வலியுறுத்துகின்றன என்று பார்க்கும் போது, மோடியின் வருகையை முக்கியத்துவம் வாய்ந்ததாக அந்நாடுகள் கருத சில காரணங்கள் உள்ளதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

கனடாவில் காலிஸ்தானி பிரிவினைவாத இயங்களின் வளர்ச்சி, அவற்றைக் கட்டுப்படுத்த இந்தியா எத்தனையோ முறை கேட்டுக் கொண்டும் கண்டு கொள்ளாமல் உள்ளூர் அரசியலை கருத்தில் கொண்டு கனடா செயல்பட்டதும், 2023ல் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றங்களும் இரு நாட்டு உறவுகளில் பின்னடைவை ஏற்படுத்தியது.

எனவே கனடாவில் நடக்கும் இந்த ஜி7 மாநாட்டுக்கு இந்தியாவிற்கு கனடா அழைப்பு விடுக்கவில்லை என்ற ரீதியில் சொல்லப்பட்டாலும், திடீரென கனடா பிரதமர் மார்க் கார்னி தொலைபேசி மூலம் மோடியைத் தொடர்பு கொண்டு ஜி7 மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார். இது இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்துவதற்கு ஒரு முயற்சியாகக் கருதப்படுகிறது. இந்த அழைப்பு, கனடாவின் புதிய தலைமையின் கீழ் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மீட்டெடுக்கும் முயற்சியாக இருக்கலாம் என்றே கருத்து நிலவுகிறது.

இந்தியா ஜி7 உறுப்பு நாடாக இல்லாவிட்டாலும், 2019 முதல் தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக ஜி7 மாநாடுகளில் பங்கேற்று வருகிறது. இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரம், உலகளாவிய தெற்கு நாடுகளின் (Global South) தலைமைத்துவம், புவிசார் அரசியல் செல்வாக்கு ஆகியவை இந்த அழைப்பிற்கு முக்கிய காரணங்களாக உள்ளதாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவில் காங்கிரஸ் மேற்கொண்ட விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதத்தில் இந்த அழைப்பு இருந்ததால், பிரதமர் நரேந்திர மோடி மீது வைக்கப்படுவது போல் தோற்றம் அளித்தாலும், நாட்டின் நற்பெயர் மீதே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வைத்துள்ள எதிர்மறை விமர்சனம் முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, பிரதமர் மோடிக்கு உள்ள உலகளாவிய செல்வாக்கு, அவரைப் புறக்கணித்து விட்டு இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்த இயலாது என்ற நிலைமையைக் கொண்டுவந்துள்ளது. 2024ல் நடைபெற்ற ஜி7 மாநாட்டில், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, மற்றும் பிற தலைவர்களுடன் பிரதமர் மோடி இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். மேலும், பிரதமர் மோடி உலக அரங்கில் காலநிலை மாற்றம், டிஜிட்டல் தொழில்நுட்பம், உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளில் இந்தியாவின் பங்களிப்பை முன்னிலைப்படுத்தி வருவதால், உலக அளவிலான செல்வாக்கு அவருக்கு இருப்பதை மறுக்க முடியாது.

ஜி7 மாநாடுகள் பெரும்பாலும் உறுப்பு நாடுகள் மட்டுமின்றி, உலகளாவிய தெற்கு நாடுகளையும் சிறப்பு அழைப்பாளர்களாகக் கொண்டிருக்கின்றன. இது உலகளாவிய பிரச்னைகளுக்கு ஒரு பரந்த கண்ணோட்டத்தை அளிக்கின்றது.

உலகம் எதிர்நோக்கும் பிரச்னைகளான பருவநிலை மாற்றம், உணவுப் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும், ஜனநாயக மதிப்புகள் போன்ற முக்கிய விவாதங்கள் ஜி7 மாநாட்டில் மேற்கொள்ளப்படும். இவற்றில் இந்தியா தனது தனித்துவமான அனுபவங்களையும், தீர்வுகளையும் பகிர்ந்து கொள்ள முடியும்.

மோடி இந்த மாநாட்டில் பங்கேற்பதன் மூலம், இந்தியா-கனடா உறவுகளை மேம்படுத்துவதற்கும், இந்தியாவின் உலகளாவிய அந்தஸ்தை உயர்த்துவதற்கும் உதவக்கூடும். மேலும், உலகளாவிய தெற்கு நாடுகளின் கருத்துகளை ஜி7 மாநாட்டில் முன்னிலைப்படுத்த மோடியின் வருகை முக்கியம் என்பதை பிற உறுப்பு நாடுகள் எண்ணியிருக்கின்றன.

சுதந்திரத்துக்குப் பின் மீண்டு வரும் இந்தியாவின் பொருளாதாரம், மற்றும் ஜி7 நாடுகளுடனான வர்த்தக உறவுகள், மோடியின் பங்கேற்பை முக்கியமானதாக மாற்றியிருப்பதை அரசியல் விமர்சகர்கள் முன்வைக்கின்றனர். இந்தியா வளர்ந்து வரும் நாடல்ல, பொருளாதாரத்தில் மீண்டு வரும் நாடு என்பதை உலகம் உணர்ந்து கொள்ள பிரதமர் மோடியே தனித்துவ அடையாளமாகத் திகழ்கிறார் என்பது, நம் நாட்டிற்கு பெருமை சேர்ப்பதே!

ஆன்மிக மாநாட்டை கொச்சைப் படுத்தும் ‘அரசியல்வாதி’ சேகர்பாபு!

kadeswara subramaniam hindu munnani - 2026

அமைச்சர் சேகர் பாபுவின் பொறுப்பற்ற பேச்சை வன்மையாக கண்டிப்பதாக இந்து முன்னணி தெரிவித்துள்ளது. இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது…

கடந்த சில நாட்களாக அமைச்சர் சேகர் பாபு இந்து முன்னணி நடத்தும் முருக பக்தர்கள் மாநாடு குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் புலம்பித் தள்ளுகிறார். அத்துடன் அவர் கோவில் நிதியில் இருந்து நடத்திய முத்தமிழ் முருகன் மாநாட்டை இதனுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார்.

இது சங்கிகள் மாநாடு, அரசியல் மாநாடு, மக்களை பிளவுபடுத்தும் மாநாடு என்று விதவிதமாகக் கூறி உண்மையான முருக பக்தர்கள் இதற்கு போக மாட்டார்கள் என அவர் பேசுகிறார்.

இவர் பேசுவதைப் பார்த்தால் இந்து முன்னணி மாநாடு வெற்றிகரமாக நடக்கும்போது இவரது அமைச்சர் பதவி ஆட்டம் கண்டுவிடும் என அவர் அச்சப்படுவதாகத் தெரிகிறது.

இந்து முன்னணி அரசியல் கட்சி இல்லை. இந்து முன்னணி எந்தத் தேர்தலிலும் போட்டியிடாது. எனவே நாம் நடத்துவது ஆன்மிக மாநாடு என்ற புரிதல் கூட அவருக்கு இல்லை.

அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் நேரில் அழைப்பு விடுத்துள்ளோம். குறிப்பாக திமுகவில் இருக்கும் மூத்த அமைச்சர்கள் பலரையும் சந்தித்து அழைப்பு விடுத்தோம் என்பதை சேகர் பாபு அறிவாரா? தமிழக முதல்வர் அவர்களிடமும் அழைப்பிதழ் அளித்து வரவேற்க நேரம் கேட்டுள்ளோம்.

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல் சீமான் வரையிலான அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் நேரில் அழைப்பிதழ் தந்து அழைத்துள்ளோம். அந்தப் பட்டியலை முருக பக்தர்கள் மாநாடு முகநூலில் அனைவரும் காணலாம்.

முருக பக்தர்கள் மாநாட்டுக் குழு சார்பாக அரசியல் தலைவர்கள், ஆன்மிகப் பெரியோர்கள், சமுதாயத் தலைவர்கள், ஊடக அதிபர்கள், காவடி, பால்குட, பாதயாத்திரை முருக பக்தர்கள் குழுவினர் ஆகியோரையும் சந்தித்து மாநாட்டுக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளோம். தமிழகத்தில் ஒரு கோடி குடும்பங்களுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார்கள்.

கோவில் நிதியில் நடத்திய முத்தமிழ் முருகன் மாநாட்டை நாம் விமர்சிக்க விரும்பவில்லை. அதேசமயம் அதில் தமிழக முதல்வர்கூட கலந்து கொள்ளவில்லையே ஏன்? அது எவ்வாறு நடந்தது என்ற விமர்சனங்கள் சமூக ஊடகங்களில் இப்போதும் வைரலாகி வருகிறது. ஆனால் அதனை திமுக ஆட்சியின் சாதனையாக சேகர் பாபு பில்டப் செய்து விளம்பரப்படுத்தி வருவதுதான் வேடிக்கையாக உள்ளது.

இந்து முன்னணி நடத்தும் முருக பக்தர்கள் மாநாடு சிறப்பாக நடக்கும்போது நாம் நடத்திய மாநாட்டை ஒப்பிட்டு விமர்சனம் எழுந்தால், முதல்வர் தன்மீது கோபப்படலாம் என இப்போதே சேகர்பாபுவுக்கு அச்சம் வந்துவிட்டது. இதனாலேயே அவர் போகும் இடமெல்லாம் முருக பக்தர்கள் மாநாட்டை பற்றி குறைகூறி வருகிறார்.

அதேசமயம் கோவில் நிர்வாகத்தை தன் கையில் வைத்திருக்கும் அமைச்சர் சேகர் பாபு சென்னிமலை மற்றும் திருப்பரங்குன்றத்தில் வேற்று மதத்தினர் பிரச்சினை ஏற்படுத்திய போது செயலற்று இருந்தார் என்பதையும் மக்கள் நன்கு அறிவார்கள்.

இந்துக்கள் தங்களது உரிமையை, உணர்வுகளை வெளிப்படுத்தினால் அது அரசியலாக இவருக்குத் தெரிகிறது. அதுவே வேற்று மதத்தினரின் பேச்சை ஜனநாயகத்தின் குரலாக இவர் பாராட்டுகிறார். இவ்வாறு பேசுவது அவரது மனக் கோளாறை வெளிக்காட்டுவதாகவே தெரிகிறது.

மதுரையில் ஜூன் 22ஆம் தேதி நடக்க இருக்கிற முருக பக்தர்கள் மாநாடு முழுக்க முழுக்க ஆன்மிக, இந்து உணர்வு மாநாடு. இதில் அனைத்து ஆன்மிக பக்தர்களும் கலந்து கொள்வார்கள். அரசியல் முதலான அனைத்து வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டு அனைவரும் கலந்து கொள்ள மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர்.

சுமார் ஐந்து லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வதன் மூலம் தமிழகத்தின் ஆன்மிக சாதனை மாநாடாக முருகன் அருளால் இந்த முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது.

இந்த அறிக்கையின் மூலம் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். எல்லா வகையிலும் அனைவரும் இம்மாநாட்டிற்கு ஒத்துழைப்பு நல்கி முருகனின் பேரருளைப் பெற வேண்டுகிறோம்.