Home Blog Page 72

மதுரை கோயில்களில் ஆடிப்பூரம்: அம்மன்களுக்கு வளையல் காப்பு!

madurai adipuram valaikappu utsav - 2026

மதுரை கோயில்களில் ஆடிப்பூரம்: அம்மன்களுக்கு வளையல் காப்பு: அன்னதானம்!

மதுரை பகுதி கோயில்களில் திருவாடிப்பூரத்தை ஒட்டி, கோயில்களில் அம்மனுக்கு, பக்தர்களால் வளையல் காப்பு அணிவிக்கப்பட்டது. இதையொட்டி, மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர், சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில் ரவி பட்டர், வராஹி, துர்க்கை, மீனாட்சி,, மகாலட்சுமிக்கு சிறப்பு அபிஷேகங்களை செய்து, அம்மனுக்கு வளையல் காப்பு அணிவித்தார். கோயில் நிர்வாகிகள் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம், வளையல்கள், திருமாங்கல்ய கயிறு வழங்கப்பட்டது.

மதுரை வைகை காலனி கிழக்கு பகுதியில் உள்ள சக்தி மாரியம்மன் ஆலயத்தில், பட்டர் கோபாலகிருஷ்ணன், அம்மனுக்கு சிறப்பு பூஜைகளை செய்தார்.
மதுரை யாரணைக்குழாய் முத்து மாரியம்மன் ஆலயத்தில், அர்ச்சகர் மணிகண்டன், பூஜைகளை செய்து வளையல்களை அம்மனுக்கு அணிவித்தார். கோயில் தலைவர் முருகன், செயலர் சிவா, பொருளாளர் சந்திரன் ஆகியோர்கள் பல வகை உணவுகளை பிரசாதமாக வழங்கினர்.

மதுரை தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயத்தில், அம்பாள், துர்க்கை ஆகியோருக்கு சிறப்பு பூஜைகளை, கோயில் நிர்வாகிகள் செய்தனர். தலைவர் சுதர்சன, நிர்வாகிகள் இந்திரா, கல்யாணி, திலகம், மீனாட்சி, சிகாமணி ஆகியோர்கள், பக்தர்களுக்கு பிரசாதங்களை வழங்கினர்.

madurai valaikappu adipuram - 2026

சோழவந்தான் – நாச்சிகுளம் காளியம்மன் கோவில் ஆடிப்பூரம்; அம்மன் மற்றும் கர்ப்பிணி பெண்கள் வளைகாப்பு அணிந்து கொண்டாட்டம்!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாச்சிகுளம் காளியம்மன் கோவில் தெருவில் உள்ள காளியம்மன் , பகவதி அம்மன் விநாயகர், நாகம்மாள் கோவில்களில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மன்களுக்கு பால் தயிர் வெண்ணெய் உள்ளிட்ட அபிஷேகங்கள் செய்து வளையல் அணிவித்து வழிபாடு நடத்தப்பட்டது‌. தொடர்ந்து கிராமத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணிவித்து வளைகாப்பு நடத்தப்பட்டது நெகிழ்ச்சியாக இருந்தது .

இதில் நாச்சிகுளம் மற்றும் சுற்று வட்டார பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது ஏற்பாடுகளை நாச்சிகுளம் கிராமத்தினர் மற்றும் இளைஞர் எழுச்சி மன்றத்தினர் செய்திருந்தனர்.


adipooram valaiyal vizha - 2026

காரியாபட்டி கபால காளீஸ்வரி ஆலயத்தில் ஆடிப்பூரம் சிறப்பு பூஜை!

காரியாபட்டி அருகே, அம்மன் ஆலயங்களில் ஆடி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கரியப்பட்டி கபால காளியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரம் முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக, காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் பிரசாதம் வளையல்கள் வழங்கப்பட்டது. முடுக்கன் குளம் சிவகாம சுந்தரி ஸமேத அம்பலவாணர் கோவிலில் ஆடிப்பூரம் சிறப்பு பூஜை நடை பெற்றது. அம்மனுக்கு, வளையல் அலங்காரம் செய்யப் பட்டு பூஜை நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு
அன்னதானம் வழங்கப் பட்டது.


ஸ்ரீ வியாச பூஜா குரு வியாச பூஜை மகோத்ஸவம் 2025

வியாச பூஜை மஹோத்சவ விழா சோழவந்தான் ஒற்றை அக்ரஹாரத்தில் உள்ள ஸ்ரீ மலையாளம் கிருஷ்ணய்யர் வேத சாஸ்திர பாடசாலையில், பாடசாலை, அத்யாபகர் வரதராஜ பண்டிட் தலைமையில் பல வேத விற்பன்னர்கள் மற்றும் பாடசாலை மாணவர் களாலும் அதி விமர்சையாக நடைபெற்றது.

அன்று காலை 09.00 மணிக்கு குரு வந்தனம், விக்னேஷ்வர பூஜை, புண்ணியாகவாசனம், வேத வியாசர் ஆவாஹன அர்ச்சனைகள், வேத பாராயணங்கள், விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணங்கள் , அதனை தொடர்ந்து மஹா கணபதி ஹோமம், விஷ்ணு சஹஸ்ர நாம ஹோமம், புருஷ சுக்த ஹோமம், ஸ்ரீ சுக்த ஹோமம், வியாச காயத்ரி ஹோமம், தன்வந்திரி ஹோமம் ,மஹா பூர்ணாஹுதி, புணர் அர்ச்சணை, மஹா தீபாராதனை, மந்த்ர புஷ்பம், சதுர் வேத பாராயணம், நாத கீத வாத்திய உபச்சாரங்கள் , தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

சபரிமலை நிறைபுத்தரிசி பூஜைக்கான நெற்கதிர் வாகனம்; செங்கோட்டை அருகே வரவேற்பு!

niraiputharisi urvalam near sengottai - 2026

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை நிறைபுத்தரி பூஜை நடைபெறுவதை முன்னிட்டு அச்சன்கோவிலிருந்து புளியரைக்கு வந்த நிறைபுத்தரி நெற்கதிர் வாகனத்துக்கு கடையநல்லூர் அதிமுக எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி தலைமையில் ஐயப்ப பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மலையாள புத்தாண்டான சிங்கம் மாத பிறப்பிற்க்கு முன் கற்கடக மாதத்தில நிறைபுத்தரி பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த பூஜையில் புதிய நெற்கதிர்களை வைத்து நிறைபுத்தரி பூஜை செய்து அந்த நெற்கதிர்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள்.

இந்தநிலையில், இந்த ஆண்டு நிறைபுத்தரி பூஜை நாளை நடைபெறுகிறது. இதனையொட்டி, சபரிமலைக்கான நிறைபுத்தரி கோஷயாத்திரை அச்சன்கோவிலில் இருந்து இன்று அதிகாலை 4.30 மணிக்கு தேவசம்போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் தலைமையில், அச்சன்கோவில் திருஆபரணப் பெட்டி கமிட்டி தமிழக பொறுப்பாளர் AGS. ஹரிஹரன் குருசாமி மற்றும் தேவசம் போர்டு அதிகாரிகள் மேற்பார்வையில் நிறைபுத்தரி நெற்கதிர் கட்டுக்களை அலங்கரிக்கப்பட்ட திருவாபரணப்பெட்டி வாகனத்தில் ஏற்றிக் கொண்டு ஊர்வலமாக புறப்பட்டது.

இந்த வாகனம் சபரிமலைக்கு செல்லும் வழியில் செங்கோட்டை அருகே உள்ள புளியரையில் உள்ள பண்பொழி திருமலைக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட நெற்களஞ்சியம் வளாகத்துக்கு இன்று காலை வந்தது. அப்போது நிறைபுத்தரி நெற்கதிர்களை ஏற்றிக் கொண்டு வந்த வாகனத்துக்கு கடையநல்லூர் அதிமுக எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி தலைமையில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட தமிழக ஐயப்ப பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து காலையில் நடந்த சிற்றுண்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் அங்கிருந்து அந்த வாகனம் கோட்டைவாசல் கருப்பசுவாமிகோயில், ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயில், புனலூர் கிருஷ்ணர் கோயில் உள்ளிட்ட கோவில்களுக்கு ஊர்வலமாக சென்று அந்தந்த கோவிலுக்கான நிறைபுத்தரி நெற்கதிர்களை ஒப்படைத்து விட்டு பம்பை வழியாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றடைகிறது.

niraiputharisi poojai in achankoil - 2026

முன்னதாக, சபரிமலை உள்ளிட்ட கேரளாவின் பல்வேறு கோயில்களில் நிறை புத்தரிசி பூஜைக்காக அச்சன்கோவிலில் இருந்து இன்று அதிகாலை நெற்கதிர்கள் கொண்டு செல்லப்படுவதை முன்னிட்டு, நேற்று திங்கள் கிழமை இரவு நெற்கதிர்களை கொண்டு செல்லும் திருவாபரண வாகனத்திற்கு அச்சன்கோவில் மேல்சாந்தி பூஜை செய்தார்.!

கருட, நாக பஞ்சமி! சிறப்புகளும் வழிபாட்டின் பலன்களும்!

garuta panchami - 2026
  • கே.ஜி. ராமலிங்கம்

கரு’ என்பதற்கு சிறகு என்று பொருள். ‘ட’ என்றால் பறப்பது. சிறகுகளைக் கொண்டு பறப்பதாலேயே….அவர் கருடன். அனைத்து பறவைகளும் அப்படித் தானே பறக்கின்றன. ஆம். ஆனால்…. கருடனுக்கு மட்டும் இந்த பெயர் அமையக் காரணம்….கருடன் தன் சிறகுகளைக் கொண்டு… நினைக்கவும் இயலாத அதிவேகத்தில் பறக்கும் திறனைப் பெற்றிருப்பதால்.

அதாவது….ஒருமணி நேரத்தில் 125 முதல் 200 மைல்கள் வரை வேகமாக பறக்கும் திறமை கொண்டவர் கருடன்.

மேலும் அவரின் பார்வை மிகவும் கூர்மையானது. எவ்வளவு கூர்மை என்றால் ஒரு 10 அடுக்கு மாடி கட்டிடத்தின் உச்சியில் அமர்ந்திருக்கும் கருடனால் நிலத்தில் ஊர்ந்து செல்லும் எறும்பை பார்க்க முடியும். மேலும் கருடனால்….340 டிகிரி வரை கண்களை சுழற்றி பார்க்க முடியும் . அதாவது அவரின் தலைக்கு நேர் பின்னால் இருப்பவற்றை மட்டுமே அவரால் பார்க்க முடியாது .

கருடனை வழிபடுவதால் ஏற்படும் முக்கிய பலன்களில் ஒன்றாக கண் குறைபாடுகள் நீங்குதல் கூறப்பட்டு இருக்கிறது. கருடனின் பார்வை சிறப்பை அறிகையில் அதில் வியப்பேதுமில்லை.

அதே பார்வை குறைபாட்டை நீக்க யோகாசனங்களில்….கருடாசனமும்……யோக முத்திரைகளில் கருட முத்திரையும் பெயர் பெற்றவை.

கருட முத்திரை என்றதும் குறிப்பிடப்பட வேண்டியது…..அது ரகுகுலத்தின் முத்திரை என்பது.

வென்றி வேந்தரை வருக என்று உவணம் வீற்றிருந்த
பொன் திணிந்த தோட்டு அரும்பெறல் இலச்சினைபோக்கி
நன்று சித்திர நளிர் முடி கவித்தற்கு நல்லோய்
சென்று வேண்டுவ வரன்முறை அமைக்க எனச்செப்ப
–அயோத்தியா காண்டம்

இங்கு…. உவணம் என்பது கருடனைக் குறிக்கும். இதிலிருந்து… ரகுகுலத்தின் முத்திரை…. கருட முத்திரை என்பதை அறியலாம்.

பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் கருடனுக்கு உகந்த விரதம் ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் கனிந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். கருடனை போல பலசாலியும் புத்திமானாகவும், வீரனாகவும் மைந்தர்கள் அமைய அன்னையர்கள் கருட பஞ்சமியன்று விரதம் இருக்கின்றனர்.

அன்று ஆதிசேஷன் விக்கிரகம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்கின்றனர். இது என்ன கருட பஞ்சமி திதியில் ஆதிசேஷனுக்கு பூஜையா என்று வியக்கின்றீர்களா? வினதையின் மைந்தன் கருடனின் மாற்றாந்தாய் கத்ருவின் மைந்தர்கள் தானே நாகங்கள் அவர்கள் செய்த சூழ்ச்சியினால் தானே வினதை அடிமையாக நேர்ந்தது அன்னையின் அடிமைத்தளையை களைய கருடன் தேவலோகம் சென்று அமிர்தம் கொண்டு வர நேர்ந்தது அப்போதுதான் பெருமாளுடன் கருடன் போரிடும் வாய்ப்பும் வந்தது பின் பெரிய திருவடியாக எப்போதும் பெருமாளை தாங்கும் பாக்கியமும் கிட்டியது எனவே கருட பஞ்சமியன்று ஆதி சேஷன் விக்கிரகம் வைத்து பூஜை செய்யப் படுவதாக ஐதீகம். மேலும் கருடனின் உடலில் எட்டு ஆபரணமாக விளங்குபவை அஷ்ட நாகங்களே.

அன்றைய தினம் நோன்பிருந்து கவுரி அம்மனை நாகவடிவில் ஆராதிக்க வேண்டும். அன்று வடை, பாயசம், எண்ணெய் கொழுக்கட்டையோ அல்லது பால் கொழுக்கட்டையோ செய்து நாகருக்கு பூஜைசெய்து, தேங்காய் உடைத்து வைத்து, பழம், வெற்றிலை, பாக்குடன் நைவேத்யம் செய்ய வேண்டும்.

இந்த பூஜை முடிந்ததும் சரடு கட்டிக் கொள்ள வேண்டும். சரடுகளில் 10 முடி போட்டு, பூஜை செய்யும் இடத்தில் அம்மனுக்கு வலது பக்கம் வைக்க வேண்டும். பூஜை செய்யும் போது அம்மனுக்கு ஒரு சரடு மட்டும் சாற்ற வேண்டும். பூஜை முடிந்த பிறகு அனைவரும் வலது கையில் சரடு கட்டிக் கொள்ளலாம்.

அருகில் பாம்பு புற்று இருந்தால் சிறிது, பால், பழம், கொழுக்கட்டை எடுத்துக் கொண்டு போய், புற்றில் பால்விட்டு, பழம், கொழுக்கட்டை வைத்து விட்டு வரலாம். அருகில் புற்று ஏதும் இல்லா விடில் வீட்டில் பூஜையில் வைத்திருக்கும் நாகத்தின் மேலேயே சிறிது பால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

இந்த நோன்பு கூடப்பிறந்த சகோதரர்கள் நலத்தையும் வளத்தையும் கோரும் நோன்பாகும். ஆதலால் அவர்களை வீட்டிற்கு அழைத்து சாப்பாடு போட்டு பணமோ அல்லது துணிகளோ வைத்து, தாம்பூலம் கொடுத்து, பெரியவர்களாக இருந்தால் நமஸ்கரித்து ஆசி பெறலாம். சிறியவர்களாக இருந்தால் ஆசீர்வாதம் செய்யலாம்.

கருடாழ்வாரை வணங்குவோம்: இவரை வணங்கினால் சகலவிதமான நன்மைகள் கண் பார்வை குறைபாடுகள் அகலும், பகையும் பிணியும் நீங்கும். செல்வம் செழிக்கும். பெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கை. ஆகாயத்தில் கருடனைப் பார்ப்பதும் அவருடைய குரலைக் கேட்பதும் நல்ல சகுனம்.

பிறரை வசியம் செய்வது, மயங்க வைப்பது, பகைவர்களை அடக்குவது, அந்தரத்தில் உலவுதல், நெருப்பிடையே பயம் இல்லாமல் புகுந்து செல்வது, இந்திர ஜாலம் காட்டுவது, படிப்பில் நல்ல தேர்ச்சி, நினைவாற்றல், தேர்வில் வெற்றி ஆகியவற்றை கருடாழ்வாரை மனம் கனிந்து வழிபடுவதன் மூலமாக பெறமுடியும் என்பதை பத்ம புராணம் கூறுகிறது.

எம்பெருமான் பள்ளிகொள்ளும் ஆதி சேஷனையும், அவரைத் தாங்கிசெல்லும் வாகனமாகிய கருடாழ்வாரையும் சிந்தித்து நல்ல வாழ்வு பெறுவோம்.

Ind Vs Eng Test: இளம் இந்தியப் படை ஏற்படுத்திய ஆச்சரியங்கள்!

Ind vs eng test - 2026

இந்தியா – இங்கிலாந்து நான்காவது டெஸ்ட் – மான்செஸ்டர் –– 23 மற்றும் 27 ஜூலை 2025 இரண்டாம் இன்னிங்க்ஸில் இந்திய அணி அபார ஆட்டம்

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இந்திய அணி முதல் இன்னிங்க்ஸ் (358, யசஷ்வி ஜெய்ஸ்வால் 58, கே. எல். ராகுல் 46, சாய் சுதர்ஷன் 61, ஷுப்மன் கில் 12, ரிஷப் பந்த் 54, ஷர்துல் தாகூர் 41, பென் ஸ்டோக்ஸ் 5/72, ஆர்ச்சர் 3/73, வோக்ஸ் மற்றும் டாசன் தலா ஒரு விக்கட்), இரண்டாவது இன்னிங்க்ஸ் (425/4, ஷுப்மன் கில் 103, வாஷிங்க்டன் சுந்தர் 101, ரவீந்தர் ஜதேஜா 107, ராகுல் 90,  வோக்ஸ் 2/67, பென் ஸ்டோக்ஸ் 1/33). இங்கிலாந்து முதல் இன்னிங்க்ஸ் (669, க்ராலி 84, பென் டக்கட் 94, ஒலி போப் 71, ஜோரூட் 150, பென் ஸ்டோக்ஸ் 141, ப்ரைடன் கார்சே 41, ஜதேஜா 4/143, சுந்தர் 2/107, பும்ரா 2/112, காம்போஜ் 1/89, சிராஜ் 1/140) ஆட்டம் ட்ராவில் முடிவடைந்தது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் (107 பந்துகளில் 58 ரன்) மற்றும் கே.எல். ராகுல் (98 பந்துகளில் 46 ரன்) நல்ல தொடக்கம் தந்தனர். அவர்களுக்குப் பின்னர் வந்த சாய் சுதர்ஷன் (151 பந்துகளில் 61 ரன்) நன்றாக விளையாடினார்.

அவரோடு இணைந்த ஷுப்மன் கில் 12 ரன்களுடன் ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் (75 பந்துகளில் 54 ரன்), ரவீந்தர் ஜதேஜா (40 பந்துகளில் 20 ரன்), ஷர்துல் தாகூர் (88 பந்துகளில் 41 ரன்) எடுத்தனர் இதனால் முதல் இன்னிங்க்ஸில் 114.1 ஓவர்களில் 358 ரன் எடுத்து இந்திய அணி அனைத்துவிக்கட்டுகளையும் இழந்தது.

இங்கிலாந்து தனது முதல் இன்னிங்க்சில் ஜோ ரூட் (248 பந்துகளில் 150 ரன்), பென் ஸ்டோக்ஸ் (198 பந்துகளில் 141 ரன், தொடக்க வீரர் க்ராலி (113 பந்துகளில் 84 ரன்) பென் டக்கட் (10 பந்துகளில் 94 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடினர். 157.1 ஓவர்கள் ஆடி அந்த அணி 669 ரன் சேர்த்தது. இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் மிகவும் சுமாராக பந்துவீசினர். ஆட்டக்களமும் அவர்களுக்குச் சாதகமாக இல்லை. ஜதேஜா நாலு விக்கட்டுகள் எடுத்தார்.

நான்காம் நாள் உணவு இடைவேளைக்குச் சற்று முன்னர் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்க்ஸை முடித்துக்கொண்டது. இந்திய அணி தோல்வியைத் தவிர்க்க 311 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயம். இதற்கு முந்தைய டெஸ்டில் 192 ரன்கள் எடுக்க முடியாமல் இந்திய அணி தோல்வியைத் தழுவியிருந்தது. எனவே நிச்சய வெற்றி என்ற மனப்பான்மையோடு இங்கிலாந்து அணி களமிறங்கியது .

ரிஷப் பந்த் ஏற்கனவே கையில் எலும்பு முறிவு காரணமாக ஆடமாட்டார் என அனைவரும் நினைத்திருந்தார்கள். ஆனால் அவர் ஆடினார். இந்த முறை ஆடும்போது ஒரு ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயன்றபோது அவரது கால் விரலில் பந்து பட்டு, காயம் ஏற்பட்டு இரத்தம் கொட்டியது. அவர் மைதானத்தில் இருந்து மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் அவர் மீண்டும் வந்து முதல் இன்னிங்க்ஸில் ஆடி, 54 ரன் எடுத்தார். இரண்டாவது இன்னிங்க்ஸில் அவர் ஆடமாட்டார் என அறிவித்திருந்தார்கள்.

எனவே ஜெய்ஸ்வால், ராகுல், சுதர்ஷன், கில், சுந்தர், ஜதேஜா, ஷர்துல் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்துவிட்டால் அதன் பின் வெற்றி நமதே என இங்கிலாந்து அணி நினைத்திருந்தது. அதற்கு ஏற்றாற்போல முதல் ஓவரில் ஜெய்ஸ்வால், சுதர்ஷன் இருவரும் பூஜ்யத்தில் ஆட்டமிழந்தார்கள். அதன் பின் நடந்தது கதையின் முக்கியத் திருப்பம். நான்காம் நாள் முடிவில் ராகுல் 87 ரன்னுடனும், கில் 78 ரன்னுடனும் இந்திய அணி இரண்டு விக்கட் இழப்பிற்கு 174 ரன்னுடனும் ஆட்டத்தை முடித்தது.

ஐந்தாம் நாளில் ராகுல் 7 ஓவர்கள் விளையாடி 90 ரன்னில் ஆட்டமிழந்தார். அன்றைய தினம் 17 ஓவர்கள் விளையாடி ஷுப்மன் கில் 103 ரன்னில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி வெற்றி நிச்சயம் என உற்சாகமடைந்தது. அதன் இன்னர் வாஷிங்க்டன் சுந்தர் (206 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 103 ரன்) மற்றும் ரவீந்தர் ஜதேஜா (185 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 107 ரன்) சிறப்பாக ஆடி ஆட்டத்தைச் சமனில் முடித்தனர்.

ஐந்தாவது டெஸ்ட் ஓவல் மைதானத்தில் வருகின்ற ஜூலை 31 முதல் ஆகஸ்டு 4 வரை நடக்க உள்ளது. இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.    

Chola Empire reflects the strength and true potential of our great Nation!

0
gangaikondachozhapuram - 2026
  • B.L. Santhosh

Yesterday, our Hon’ble PM, Shri Narendra Modi spoke at the Aadi Thiruvathirai Festival at Gangaikonda Cholapuram reminding us that the “legacy of the Chola Empire reflects the strength and true potential of our great nation.” The ceremony was held to commemorate the 1000th year of the expeditions of Shri Rajendra Chola to South East Asia and commencement of the construction of the Gangaikonda Cholapuram temple.

Under the Chola regime, Tamil Nadu had become a bastion of military strength and religious depth. With visionary rulers like Rajaraja Chola I and his son Rajendra Chola I, the empire reached unprecedented heights, stretching its influence all the way from Southern India to Southeast Asia.

The Cholas were not only kings of land, but also were rulers of seas and visionaries well-tuned to the beat of commerce and culture. The greatest testimony to the same is that even centuries prior to Europe’s Magna Carta, the Cholas had institutionally established local self-rule, and that too through a public ballot pot process known as the “Kudavolai Amaippu system.”

Rajaraja Chola I, who reigned between 985 and 1014, set the stage for this golden era, and his campaigns spanned from Southern India to Northern Sri Lanka. Though he was a great military leader and enjoyed exalted titles, Rajaraja preferred to be remembered as “Sivapatha Sekaran” (one who bears Lord Shiva’s feet on his head), demonstrating once again that Tamil Nadu has always been a land of spirituality. This devotion was also the motivating force behind constructing the magnificent Brihadeshwara Temple at Thanjavur, which is a towering epitome of Chola architectural grandeur and spiritual ethos that remains a work of art even today.

His son, Rajendra Chola I (1014-1044 CE), succeeded in taking this legacy even beyond the Indian subcontinent. He sent out a grand naval campaign against the Srivijaya Empire in 1025 and established India’s maritime dominance in international waters by securing key trade routes. Under his reign, the Cholas had also claimed present-day Andaman and Nicobar Islands, Maldives, Lakshadweep, Coastal Burma and Thailand, as a result of which even ‘Coromandel’ bears the name of their land – “Chola Mandalam.” His victory over the Pala dynasty in Bengal was etched in history by the building of Gangaikonda Cholapuram and the bringing of sacred Ganga water to their Kingdom, epitomising Bharat’s civilisational strength from the Ganga to the Cauvery.

It is also essential to note that Rajendra Chola’s humility remained evident despite his vast conquests. In a touching gesture of respect to his father, the temple Gopuram he built at Gangaikonda Cholapuram was made slightly shorter than that of Gopuram of the Brihadeshwara Temple in Thanjavur. Therefore, the Cholas left their tale not just on stone but on seas and centuries with their extensive campaigns.

அபலையின் அஞ்ஞானம்!

andal srivilliputhur

அபலையின் அஞ்ஞானம்

  • சுஜாதா தேசிகன்

“வேயர் புகழ் வில்லிபுத்தூர் ஆடிப்பூரம் மேன்மேலும் மிக விளங்க…” என்று ஸ்ரீ வேதாந்த தேசிகனும், “இன்றோ திருவாடிப் பூரம் எமக்காக அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள்…” என்று ஸ்ரீ மணவாள மாமுனிகளும் “திருவாடிப் பூரத்திற் செகத்துதித்தாள் வாழியே!…” என்று வாழி திரு நாமத்திலும் திருவாடிப் பூரத்தை கொண்டாடுகிறார்கள்.

இன்றைய திருவாடிப்பூரத்தில் ஆண்டாள் குறித்து சில விஷயங்களை அனுபவிக்கலாம்.

நாச்சியார் திருமொழியை அனுபவிப்பதற்கு சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்துகொள்வது குறிப்பாக ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு மிக அவசியம்.

எம்பெருமான் ஒருவனே புருஷன் – ‘புருஷோத்தமன்’. மற்ற எல்லா ஜீவாத்மாக்கள் அவனுக்கு நாயகியே என்பது ஸ்ரீ வைஷ்ணவத்தின் அடிப்படை சித்தாந்தம். ஸ்ரீமத் ராமாயணத்தில் புலன்களை அடக்கிய ரிஷிகளும், முனிவர்களுமே ஸ்ரீராமர் மீதும் காதல் கொண்டார்கள். வால்மீகி ஸ்ரீராமர் அழகில் மோகித்துப் பேச முடியாமல் தவித்தார்.

ஸ்ரீராமருக்கே இப்படி என்றால் கண்ணன் பற்றிக் கேட்கவே வேண்டாம். மேகம், ஆறு,செடி, கொடி. மரங்கள் கூட கண்ணனிடம் மோகித்தது என்கிறது ஸ்ரீமத் பாகவதம்.

பக்தியில் பல தரம்(grade) இருக்கிறது. அதில் மிக உயர்ந்தது கோபிகைகள் செய்த பக்தி. அதற்குப் பெயர் பிரேமை இல்லை பரம பிரேமை ( Intense deep love ). இதைத் தான் ஆழ்வார்கள் பின்பற்றினார்கள்.

பெரியாழ்வார் யசோதையாக மாறி கண்ணனுக்குத் தாய் போலப் பிரேமை செய்தார். பெருமாளை நாயகனாக அடைய வேண்டும் என்று நம்மாழ்வார் ‘கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்’ என்று பராங்குச நாயகியாக உருகினாள். அதே போல் பரகால நாயகியாக திருமங்கை ஆழ்வார்.

ஆனால் இவர்கள் எல்லோரும் ஆண். அதனால் தங்களிடம் உள்ள ஆண்மைத் தன்மையை முதலில் அகற்றி(unlearn செய்து), பிறகு கோபிகையாகத் தங்களை (learn) பாவித்துக்கொண்டார்கள்.

ஆனால் ஆழ்வார்களில் நம் ஆண்டாளோ பிறவியிலேயே பெண். அவளுக்கு ‘unlearn’ செய்ய எதுவும் இல்லை. அதனால் கண்ணனைச் சுலபமாக, வேகமாக அணுக முடிந்தது.

கீதையில் கண்ணன் என்னிடத்தில் பக்தி செய்யும் முதல் அதிகாரி “ஸ்திரிகள்” என்று பதில் கூறுகிறான். அப்படிக் கூற காரணம் என்ன ? இதற்கு அபலை, அஞ்ஞானம் என்ற இரண்டு வார்த்தைகளைப் புரிந்துகொள்ள வேண்டும்.

நாச்சியார் திருமொழியின் முழுச் சாரத்தையும் இந்த இரண்டு வார்த்தைகளில் அடக்கிவிடலாம்.

’அபலை’ என்ற பிரயோகம் ஒரு பெண்ணுக்கு மட்டுமே பொருந்தும். ஆண்களை அப்படி அழைப்பதில்லை. ஆண்கள் எப்போதும் ஆண்மை என்ற பலம் உள்ளவர்களாகவே கருதப்படுகிறார்கள். பலம் இல்லாதவர்கள் பெண்கள் அதனால் அ-பலம் – அபலை என்கிறோம். இந்த அபலை என்ற தகுதி தான் கண்ணனை அணுக முதல் தகுதி.

அபலையாகக் கண்ணனை அணுகிய பெருமை ஆண்டாளையே சாரும்.

நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் மன்மதனை வழிபடுகிறாள். ஸ்ரீ வைஷ்ணவத்தில் பெருமாளைத் தவிர்த்து மற்ற தேவதைகளை எல்லாம் வழிபடும் வழக்கம் இல்லாத போது ஆண்டாள் அப்படிச் செய்யலாமா ? என்ற எண்ணம் நமக்குத் தோன்றாமல் இருப்பதில்லை. பெரியவாச்சான் பிள்ளை இதற்குப் பதில் கூறுகிறார்.

அயோத்தியில் ராமரைத் தவிர மற்றவை எதுவும் தெரியாத அந்த ஊர் மக்கள் இரவு பகலாக எல்லா தேவதாந்த்ர கோயிலுக்குச் செல்வார்கள்( வால்மீகி ராமாயணம்). காரணம் – ராமருடைய நலனுக்காக அங்கே வேண்டிக்கொள்கிறார்கள்.

ஞானம் இருப்பவர்கள் இப்படிச் செய்ய மாட்டார்கள். கலங்கிய ஞானமே பக்தி. அ-ஞானம் – அஞ்ஞானம். ஒரு தாய் தன் குழந்தையிடம் உள்ள பிரேமையினால் எது வேண்டும் என்றாலும் செய்வாள். ஜுரம் வந்தால் மந்திரித்த கயிற்றை கட்டுவாள். கண்மூடித்தனமாக எதையாவது தன் அஞ்ஞானத்தால் செய்வாள். அயோத்தி மக்கள் தேவதைகளை வேண்டிக்கொண்டது போல, ஆண்டாளும் மன்மதனைக் கொண்டாள் அஞ்ஞானத்தால்.

அயோத்தி மக்கள் ஸ்ரீராமரின் நலனுக்காக வேண்டிக்கொண்டார்கள், ஆனால் கண்ணன் நலம் வேண்டி ஆண்டாள் மன்மதனை வேண்டிக்கொள்ள வில்லையே ” கண்ணனுக்காக என்னை விதி’ என்று கூறுவது எப்படிக் கண்ணனின் நலம் வேண்டுதலில் வரும் என்ற சந்தேகம் எழலாம்.

இளைய பெருமாள் என்ற லக்ஷ்மணர் ஸ்ரீராமர், பிராட்டியுடன் காட்டுக்குச் சென்றார். ஸ்ரீராமருக்காகத் தன்னை விதித்துக்கொண்டு அவருக்குக் கைங்கரியம் செய்ய வேண்டும் என்று கூட சென்றார். ஸ்ரீராமர் நலம் வேண்டிச் சென்றார்!

அது போல இங்கே ஆண்டாள் ’ மன்மதன் காலில் விழுந்தாவது கேசவ நம்பியைக் கால் பிடிக்கும்’ கைங்கரியம் கிடைக்குமா என்று தவிக்கிறாள். அவ்வளவு intense deep love அதனால் வரும் அஞ்ஞானம்.

அனுமார் எப்பேர்ப்பட்ட ஸ்ரீராம பக்தர் என்று எல்லோருக்கும் தெரியும். அவர் வைகுண்டம் கூட வேண்டாம் என்றவர், சுந்தரக் காண்டத்தில் அவர் கைகளைக் கூப்பிக்கொண்டு ருத்திரன், யமன், வாயு என்று இந்தத் தேவதைகளிடம் சீதையைக் காட்டிக்கொடு என்று வேண்டிக்கொள்கிறார். அது போல ஆண்டாள் நாச்சியார் கண்ணனைக் காட்டிக்கொடு என்று மன்மதனை வேண்டிக்கொள்கிறாள்.

அனுமார், அயோத்தி வாசிகளுக்கு பெரியாழ்வார் தந்தையாகக் கிடைக்கவில்லை. ஆனால் ஆண்டாளுக்கு விஷ்ணுவைத் தன் சித்தத்தில் வைத்திருக்கும் விஷ்ணு சித்தர் என்ற பெரியாழ்வார் தந்தை. பரத்துவத்தை நிர்ணயம் செய்தவர், அவர் மகள் ’விட்டுசித்தர் கோதை’ என்று தன்னை கூறிக்கொள்பவள், எப்படி மன்மதனை வேண்டலாமா ? என்றும் தோன்றும்.

பராங்குச நாயகியாக நம்மாழ்வார் கதறிவிட்டு கடைசியில் ’தெய்வங்காள் என் செய்வேன்?’ என்று மற்ற தெய்வங்களை பார்த்துக் கூறியது போல ஆண்டாளும் எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று மன்மதன் காலில் விழுகிறாள். ஆண்டாளுக்கு பெரியாழ்வார் அப்பா என்றால் நம்மாழ்வார் பெரியப்பா!

இந்த தவிக்கும் வெளிப்பாடு அபலையாக அஞ்ஞானம் இருந்தால் மட்டுமே சாத்தியம். இதைப் புரிந்துகொண்டால் மட்டுமே நாச்சியார் திருமொழியை ஓர் அளவு புரிந்துகொள்ளலாம். இதைப் புரிந்துகொள்ள ஆண்டாளே அருள் புரிய வேண்டும்.

பிகு: அ- என்பது விஷ்ணுவைக் குறிக்கும். அ-பலை – விஷ்ணுவே பலம் என்றும், அ-ஞானம் விஷ்ணுவே ஞானம் என்றும் பொருள் கூறலாம்.

நீதித்துறையை வளைக்கும் சாதீய வன்மம்; ஆதரவாய் செயல்படும் ஆளும் வர்க்கம்: இந்து முன்னணி கண்டனம்!

kadeswara subramaniam hindu munnani - 2026

நீதித்துறையை தங்கள் போக்குக்கு வளைக்க திட்டமிட்டு செயல்படும் விபரீத முயற்சி இது என்றும், சாதீய வெறுப்புணர்வைத் தூண்டும் அவலம் நடக்கிறது, அதற்கு ஆதரவாய் ஆளும் வர்க்கம் செயல்படுகிறது, இது ஜனநாயகத்திற்கு மாபெரும் களங்கம் என்றும் கூறி, இதனை இந்து முன்னணி கடுமையாக கண்டிப்பதாக, அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து வெளியிட்ட அறிக்கை:

மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது தெரிவித்த குற்றச்சாட்டில் இந்து முன்னணி மதுரையில் நடத்திய முருக பக்தர்கள் மாநாடு நடத்த அனுமதி அளித்த உத்தரவை குறிப்பிட்டுள்ளார்.

அந்த வழக்கில் அரசு தரப்பு மற்றும் காவல்துறை தரப்பு வாதங்களையும்; இந்து முன்னணி வாதங்களையும் முழுமையாகக் கேட்டறிந்து ஜனநாயக கோட்பாடுகள் அடிப்படையில் மாநாடு நடத்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி அளித்தது. அதன்படி இந்து முன்னணி நடத்திய மாநாட்டில் நீதிமன்ற உத்தரவு மற்றும் காவல்துறை, அரசு அதிகாரிகள் வழிகாட்டுதலை முறையாக செயல்படுத்தவும் பட்டது.

விதிகளைப் பின்பற்றி கட்டுக்கோப்பாக அந்த மாநாடு நடத்தபட்டது குறித்து அனைத்து ஊடகங்கள் மாத்திரமல்லாது பல்வேறு அமைப்புகளும் கூட பாராட்டுதல்களைப் பதிவு செய்தன. மாநாட்டில் கலந்து கொண்ட ஐந்து லட்சத்திற்கு அதிகமான பக்தர்கள் அதற்கு சாட்சி.

இப்படி இருக்கையில் அந்த மாநாட்டை நடத்த அனுமதி அளித்த உத்தரவை மேற்கோள் காட்டி நீதியரசர்களை இழிவு படுத்தும் வழக்கறிஞர் திரு. வாஞ்சிநாதன் மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்படும் ஒய்வு பெற்ற சில நீதிபதிகள் மற்றும் திமுக; விசிக உட்பட்ட சில கட்சிகளுக்கும் இந்து முன்னணி கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

சமீபத்தில் மதுரை வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களின் உத்தரவுகளுக்கு உள்நோக்கம் கற்பித்து சாதிய மற்றும் சமய சார்பாக ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக அவதூறை சமூக ஊடகத்தில் பதிவிட்டும் அதையே உச்சநீதிமன்றத்தில் மனுவாக தாக்கல் செய்ததாகவும் செய்திகள் வாயிலாக தெரியவருகிறது.

இது குறித்து நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதன் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவர்களை நேரில் ஆஜராகி விளக்கம் கேட்ட நிலையில் எழுத்துப்பூர்வமாக பதிலளிக்கவும் உத்திரவிட்டுள்ளதாக செய்திகள் மூலம் அறிய முடிகிறது.

அரசு தரப்பு மனுதாரர் தரப்பு வாதங்களை கேட்டறிந்து நமது அரசியல் அமைப்பு சட்ட படி பிறப்பிக்கபட்ட உத்தரவுக்கு ஜாதி, சமய உள்நோக்கம் கற்பித்து அவதூறு பரப்பும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவர்களுக்கு ஆதரவாக அவர் அளித்த மனுவின் மீது உச்ச நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கக்கூடாது என்று 8 முன்னாள் நீதிபதிகள் கையெழுத்திட்ட பெட்டிஷன் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பியதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

அதே சமயத்தில் வாஞ்சினாதனுக்கு ஆதரவு மனு பற்றி யாரும் என்னிடம் பேசவில்லை, நான் அந்த மனுவில் கையெழுத்திடவில்லை என ஓய்வுபெற்ற நீதிபதி கே.கே. சசிதரன் தெரிவித்துள்ளார். அப்படி என்றால் நீதிபதி கே.கே. சசிதரன் கையெழுத்தை மனுவில் போலியாக போட்டது எந்தளவு மோசமான சட்டவிரோத செயல் என்பதையும் வாஞ்சினாதனும் அவருக்கு ஆதரவு தெரிவிப்போர்களும் எப்படியானவர்கள் என்பதற்கு எடுத்துகாட்டாகும்.

அந்த வகையில் நீதிபதிகள் மீதான அவதூறு பரப்பும் பின்னணியில் திமுகவினர் செயல்படுகிறார்கள் என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க இயலாது.

இதற்கு காரணம் சென்னை உயர்நீதி மன்றத்தில் திமுகவின் மூத்த அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு, கனிம வள கொள்ளை வழக்குகள் தீர்ப்பு தொடர்ந்து வர இருக்கின்றன. இந்நிலையில் அந்த வழக்குகளின் தீர்ப்பை முடக்க அல்லது நீதிதுறையை அச்சுறுத்த இதுபோன்ற அவதூறுகளை பின்புலத்தில் இருந்து திமுக தூண்டி வருகிறது என்றால் மிகையில்லை.

இதுபோல் அமைச்சராக இருந்த பொன்முடி இந்து மதத்தை பெண்களை இழிவுபடுத்திய குற்றச்சாட்டு மற்றும் கன்னியாகுமரி சர்ச் பிரச்சினையில் காவல்துறை நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன் என கேள்வியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பினர். இதுவும் திமுகவை எரிச்சலடைய செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நீதித்துறைக்கு எதிராக, நீதிபதிகள் குறித்து அவதூறு பரப்பிய அட்வகேட் வாஞ்சிநாதனுக்கு ஆதரவு என்ற பெயரில் ஒய்வு பெற்ற நீதிபதிகள் லாபி செய்வது நீதித்துறைக்கு அச்சுறுத்தல் என்பதை இந்து முன்னணி சுட்டிக்காட்டுகிறது.

மேலும் இதைப்போன்ற குற்றச்சாட்டை நீதிபதி புகழேந்தி மீதும் கம்யூனிஸ்ட் ஊடகமான வினவு மின் இதழ் வெளியிட்டுள்ளது, அந்த வகையில் திக, திமுக, கம்யூனிஸ்ட் போன்றவர்களின் விருப்பு வெறுப்புக்கு உடன்படாத நீதிபதிகளை அவதூறு கருத்துகளை பரப்பி மிரட்டி பணிய வைக்கும் முயற்சியாகவே வாஞ்சினாதன் போன்றோரின் செயல்களை பார்க்க வேண்டியுள்ளது.

மேலும் அட்வகேட் வாஞ்சிநாதன் நீதித்துறைக்கு எதிராக செயல்பட்டவர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தைத் தூண்டி அதனை கலவரமாக்கி 11 பேர் உயிழக்க காரணமாக இருந்தவர். அதற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர். மேலும் நீதித்துறைக்கு எதிராக செயல்பட்டதால் வழக்கறிஞராக இருக்கவே தகுதியற்றவர் என்பதை குறிப்பிட்டே இந்திய பார் கவுன்சிலால் சஸ்பெண்ட் செய்யபட்டவர். இதுமட்டுமால்லாம வாஞ்சிநாதன் மீது ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரியவருகிறது.

ஆகவே பொதுமக்களும் வழக்கறிஞர்கள் சமுதாயமும் இதுபோன்ற தவறானவர்களின் கருத்துகளை புறக்கணித்து அவர்களுக்கு எவ்விதமான ஆதரவையும் கொடுக்ககூடாது என்பதை இதன் மூலம் கேட்டுகொள்கிறோம்.
அதேபோல வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு ஆதரவாக கையெழுத்திட்ட ஒய்வு பெற்ற நீதிபதிகள் அரிபரந்தாமன், சந்துரு முதலானவர்கள் பகிரங்கமாக தேசவிரோத கம்யூனிஸ்ட் திராவிட கூட்டங்களில் கலந்து கொண்டு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பதை பார்க்கிறோம். இவ்வாறான சர்ச்சைகுரிய கருத்தினை கொண்ட இவர்கள் நீதிபதிகளாக பணியாற்றியபோது உள்நோக்கத்துடன் ஒருசார்பாக செயல்பட்டு இருக்கமாட்டார்கள் என்பதை எவ்வாறு ஏற்பது. எனவே இவர்கள் வழங்கிய தீர்ப்புகள் குறித்து உச்ச நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

மேலும் நீதித்துறைக்கு அச்சுறுத்தல் செய்ய சாதி, சமயத்தை குறிப்பிட்டு கூறி நீதியரசர்களை இழிவுப்படுத்த்துவதை உச்ச நீதிமன்றம் கடுமையான விஷயமாக கருத்தில் கொள்ள வேண்டும்.

நீதிபதிகள் மீது அவதூறு பரப்பி நீதித்துறை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர பிளாக்மெயில் அரசியல் செய்யும் அட்வகேட் வாஞ்சிநாதன் மற்றும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் ஒய்வு பெற்ற நீதிபதிகள் மீது உச்ச நீதிமன்றம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

ஸ்ரீவி ஆண்டாள் ஆடிப்பூர தேரோட்டம்; பக்தர்கள் வெள்ளத்தில் கோலாகலம்!

srivilliputhur andal theroottam - 2026

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலங்களில் ஒன்றான ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்து செல்ல கோலாகலமாக நடைபெற்றது.

கோவிந்தா, கோபாலா கோஷம் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். வைணவ திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மூலவர் வடபத்ரசாயி, பெரியாழ்வார், ஆண்டாள் ஆகியோர் அவதரித்த சிறப்புக்குரியது. இங்கு பெரியாழ்வாரின் மகளாக வளர்ந்த ஆண்டாள், மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்து ரெங்கமன்னாரை மணந்து கொண்டார்.

பெரியாழ்வாரின் அவதார விழாவான ஆனி சுவாதி திருவிழா மற்றும் பங்குனி திருக்கல்யாண விழாவில் செப்பு தேரோட்டமும், ஆண்டாள் அவதரித்த ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில் ஆடிப்பூர தேரோட்டமும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாளில் 16 வண்டி சப்பரமும், 5ம் நாள் காலையில் பெரியாழ்வார் மங்களாசாசனமும், இரவு பெரியபெருமாள், ரெங்கமன்னார், திருவண்ணாமலை ஶ்ரீனிவாசபெருமாள், காட்டழகர் கோயில் சுந்தரராஜபெருமாள், திருத்தங்கல் அப்பன் ஆகியோர் கருட வாகனத்தில் எழுந்தருளும் 5 கருட சேவை வெகுவிமரிசையாக நடைபெற்றது. 7-ம் நாள் இரவு ஆண்டாள் மடியில் ரெங்கமன்னார் சயனித்திருக்கும் சயன சேவை உற்சவமும் நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ ரங்கம் அழகர்கோவில் மங்கலம் பொருட்கள் ஸ்ரீ வில்லிபுத்தூர் கங்கு கொண்டு வரப்பட்டது.இரவு ஆண்டாள் பூப்பல்லக்கிலும், ரெங்கமன்னார் தங்க குதிரை வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தனர். இரவு தேர் கடாட்சித்தல் வைபவம் நடைபெற்றது.

திங்கள்கிழமை காலை தேரோட்டத்தை முன்னிட்டு மூலவருக்கு புஷ்பாஞ்சலியும், கண்ணாடி மாளிகையில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு ஏகாந்த திருமஞ்சனமும் நடைபெற்றது. அதன்பின் சர்வ அலங்காரத்தில் ஆண்டாள் மஞ்சள் பட்டு உடுத்தியும், ரெங்கமன்னார் வெண்பட்டு உடுத்தியும் தனித்தனி தோளுக்கினியானியில் புறப்பாடாகி தேரில் எழுந்தருளினர்.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து செல்ல ரதவீதிகளில் ஆண்டாள் ரெங்கமன்னார் வலம் வந்து தரிசனம் கொடுத்தனர்.

ஒரு நீதிபதிக்கு எதிராக இத்தனை முன்னாள் நீதி அரசர்களா? ஏதோ சதித்திட்டம் இருக்கிறது!

judge grs gr swaminathan - 2026
#image_title

நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்? ஒரு நீதிபதிக்கு எதிராக இத்தனை முன்னாள் நீதி அரசர்களா ? ஏதோ சதித்திட்டம் இருக்கிறது!!


ஒரு நீதிபதி, ஒரு தீர்ப்பை கொடுத்துவிட்டால், அதைப் பற்றி யாரும் வாய் திறக்க கூடாது என்பது தற்போது பொது புத்தியாக இருக்கிறது .ஆனால் தாராளமாக தீர்ப்பை விமர்சிக்கலாம் .
அது மட்டுமல்ல எங்களையும் விமர்சிக்கலாம்என்று வெளிப்படையாக அழைப்பு விடுத்தவர் தமிழக நீதித்துறையில் கவனிக்கப்படும் நீதிபதிகளில் ஒருவராக இருக்கும் திரு ஜி ஆர் சுவாமிநாதன் அவர்கள் .

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதியரசராக பணிபுரிகிறார்.
மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் என்பவரிடம் நீங்கள் தொடர்ந்து நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து விமர்சிப்பதோடு “நான் மதரீதியாக ,சாதி ரீதியாக தீர்ப்புகள் வழங்கி வருவதாக ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை கூறிவருகிறீர்கள். இது குறித்து தங்களின் தற்போதைய நிலை என்ன ? எனது தீர்ப்புகள் சாதிய ரீதியில் மதரீதியில் உள்ளதாக சொன்ன கருத்தில் உறுதியாக இருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார் .

அதற்கு வாஞ்சிநாதன் உங்கள் குற்றச்சாட்டு எது தொடர்பானது என தெரியவில்லை அப்படி இருக்கும்போது இதற்கு எப்படி பதில் அளிக்க முடியும் நீங்கள் எழுத்துப்பூர்வமாக கூட கேள்வி எழுப்பினால் நான் எடுத்து பூர்வமாக பதில் அளிக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் .

நீதியரசர் ஜிஆர் சுவாமிநாதன் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய விவகாரம் சூடு பிடித்துள்ளது .

தற்போது வாஞ்சிநாதனுக்கு ஆதரவாகவும், ஜி ஆர் சுவாமிநாதன் அவர்களுக்கு எதிராகவும் ஓய்வு பெற்ற நீதி அரசர்கள் சந்துரு, சிடி செல்வம் கலையரசன் சசிதரன் அரி பரந்தாமன் அக்பர் அலி விமலா எஸ் எஸ் சுந்தர் உள்ளிட்ட பலர் கடிதம் எழுதி இருக்கிறார்கள் .

ஜி ஆர் சுவாமிநாதன் அவர்களின் கருத்தை திரும்ப பெற வேண்டும் என்பதை என்று வலியுறுத்தி திங்கள்கிழமை தமிழக முழுக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்படபோவதாக அறிவித்திருக்கிறார்கள் .

நீதி அரசர் ஜி ஆர் சுவாமிநாதன் உண்மையில் வலதுசாரிகளுக்கு ஆதரவானவர், குறிப்பிட்ட சாதி, இனங்களுக்கு ,ஆதரவானவர் என்று குற்றச்சாட்டை முழுமையாக மறுக்கிறேன்.

திருவாரூர் மாவட்டத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து வழக்கறிஞராக படித்து சென்னையில் திரு கண்ணன் என்ற மூத்த வழக்கறிஞரிடம் பணிபுரிந்தவர் . இந்த வழக்கறிஞர் கண்ணன் என்பவர்தான் பிற்காலத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பணிபுரிந்தார் . முதன் முதலில் “நீதிபதியாக இருந்த காலத்தில் தனது சொத்துக்களை பகிரங்கமாக வெளியிட்ட முதல் நீதிபதி இவர் தான் .

திரு ஜி.ஆர்.சுவாமிநாதன் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற 7 வருட காலத்தில் சுமார் 1,03,685 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கியுள்ளார்.

நீதிபதி சந்துரு அவர்கள் 95,607 வழக்குக்கு தீர்ப்பு வழங்கியதை விட அதிகம் .

“வழக்கறிஞர்கள் மீது
நீதிபதிகளின் கோபம் தற்காலிகமானது தான் வழக்கு முடிவில் நியாயத்தின் பக்கம் தீர்ப்பு இருக்கும் என்று சொன்னவர் ஜி ஆர் சுவாமிநாதன்.

” நீதிமன்றங்கள் நீதியின் கோவில்கள், நீதி அரசர்கள் ஒன்றும் கடவுள்கள் அல்ல ;நீதியே கடவுள் என்று சந்தேகத்திற்கு இடமில்லாமல் புரிந்து கொள்ளுங்கள் என்று சொன்னவர் .

இப்படி எல்லாம் சொன்ன நீதி அரசர் ஜி ஆர் சுவாமிநாதன் மீது ஒட்டுமொத்தமாக நீதித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் எதிர்ப்பதன் பின்னணியில் பல சந்தேகங்கள் எழுகிறது.

தாங்கள் விரும்பிய தீர்ப்புகளை வழங்கினால் அவரை நீதி காவலர் என்று சொல்லுவதும் ,நியாயத்தின் பக்கம் தீர்ப்பு வழங்கினால் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தவாதி ஒரு குறிப்பிட்ட சாதிக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று அவதூறு பரப்புவதும் எந்த வகையில் நியாயம் ?

ஒருவர் வழக்கறிஞராக படித்து பணியாற்றி குறிப்பிட்ட சித்தாந்தம் உடைய கட்சிகளின் வழக்கறிஞர் பிரிவு பொறுப்பாளராகி ,
அரசு வழக்கறிஞராகபணிபுரிந்து, பின்னர் நீதிபதிகளாக மாறிய பின்னரும் “உடை மாறினாலும் உணர்வில் கலந்த சித்தாந்தத்தின் பக்கம் இருந்து சிந்தையில் இருந்த சித்தாந்தத்தை தீர்ப்புகளாக வழங்கிய பெருமக்கள், பல தீர்ப்புகளை அரசுக்கு ஆதரவாக வழங்கிய நீதி பெருமக்களை நாடே அறியும் .

குறிப்பிட்ட பல வழக்குகளுக்கு நள்ளிரவில் நீதிமன்ற நீதிபதிகளின் வீட்டு கதவுகள் திறக்கப்படுவது,
ஒரே இரவில் அனைத்து வழக்குகளும் திரும்ப பெறப்படுவது சாதாரண ஏழை குடிமக்கள் வழக்காடிகளுக்கு கிடைக்குமா என்றால் இல்லை என்பது நிதர்சன உண்மை .

நீதித்துறையையும் காவல்துறையையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு ஆட்சியில் இருந்தவர்கள் அழுத்தங்களை கொடுத்து எப்படி நடத்தினார்கள் என்பதற்கு பல உதாரணங்களை நாம் சொல்ல முடியும்.

பிரேமானந்தா சுவாமி வழக்கில் தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்ற பெண் நீதிபதி ஒருவர் கிறிஸ்தவ மத அதிகப்பற்று கொண்ட ஒருவர் . அப்பொழுது அந்தப் பெண் நீதிபதியின் மதம் குறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை.

பஞ்சாப் அரியானா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த திரு கண்ணன் அவர்கள் போல தற்பொழுது எத்தனை முன்னாள் என்னால் நீதிபதிகள் தங்களது சொத்து பட்டியலை வெளியிட்டார்கள்?அல்லதுவெளியிட விரும்புவார்கள்?

அப்படி அவர்கள் வெளியிடுவார்களே ஆனால் அவர்களை பெருமதிப்போடு வரவேற்பேன் . திரு ஜி ஆர் சுவாமிநாதனுக்கு எதிராக போர் குரல் எழுப்பும் முன்னாள் நீதியரசர்கள் தங்களது சொத்து பட்டியலை வெளியிடுவார்களா ?

ஜி ஆர் சுவாமிநாதனுக்கு எதிராக குரல் கொடுத்த முன்னாள் நீதி அரசர்கள் மீதும், அவர்கள் கொடுத்த தீர்ப்பின் மீதும் பல விமர்சனங்கள் இருந்தாலும் அது குறித்து எல்லாம் எனக்கு கோபம் இல்லை .

தமிழ்நாட்டில் தற்போது நடக்கக்கூடிய படுகொலைகள் போதை கலாச்சாரம் குறிப்பிட்ட சமூக மக்களுக்கு எதிராக குடிநீர் தொட்டிகளில் மலம் கலப்பது , இயற்கை வளச்சுரண்டல்கள், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல், அதிகரித்து வரும் பாலியல் வக்கிரங்கள், என எவ்வளவோ நடப்பதை எல்லாம் தங்கள் கண்ணில் படாதது போல, காதுகளில் கேட்காதது போல வாய் மூடி மௌனிகளாக இருக்கிறார்களே என்ற வருத்தத்தில் தான் இதை எழுதுகிறேன் .

சரி விஷயத்திற்கு வருகிறேன் .

நீதியரசர் ஜி ஆர் சாமிநாதன் உண்மையில் வலதுசாரி ஆதரவாளரா? ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் கொண்டவரா என்றால் இல்லை.

பல இடங்களில் கம்யூனிச சித்தாந்தங்களையும் ஈவேரா போன்றவர்களையும் குர்ஆன் பைபிள் போன்ற மத நூல் கருத்துக்களையும் உயர்வாக பேசி இருக்கிறார்.

பெருமாள் முருகன் என்கின்ற எழுத்தாளர்” மாதொருபாகன்” என்ற நூலை எழுதியது கொங்கு பகுதியில் ஒரு குறிப்பிட்ட சமூக மக்களின் ஒரு பிரிவினர் குறித்து அவதூறாக நூல் எழுதுகிறார் .

பல்வேறு சாதி,சமூக அமைப்புகள் வலதுசாரி இந்துத்துவ அமைப்புகள் பெருமாள் முருகனுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி கடையடைப்பு என கொந்தளிப்பான நேரத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்2015 – ஜனவரி – 12ல் பெருமாள் முருகனை கூட்டத்திற்கு வரவைத்து ,DRO அவர்கள் பேச்சு வார்த்தை நடத்துகிறார் .

கூட்டத்தில் மாதொருபாகன் நூல் பிற்காலத்தில் அச்சிடக் கூடாது அப்படி அச்சிட்டாலும் திருச்செங்கோடு குறித்தும், குறிப்பிட்ட சமூக மக்கள் குறித்து அவதூறாக எழுதிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இடம் பெறக்கூடாது .
ஏற்கனவே அச்சிட்ட நூல்களை திரும்ப பெற வேண்டும் என்று கூறி கையெழுத்து பெருமாள் முருகைனிடம் வாங்கியது குறித்து பெருமாள் முருகன் இறந்துவிட்டான் என்று வருத்தத்தோடு பதிவு செய்த நேரத்தில் பெருமாள் முருகனுக்கு எதிரான நடவடிக்கை, கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது , சமாதான கூட்டம் என்கின்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து போல் அரசு நிர்வாகம் செயல்படக்கூடாது . அவருக்கு துப்பாக்கி பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று பெருமாள் முருகனுக்கு ஆதரவாக வழக்காடியது இந்த ஜி.ஆர் சுவாமிநாதன்.
பெருமாள் முருகனுக்கு ஆதரவாக நின்ற ஆ.ரா .வெங்கடாசலபதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க தலைவர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் இவற்றை மறுக்க மாட்டார்கள் .

சேக் முகமது என்கின்ற யானை பாகன் “லலிதா “என்கின்ற யானையை வளர்க்கிறார் .
வயதான யானை உடன் நலன் பாதிக்கப்படுகிறது . வனத்துறையினர் தனி நபர்கள் யானையை வளர்க்கக்கூடாது. லலிதா என்கின்ற யானை உடல் நிலை பாதிக்கப்பட்டு இருக்கிறது.
அதை வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடிய போது, “லலிதா “என்ற யானையை சேக் முகமது என்ற பாகனிடமிருந்து பிரித்து செல்ல வேண்டாம்.பாகன் பராமரிப்பில் யானை இருக்க வேண்டும்.
60 வயதாக இருக்கும் யானைக்கு காயங்கள் ஏற்பட்டு இருக்கிறது. அதற்கு முறையாக மருத்துவங்கள் பார்க்க வேண்டும் .இனிவரும் காலங்களில் யானையை வேறு எந்த வேலைக்கும் பயன்படுத்தக்கூடாது முறையாக உணவு வழங்கி ஓய்வெடுக்க செய்ய வேண்டும்.
தனி நபர்கள் யானைகள் வளர்க்கக்கூடாது என்ற உத்தரவை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று தீர்ப்பு கொடுத்தார் .

“ஒரு நபர் இந்துவாக இருந்து இஸ்லாமியராக மதம் மாறி விடுகிறார். இந்துவாக இருந்தபோது இந்து பெண்மணியோடு திருமணம்; பின்னர் இஸ்லாமிய மதத்திற்கு மாறிய பிறகு இஸ்லாமிய பெண்மணியோடும் திருமணம் செய்கிறார். இஸ்லாமிய மத மனைவியோடுவாழ்ந்து கொண்டிருக்கும் போது இறந்து விடுகிறார் . இறந்த பிறகு இந்து முறையில் அடக்கம் செய்ய வேண்டும் என்று இந்து மதத்தை சார்ந்த மனைவி உரிமை கோருகிறார். இஸ்லாமிய மனைவி இஸ்லாமிய முறையில் அடக்கம் செய்ய வேண்டும் என்று உரிமை கோருகிறார்.
எந்த மத சம்பிரதாய முறையில் அடக்கம் செய்வது என்று உரிமை கோரக்கூடியவிஷயத்தில் ,இந்து மனைவி வீட்டில் இறந்த கணவரை வைத்து ஒரு குறிப்பிட்ட நேரம் வரை சடங்கு சம்பிரதாயங்கள் செய்து கொள்ளுங்கள்; பின்னர் இறந்த கணவர் உடலை இஸ்லாமிய மத மனைவியிடம் ஒப்படைத்து விடுங்கள் .இஸ்லாமிய மதப் பழக்கத்தின்படி அவர்கள் சடங்கு சம்பிரதாயங்கள் நடத்தி கொள்ளட்டும், அடக்கம் செய்து கொள்ளட்டும் என்று தீர்ப்பு கொடுத்தவரும் இவரே .

சவுக்கு சங்கர் விஷயத்தில் வழக்குப் பதிந்து விசாரணை செய்து ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கொடுத்த திரு ஜி ஆர் சுவாமிநாதன் அவர்கள் தான் ,
திரு சவுக்கு சங்கர் நில மோசடி விசாரணை தொடர்பாக தவறான தகவலை பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி போலீசாருக்கு கண்டனம் தெரிவித்தார் .

மனுதாரர் எஃப் ஐ ஆர் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கூறவில்லை .ஜாமீன் மட்டுமே கேட்கிறார் .அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டது எப்படி என புரிந்து கொள்ள முடியவில்லை .கீழமை நீதிமன்றம் ஜாமீன் வழங்க ஏன் மறுத்தது என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.

சில கருத்துக்களை தெரிவித்ததற்காக சிலர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்படுவதை பார்க்கிறோம்.

போலீசார் தீய நோக்கத்துடன் முன்கூட்டியே செயல்படுவதை தடுக்க முடியாத சூழலில் நிலைமை படு மோசமாவதற்கு முன்னர் நீதித்துறை மாஜிஸ்திரேட் மற்றும் நீதிமன்றங்கள் தலையிட்டு தடுக்கலாம்.அதற்கு எளிதாக ரிமாண்டு செய்ய மறுக்கலாம் மனுதாரர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தால் அதனை வழங்கலாம்.

சில கருத்துக்களை சொன்னார் என்பதற்காக ஒருவர் மீது வழக்கு போடுவது என்பது சர்வாதிகார அணுகுமுறையின் அறிகுறி. யார் மீது வேண்டுமானாலும் வாய்மொழி விமர்சனம் இருக்கலாம் .இதில் விசாரணை என்பது ஒரு பொருளும் கைது என்பது முற்றிலும் வேறு மாதிரியானது தேவையில்லாமல் கைது செய்யக்கூடாது என்று பல வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் கூறுகின்றது என்றார். அதிகாரம் மிக்கவர்கள் தன்னிடம் பேசியதால் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது என்று சொல்லி குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பு வழங்கினார் .

என்னை நீதிமன்ற அறையில் யாரும் சந்திக்க வர வேண்டாம்; நீதிமன்றத்தில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று தெரிவித்தவர் திரு ஜி ஆர் சுவாமிநாதன்.

வலதுசாரி இயக்கத்தை சார்ந்தவர்களின் கூட்டங்களில் கலந்து கொள்ளும் திரு ஜி ஆர் சுவாமிநாதன் அவர்கள் தான் நாளை திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித் போன்றவர்கள் அழைத்தாலும் அந்த கூட்டங்களில் கலந்து கொள்வேன் என்று தெரிவித்த கருத்தை லாவகமாக இவர்கள் மறந்து விடுகிறார்கள் .

தப்லிக் ஜமாத் அமைப்பு நடத்தியமாநாடுதான் கொரோனா நோய் பரவலுக்கு காரணம் என்று பல வெளிநாட்டைச் சார்ந்த இஸ்லாமிய மதத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்த போது அவர்களுக்கு பிணைவழங்கியது
இவரே.

ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக போராடியவர்கள் மீது பதியப்பட்ட 70 வழக்குகளை ரத்து செய்தார் .
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்தவர் .

ஸ்ரீரங்கத்தில் பிராமணாள் ஹோட்டல் சேதப்படுத்தப்பட்ட வழக்கில் திராவிடர் கழக உறுப்பினர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்தார்

ஜார்ஜ் பொன்னையா என்ற கிறிஸ்தவ பாதிரியார்
” திமுக ஆட்சிக்கு வந்தது நாங்கள் போட்ட பிச்சை . அமைச்சர் சேகரர் பாபு ,மனோ தங்கராஜ் போன்றவர்கள் சுசீந்திரம் கோவிலுக்குள் போனால் சட்டை இல்லாமல் போக வேண்டும்,
ஆனால் நாங்கள் சர்ச்சுக்கு போகும் போது கோட்டு சூட், டை அணிந்து செல்வோம். MRகாந்தி என்கின்ற எம்எல்ஏ பாரதமாதா மீது செருப்பு போட்டு நடக்க மாட்டாராம் ஆனால் பாரத மாதாவால் நாங்கள் அசிங்கங்களில் இருந்து பாதுகாக்க சாக்ஸ் ஷூ அணிந்து செல்வோம் என்று பேசியவுடன் 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார் . தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்ய வேண்டும் என்று பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா நீதிமன்றம் நாடிய போது கொரோனா வந்த சூழலில் 269,143,506(1) மற்றும் தொற்றுநோய் பரவல் தடுப்பு சட்டப்பிரிவு 3-ன் கீழ் வழக்கு பதிவு செய்ததை ரத்து செய்தார்.மற்றபடி மத நம்பிக்கை சீர்குலைத்தல் இரு பிரிவினருடைய மோதல் உருவாக்குதல் பிரிவினை தூண்டுதல் 295 (ஏ), 153 (ஏ) மற்றும் 505 (2) இவற்றை ரத்து செய்ய முடியாது என்று குறிப்பிட்டு வெறும் காலுடன் நடப்பவர்களை கேலி செய்வது,இந்ததேசத்தைஅவமதிப்பது போன்ற வற்றை ஏற்றுக்கொள்ள இயலாது என்றார் .

திருநெல்வேலி தாமிரபரணிநதியில் கழிவு நீர் கலக்குகிறது என்று தாமிரபரணிநதியை பாதுகாக்க வேண்டும் என்று முத்தாலங்குறிச்சி காமராஜ் என்ற எழுத்தாளர் வழக்கு தாக்கல் செய்கிறார். வழக்கு விசாரணைக்கு வருகிறது .
திரு ஜி ஆர் சுவாமிநாதன் புகழேந்தி ஆகியோர் அடங்கிய குழுவினர் Nov 11.2024 அன்று தாமிரபரணி நதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உள்ளாட்சி அமைப்புகள் எடுத்த நடவடிக்கை குறித்து நேரடியாக ஆய்வுக்கு செல்கிறார்கள் .

மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையர் நீதி அரசர்கள் ஆய்வுக்கு வருகிறார்கள் என்றவுடன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தற்காலிகமாக தூய்மைப்படுத்தி வைத்திருக்கிறார்கள் .

ஆய்வுக்கு சென்ற நீதி அரசர்களோ அங்கு செல்லாமல் மீனாட்சிபுரம் சிந்து பூந்துறை, சத்திரம் பொது குடியிருப்பு, குறுக்குத்துறை முருகன் கோவில் என்ற பகுதிகளுக்கு சென்று கழிவுநீர் கலப்பதை பார்வையிட்டு இராமயன்பட்டி தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டு ,யாரை ஏமாற்ற இப்படி எல்லாம் செய்கிறீர்கள்; தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யுங்கள் என்று அறிவுரை வழங்கி வந்தனர்

இதேபோல தமிழக அரசு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தையம், கொத்தையம் அருகே வெடிக்காரன் வலசு”அரளிகுத்து குளம் “என்ற நீர் நிலையில் தமிழக அரசு சிப்காட் அமைப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்கிறது .

இரு விவசாயிகள் நீர் நிலையை பாதுகாக்க வேண்டும் அரளிகுத்து குளத்தை பாதுகாத்து இந்த பகுதி விவசாயத்திற்கு உதவி புரிய வேண்டும் என்று வழக்கு தொடுக்க, இதே நீதிபதிகள் நேரடியாக
” கள ஆய்வு-குள ஆய்வு” செய்கிறார்கள். உடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் பதிவுத்துறை ஐஜி அரசுத்துறை அதிகாரிகள் செல்கிறார்கள். கண்ணுக்கு முன்னால் தெரியும் நீர்நிலை அரளிக்குத்து குளத்தை தரிசு நிலம் என்று மாற்றப்பட்டது எப்படி?

பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்போது சரியாக இருக்கிறதா என்று ஆய்வு செய்யாமல் பொய்யாக ஆவணம் எப்படி தாக்கல் செய்தீர்கள் என்று மாவட்ட ஆட்சியரை கண்டித்து நீதிமன்றம் “அரசாங்கத்துடைய “சிப்காட் “திட்டத்திற்கு எதிரானது அல்ல ,அதே நேரத்தில் நீர் நிலையை பாதுகாக்க வேண்டியது அவசியம் இருக்கிறது. உடனடியாக அரளி குத்து குளத்தை தூர்வாரி விவசாயிகள் பயன்பெறும் வகையில் சரி செய்ய வேண்டும் என்று தீர்ப்பு வழங்கிய ” நீர்நிலை காவலர்கள்” இவர்கள் .

ஆறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்கும் பழனியில் புனிதமான வையாபுரி குளத்தில் ஆஸ்பத்திரி ஹோட்டல்கள் மற்றும் நகராட்சி கழிவுகள் எல்லாம் கலக்கிறது.
இதை தடுத்து நிறுத்த வேண்டும் வையாபுரி குளத்தை சுற்றி இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பக்தர்கள் புனித நீராடும் வகையில் வையாபுரி குளத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் யாரும் சொல்ல முடியாத தைரியமான உத்தரவை பிறப்பித்தவர் திரு ஜி ஆர் சுவாமிநாதன் .

போலி பாஸ்போர்ட் விவகாரம் குறித்த வழக்கு – டேவிட்சன் ஆசிர்வாதம் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் குற்றம் சாட்டிய போது அந்த வழக்கை முழுமையாக விசாரித்து பாஸ்போர்ட் மோசடி சம்பவம் நிகழ்ந்த காலத்தில் காவல் ஆணையராக மதுரையில் இருந்து டேவிட்சன் ஆசீர்வாதம் குற்றமற்றவர் .
பாஜகவின் அண்ணாமலையை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது. அவர் இல்லையென்றால் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்காது என்று கூறியவர் .

மதுரை மாவட்டம் உத்தபுரம் ஜாதி ரீதியான பிரச்சனை-பட்டியல் மக்களுக்கு எதிராகதீண்டாமை சுவர் கட்டியிருக்கிறார்கள். கோவிலுக்கு பட்டியல் மக்களை அனுமதிக்க வேண்டும். உத்தப்புரம் முத்தாலம்மன் கோவிலில் பட்டியல் மக்களை அனுமதிக்க வேண்டும் . இது இரண்டாவது வைக்கம் போராட்டம் என்று நீதியரசர் சந்துரு குறிப்பிட்டார்.அந்த சமயத்தில் அஸ்ரா கர்க் IPS மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்தார் . சின்மயா சோமசுந்தரம், பொன் கருணாநிதி ஆவின் முன்னாள் மேலாளர் ஆதிமூலம் ஆகியோரோடு பட்டியல் மக்களை ஆலயத்திற்குள் அழைத்துச் சென்ற நபர்களில் ஒருவன் நான் என்கின்ற அடிப்படையில் இந்த விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் .

பட்டியல் மக்களை ஆலயத்திற்குள் அழைத்துச் சென்ற பின்னர் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு எதிராகமுத்தாலம்மன் கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்டது .
பல ஆண்டு மூடப்பட்ட கோவில் திறக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட பிரிவினர் நீதிமன்றத்தை நாடும்போது” கோவிலை பூட்டி வைப்பது என்பது கடவுளை சிறையில் வைப்பதற்கு சமம் கோவில் திறக்கப்பட வேண்டும். வழிபாடு நடத்தப்பட வேண்டும். அதற்கு தேவையான பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும், தீர்ப்பு கொடுத்தவர் திரு ஜி ஆர் சுவாமிநாதன்.
மதுரையில் நடைபெற்ற முருகன் மாநாடு வாகனங்களில் வருபவர்கள் பாஸ் குறித்து வழக்கு விசாரிக்கும் போது மற்ற கட்சி மாநாடுகளில் பங்கேற்பவர்களுக்கு இதுபோல் கட்டுப்பாடுகள் விதித்திருக்கிறீர்களா ?
அப்படி வண்டி வாகனங்களில் வருபவர்களை அனுமதிப்பது குறித்து காவல்துறை மதுரைக்கு வந்த பிறகு தேவையான விவரங்கள் கேட்கலாமே என்று கேட்டார் உடனே சங்கிகளின் முருகன் மாநாட்டிற்கு அனுமதி கொடுத்துவிட்டார் என்று அவதூறு கிளப்பியவர்களும் இவர்களே . சமீபத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்று சொல்லப்பட்ட தீர்ப்பில் கொடிக்கம்பங்களை அகற்றுவதற்கு முன்பாக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்து அவர்களுக்கு கருத்து கேட்டு அகற்றியிருக்கலாமே, அரசியல் கட்சிகளுக்கான ஜனநாயக மறுக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னவர் திரு ஜி ஆர் சுவாமிநாதன்.

இயற்கையை பாதுகாப்பது, விலங்குகள் நலனில் அக்கறை, மதங்களைக் கடந்து மனிதத்தோடு தீர்ப்புவழங்குதல், மத மோதல் தடுப்பது, நாட்டுப்பற்று வெளிப்படுத்துவது அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அடிபணிய மறுப்பது என நீதியின் பக்கம் நின்று தீர்ப்பு வழங்கிய “நீதி காவலரை” பதவியில் இருந்த போதும் ,
பதவிஓய்வின் பிறகும்
சிந்தையில் இருந்த சித்தாந்தத்தை செயல்படுத்திய முன்னாள் நீதி அரசர்கள்GR சுவாமிநாதனுக்கு எதிராக வன்மத்தோடு மிரட்டும் தொணியில் அவதூறு கிளப்புவதில் ஏதோ சதித்திட்டம் இருப்பதாக சந்தேகிக்கிறேன் .

திராவிட கம்யூனிச இந்து மத வெறுப்பு என எண்ணம் கொண்டவர்களின் கூட்டங்களில் கலந்துகொண்டு பாரதப் பிரதமர் இந்து மத நம்பிக்கை தேச மதிப்பு மீது கொச்சைப்படுத்தல் என பேசிய பெருமக்கள் வாஞ்சிநாதன் என்ற வழக்கறிஞரே முன் முகமாக வைத்து செய்யும் அரசியல் , முன்னாள் நீதி அரசர்கள் மீதான மதிப்பை சந்தேகக் கண் கொண்டு பார்க்க வைக்கிறது .
இவர்கள் நீதிபதியாக இருந்த போது எந்த எண்ணத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கியிருப்பார்கள் என்று யோசிக்கத் தோன்றுகிறது .

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் மதுரை ஆதீனம் குறித்து மற்றும் இந்து மதத்திற்கு எதிராக மட்டும் போராட்டம் நடத்துவதை முன்னெடுத்துச் செல்லும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவருக்கு ஆதரவாக பின்னணியில் இருப்பவர்கள் குறித்து மத்திய மாநில அரசுகள் சந்தேக கண் கொண்டு பார்க்க வேண்டும் .

நீதி அரசர் ஜி ஆர் சுவாமிநாதன் அவர்களின் தீர்ப்பால் பயனடைந்தவர்கள் மற்றும் நீதியின் பக்கம் நின்று வழக்காடிய வழக்கறிஞர்கள் , பதவியில் இருந்த முன்னாள் நீதி அரசர்கள் மற்றும் பொது மனிதர்கள் திரு ஜி ஆர் சுவாமிநாதன் அவர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்க வேண்டாம். அதே நேரத்தில்
ஜி ஆர் சுவாமிநாதன் அவர்களுக்கு எதிராக முன்னாள் நீதி அரசர்கள் சொல்லும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானது கண்டனத்திற்குரியது என்று கூறாதது ;அநீதிக்கு மறைமுகமாக மௌனமாக இருந்து ஆதரவு தெரிவிப்பது போல் இருக்கிறது .

ஒரு நபரை எதிர்த்து இத்துணை பேர் குரல் கொடுப்பதிலிருந்து தெரிகிறது, ஏதோ விஷயத்தை மடைமாற்றம் செய்வதற்கு அரச ஆதரவுடன் இவர்கள் செயல் படுகிறார்களோ என்று சந்தேகிக்க தோன்றுகிறது.

திரு ஜி ஆர் சுவாமிநாதன் அவர்கள் வழங்கிய தீர்ப்பு ஒரு சார்பாக உள்ளது. ஒரு சித்தாந்தக்காரர்களுக்கு ஆதரவாக உள்ளது. ஒரு ஜாதிக்காரர்களுக்கு ஆதரவாக உள்ளது என்பது போல
திரு வாஞ்சிநாதன் வழக்கறிஞர் பேசுவாரே ஆனால் கடந்த ஏழு ஆண்டுகளில் இவரால் வழங்கப்பட்ட ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட வழக்கு நியாயம் பெற்றவர்கள் எல்லாம்
திரு ஜி ஆர் சுவாமிநாதன் அவர்கள் சமூகத்தவரா அல்லது சித்தாந்தக்காரர்களா என்பதற்கு அவர்கள் விடை அளிக்க வேண்டும் .

நீங்கள் அத்தனை பேரும்
உத்தமர் தானா சொல்லுங்கள் .
உங்கள் ஆசை நெஞ்சை தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்
வல்லவர் எல்லாம் நல்லவரானால் இல்லாதவனே பொல்லாதவனாம் பூமியிலே….
நன்மை தீமை என்பது என்ன
பாவ புண்ணியம் என்பது என்ன
பாதையிலே…. என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

  • இராம. இரவிக்குமார்

இந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர்

சமஸ்கிருத நியாயமும் விளக்கமும் (54): கோமுக வ்யாக்ர ந்யாய:

samskrita nyaya - 2026

சமஸ்கிருத நியாயமும் விளக்கமும் – 54

தெலுங்கில்: பி.எஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

கோமுக வ்யாக்ர ந்யாய: – பசுந்தோல் போர்த்திய புலி.

கோமுக: – பசுவின் முகம்,  வ்யாக்ரம் – புலி.

‘மேலுக்கு பசுவைப் போலத் தோற்றமளித்தாலும் (பசுவைப் போல ‘அம்பா’ என்று கத்தினாலும்) உள்ளுக்குள் புலியைப் போன்ற கொடூர குணம் கொண்டிருப்பது’ என்ற பொருளில் இந்த நியாயத்தை எடுத்துக்காட்டுவார்கள்.

சுலோகம்:

சாந்தமுகோ கோமுகவத் அந்தர்யஸ்யாந்தரே வ்யாக்ர: |
தாத்ருஸம் ந விஸ்வயேத் மித்ரம் ஸத்ரும் ச மானவ: ||

பொருள்: வெளியில் பசுவைப் போன்று அமைதியான முகத்தோடு சாது குணத்தைக் காட்டி, உள்ளே  புலியின் கொடூரமான குணத்தை மறைத்திருப்பவரோடு நட்போ, பகையோ கூடாது. இரண்டுமே ஆபத்து.

நம்மிடம் யாராவது மிகப் பணிவோடு இருந்து, அதிகமாக நம்மைப் புகழ்ந்து,  செயற்கையாக நடந்து கொண்டு, இனிமையாகப் பேசி, நட்பு பாராட்டினால், ஏதோ தீங்கு நடக்கப் போகிறது என்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது இந்த நியாயம். 

மேலுக்கு சாதுவைப் போலவும், பரோபகாரியைப் போலவும் ரொம்ப நல்லவனாகவும் காட்டிக் கொள்வார்கள். ஆனால் அவர்களின் நோக்கம் அதற்கு மாறாக இருக்கும். இப்படிப்பட்டவர்கள் வஞ்சிக்கும் எண்ணத்தோடு நண்பனாக நடிப்பார்கள். இது ‘கோமுக வ்யாக்ர நியாயம்’ காட்டும் பார்வை. அவர்களுடைய நைச்சியமான (நீச்சம்) பேச்சில் மயங்கி, அவர்களை நம்பி, அவர்களிடம் நெருங்கி, புலிக்கு பலி ஆவதோ, அல்லது புரிந்து கொண்டு தப்பி ஓடுவதோ நம் கையில் தான் இருக்கிறது.  ஏமாற்றப்பட்டபின் வருந்தி என்ன பயன்? ஏன் இப்படி நடந்தது என்று அழுது என்ன பிரயோஜனம்?

மின்னுவதெல்லாம் பொன்னல்ல. வெள்ளையாக இருப்பதெல்லாம் பாலல்ல என்ற புரிதல் தேவை. விழிப்போடு இருக்க வேண்டும். இது இந்த நியாயம் புகட்டும் பாடம்.

புராணங்களில் புலிகள்:

மாய மான் வேடத்தில் வந்த மாரீசன் ராமனின் அம்புக்கு இரையானான். தெய்வ லீலையாக சீதாதேவி பேசிய கடுஞ்சொற்களைக் கேட்ட லட்சுமணன் அண்ணன் ஸ்ரீராமனைத் தேடிக் கொண்டு சென்றார். அந்த நேரத்தில் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தனியாக இருந்த சீதையை சிறைப்பிடிக்கும் நோக்கத்தில் ராவண அசுரன் பசுந்தோல் போர்த்திய புலியாக அவளைக் கவர்ந்து சென்றதை வால்மீகி மகரிஷி விளக்குகிறார்.

சுலோகம்:

ஸ்லக்ஷண காஷாய சம்வீத: ஸிகாசத்ர உபானஹீ: |
வாமே சாம்சே வஸஜ்யாத சுபேயஷ்டி கமண்டலூ  
பரிவ்ராஜக ரூபேண வைதேஹீ மன்வபத்யத ||

(வால்மீகி ராமாயணம், ஆரண்ய காண்டம், 46 வது சர்க்கம்)

பொருள்: ராவணன் மென்மையான காவி உடை, தலையில் சிகை, கையில் குடை,  கால்களில் பாதணிகள், இடது தோளில் தொங்கிய தண்டம், கமண்டலம் ஆகியவற்றோடு சீதா தேவியை நெருங்கினான்.

“காஷாய தண்ட மாத்ரேண யதி: பூஜ்ய ந சம்சய:” என்பது உலகில் புழங்கும் வழக்கமான கூற்று. சாதுக்களின் அடையாளமான காஷாய உடையைப் பார்த்து சீதா தேவி ஏமாந்தாள். சுபமான வேடம் தரித்து வஞ்சிக்க வேண்டும் என்று வந்ததை வால்மீகி மகரிஷி, “த்ருணை: கூப இவாவ்ருத:” என்று குறிப்பிடுகிறார். ‘புல்லால் மூடப்பட்ட கிணறு  போல’ என்று வஞ்சகத்தை வர்ணிக்கிறார். 

உண்மையில் புலி என்றுமே பசுவின் முகத்தை அணியாது. பசுவைப் போல ‘அம்பா’ என்று கத்தாது. பலவித முகமூடிகளை அணிவதும், வேடங்கள் தரிப்பதும், மோசங்கள் செய்வதும் மனிதர்களுக்கு மட்டுமே உரித்தான கலை. அப்படிப்பட்ட மனிதர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை உபதேசமாக அளிப்பதே இந்த ‘கோமுக வயாக்ர’ நியாயத்தின் நோக்கம்.

வரலாற்றில் பசுந்தோல் போர்த்திய புலிகள்:

நாட்டுப் பிரிவினையின் போதும், ரஜாக்கர்களின் தாக்குதல் நேரத்திலும், காஷ்மீர் பண்டிதர்களைக் கொன்றழித்த வேளையிலும், பெங்கால் மற்றும் பஞ்சாப் பிரிவினைகளின் போதும் நேர்ந்த சோகக் கதைகள் இந்த நியாயத்தை நினைவூட்டுகின்றன.

அருகிலேயே வசித்து, கொடுக்கல் வாங்கல்ளில் ஈடுபட்டு, ‘அங்கிள் ஆன்ட்டி, சித்தப்பா, சித்தி, பாய் பெஹன்’ என்று அழைத்துக் கொண்டு பசுவைப் போல் நடித்த சில புலிகள் பாய்ந்தெழுந்து நம் கோவில்களையும், குருத்வாராக்களையும் இடித்து, விக்ரகங்களைப் பூஜிக்கும் ஹிந்துக்களின் மேல் பாய்ந்த பயங்கரமான கதைகளை சரித்திரம் கூறுகிறது.  ‘காஃபீர்’ பெண்கள் யாரும் இந்தியாவுக்குச் செல்லமட்டாகள். அவர்களை நாங்கள் எடுத்துக் கொள்வோம். “காஃப்ரான் கட்னா அசி திகாலேங்கே” (காஃபீர்களா உங்களை நாங்கள் கத்தரித்துக் காட்டுவோம்), “கிசே மந்திர் விச் கண்ட்டி நஹி வஜ்ஜுகீ ஹூன்” (எந்தக் கோவிலும் இருக்காது. கோவிலில் மணி ஒலிக்காது) என்று மசூதிகளில் இருந்து கூச்சலிட்டுக் கொண்டு ஹிந்துக்களையும் சீக்கியர்களையும் கழுவில் ஏற்றினார்கள். பெண்களை கூட்டு வன்முறை செய்தனர். அவர்களை ஆடையின்றி ஊர்வலம் விட்டார்கள், (இன்றைய பாகிஸ்தானில் அண்மையில் நடந்த இதே போன்ற சோகக் கதையை நேரடியாகப் பார்த்த பிரபல வரலாற்று ஓவியர் கெ.சி.ஆர்யன் வரைந்த படத்தை இன்டர்நெட்டில் பார்க்கலாம். அதே போல் vashisharma.com ல் இருக்கும் நூல்களையும் சோதிக்கலாம். புலிக்கு பலியான பசுக்களைப் பற்றிய கதைகளைப் படித்து அழலாம்).

நிகழ்காலத்தில் பசுந்தோல் போர்த்திய புலிகள்:

அண்மைக் காலத்தில் இந்தியாவில் பல இடங்களில் இந்த ‘கோமுக வ்யாக்ர” கதைகள் நடப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மதம் கொடுக்கும் ஆதரவால் பெற்ற கல்லூரி சீட், பைக், பணம் ஆகியவற்றின் மூலம் அப்பாவிகளான ஹிந்து பெண்களை காதல் என்ற பெயரில் வஞ்சித்து, அவர்களைத் துண்டுதுண்டாக வெட்டி வீசிய செய்திகள், பிள்ளை பெறும் இயந்திராமாகவோ, மனித வெடி குண்டாகவோ மாற்றிய சம்பவங்கள் இந்த ‘கோமுக வயாக்ர’ நியாயத்திற்கு எடுத்துக் காட்டுகள். 

தன்னை ஒரு ஹிந்துவாக அறிமுகம் செய்து கொண்டு, பெயர், வேடம் எல்லாம் மாற்றிக் கொண்டு ‘லவ் ஜிஹாத்’ என்ற பெயரில் அக்கிரமங்கள் செய்து போலீசாருக்கு வசமாகச் சிக்கி தற்போது சிறையில் இருக்கும் ‘வ்யாக்ரம்’ இம்ரான் என்ற ஆட்டோ டிரைவரின்   கதை அண்மையில் இந்தியா டிவிவில் ஒளிபரப்பானது. மதுரா, பிருந்தாவன், போன்ற புனிதத் தலங்களைச் சேர்ந்த மாணவிகளும், திருமணமான பெண்களும் ஒரு ‘கோமுக வ்யாக்ர’த்திற்கு பலியானார்கள். இதுவரை இருபத்து மூன்று ஹிந்து பெண்களை அனுபவித்ததாக வெட்கமின்றி அவன் கூறிக் கொண்டது கொடுமை. ஐம்பது ஹிந்து பெண்களை வலையில் சிக்க வைக்க வேண்டும் என்பது தன் லட்சியம் என்று இம்ரான் போலீசாரிடம் கூறினானாம்.

தேச முன்னேற்றத்திற்குத் தடை:

சுற்றுச் சூழல் பாதுகாப்பு, சமுதாய நலன் என்ற பெயரில் அக்கிரமங்களில் ஈடுபடும் பசுந்தோல் போர்த்திய புலிகளுக்கு நம் தேசத்தில் பஞ்சமே இல்லை. குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்திய பிரதேஷ் மாநிலங்களுக்கு நன்மை தரும் ‘சர்தார்   சரோவர் டாம்’ கட்டமைப்பு தாமதமானதின் பின்னால் தேச விரோத இடது சாரியும் வெளிநாட்டு ஏஜெண்டுகளும் செய்த சதி உள்ளது. சுற்றுச் சூழலுக்கு ஆபத்து என்று முழங்கி மேதாவிகள் இந்த ப்ராஜெக்டிற்கு தடை விளைவித்தார்கள். 1961ல் அஸ்திவாரம் போட்டு, 1987 ல் தொடங்கி, ஒருவழியாக 2017 ல் முழுமையடைந்தது. அதன் பின்னால் இருந்த புலிகளின் முகமூடி விலகியது. இப்படிப்பட்ட முயற்சிகளைக் கொண்டே தோரியம், தாமிரம் போன்ற கனிமங்களைத் தோண்டுவதிலும் தேசதுரோக இயக்கத்தினர்  தடை ஏற்படுத்தினர்.

கிறிஸ்தவ சங்கங்களின் பெயரில் பத்திரிக்கையாளர்களைப் போலவும், மனித உரிமைப்  பாதுகாவலர்களைப் போலவும் இந்த பசுந்தோல் போர்த்திய புலிகள் இந்தியாவுக்கு எதிராக போராட்டங்களை நடத்துகிறார்கள். ‘ஷாஹின்பாக்’ விவசாயிகள் போரரட்டத்தின் பின்னால் இருக்கும் சதி உலகம் அறிந்ததே.

எப்போதாவது மட்டுமே வாயைத் திறக்கும் அப்போதைய பிரதமர் திரு மன்மோகன் சிங் ஒரு கடினமான விமரிசனம் செய்தார். “உரிமைச் சங்கங்களின் பெயரிலும், சுற்றுச் சூழல் பாதுகாப்பின் பெயரிலும் நடைபெறும் போராட்டங்களின் பின்னால் தேச முன்னேற்றத்தைத் தடுக்கும் சதி உள்ளது” என்றார். இது ‘அட்சர சத்தியமான’ கூற்று.

(தொடரும்)