தரித்திரத்தை விரட்டிட தவறாமல் கடைபிடிக்க வேண்டிய வழிகள்…!

hous 1 - 2026
poverty – poor housing in a village

நாம் குடியிருக்கும் வீட்டில் அது குடிசையோ, அல்லது மாளிகையோ எதுவாக இருந்தாலும் நாம் செய்யும் சில காரியங்களால் தரித்திரம் பல்வேறு கஷ்டங்கள், நஷ்டங்கள் வாழ்க்கையில் மாறி மாறி வந்து நம்மை வாட்டி வதைத்துக்கொண்டே இருக்கும்.

நம் கையில் எவ்வளவு தான் பணம் சேர்த்தாலும் அது கையில் தங்காமல் கைவிட்டு சென்று கொண்டே இருக்கும்.

இவ்வாறு ஏற்படும் கஷ்ட நிலைகளை தான் தரித்திரம் நம் வீட்டில் குடி கொண்டிருக்கிறது என்று பெரியோர்கள் கூறுவார்கள்.

அத்தகைய தரித்திரம் நம் வீட்டில் தங்குவது ஏன்? என்பதற்கான காரணங்கள் இதோ

வீட்டில் தரித்திரம் இருப்பது ஏன்?

கழுவபடாத எச்சில் மற்றும் சமையல் பாத்திரங்கள் அதிக நேரமாக சுத்தமாக்கப்படாமல் அப்படியே வைத்திருப்பது.

வீட்டில் உள்ள திருவிளக்கை பெண்கள் ஏற்றி வைத்து வழிபாடு செய்யாமல் ஆண்கள் விளக்கு ஏற்றி வழிபடுவது.

தலைமுடி தரையில் உலா வருவது.

hous 3 - 2026

சூரியன் மறைவுக்கு பின் வீட்டை பெறுக்குவது, சுத்தம் செய்வது, நீர்கொண்டு துடைப்பது.

சூரிய மறைவுக்கு பின்னும் வீட்டில் உள்ளவா்கள் படுக்கையில் உறங்குவது.

எச்சில் பொருள்கள், சமையல் பாத்திரங்கள், காஃபி கப்புகள் ஆகியவை வீட்டில் ஆங்காங்கே சிதறி கிடப்பது.

பெண்கள் தினமும் தலைக்கு குளிப்பவர்களை தவிர மற்றவர்கள் செவ்வாய் வெள்ளி தவிர மற்ற நாளில் தலை குளிப்பது.

ஆண்கள் புதன், வெள்ளி கிழமைகளை தவிர மற்ற நாளில் தலைக்கு குளிப்பது.

சுவற்றில் ஈரம் தங்கவிடுவது.

வீட்டின் சுவற்றில் கரையான்கள் அதிகமாக சேருவிடுவது. ஒட்டடைகள் சேர விடுவது.

கரப்பான்பூச்சி, பல்லி, எலி, பூராண் போன்ற விஷ பூச்சிகள் வீட்டில் உலாவுவது.

அதிகநேரம் ஈர துணிகள் போட்டு வைப்பது.

தேவைக்கு அதிகமான பொருட்கள் வைத்திருப்பது.

உணவு பொருள்கள் வீண் செய்வது, உப்பு, பால், சர்க்கரை, அரிசி போன்றவற்றை தீரும் வரை வாங்காமல் இருப்பது.

hous 2 - 2026

மெல்லிசை கேட்காமல் சதாகாலம் ராஜச இசையை , அபச இசைகளை கேட்பது.

இல்லை, வராது, வேண்டாம் போன்ற வார்த்தைகளை அதிகமாக உச்சரிப்பது.

படுக்கை அறையையும், பூஜை பொருட்களையும் வேலையாட்களை கொண்டு சுத்தம் செய்வது.

வாசலில் செருப்பு துடப்பம் போன்றவற்றால் அலங்கோலப்படுத்தி வைப்பது.

இது போன்ற காரணத்தினால் தான் நாம் தங்கும் வீட்டில் தரித்திரம் குடி கொண்டு, நாம் தொடங்கும் செயல்களில் நஷ்டத்தையும், தடைகளையும் ஏற்படுத்துகிறது.

நாம் தங்கும் வீட்டில் தரித்திரம் இருந்தால் பல்வேறு கஷ்டங்கள், நஷ்டங்கள் வாழ்க்கையில் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும்.

எவ்வளவு தான் பணம் சேர்த்தாலும் அது நம் கையை விட்டு சென்று கொண்டே இருக்கும். இவ்வாறு ஏற்படும் கஷ்ட நிலைகளை தான் தரித்திரம் நம் வீட்டில் குடி கொண்டிருக்கிறது என்று கூறுவார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories