December 6, 2025, 12:19 AM
26 C
Chennai

பேயாய் மாறி பொதுமக்களை அச்சுறுத்திய கல்லூரி மாணவர்கள் கைது!

IMG 20191112 WA0009 - 2025

யுடியூப் சேனலுக்காக பேய் வேடமிட்டு பொதுமக்களை மிரட்டும் செயலில் ஈடுபட்டதாக ஏழு மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் ’கூக்ளி பீடியா’ (Kooky Pedia) என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகின்றனர். எதையாவது புதுமையாக செய்து அதிக பார்வை யாளர்களை ஈர்க்க முடிவு செய்தனர்.

அப்போது ஆஸ்திரேலியாவில் பேய் வேடமிட்டு பொதுமக்களை மிரட்டும் யூடியூப் காட்சி பிரபலமாக இருந்தது தெரிய வந்தது. அதற்கு அதிகமான பாலோயர்கள் இருந்ததும் தெரிந்ததால், அதைப் பின்பற்ற முடிவு செய்தனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு, பெங்களூரு யஷ்வந்தபுரம் அருகே ஷெரீப் நகர் பகுதியில் நள்ளிரவில் களத்தில் இறங்கினர்.

அதன்படி வெள்ளை உடை அணிந்து, அதில் ரத்தக்கறை போல வடிவமைத்து, ஒருவர் சுற்றினார். அந்த வழியாக வந்த பொதுமக்கள் முன்பு திடீரென்று தோன்றி பயமுறுத்தினர்.

இதனால் அவர்கள் பீதியில் ஓடினர். ஒருவரை பேய் வேடமிட்டிருந்தவர் உருட்டுக் கட்டையால் துரத்தினார். அதை மறைவாக நின்று மற்றவர்கள், வீடியோ எடுத்தனர்.

பீதி அடைந்த அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களில் சிலர் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து பார்த்தபோது, பேய் வேடமிட்டிருந்தவர் அவர்களையும் விரட்டினார்.

ஆனால், போலீசார் அதற்கெல்லாம் பயப்படவில்லை. பேய் வேடமிட்டிருந்தவரை மடக்கிப் பிடித்தனர். அப்போது மறைவாக வீடியோ எடுத்துக் கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து, யூடியூப்புக்காக இப்படி செய்கிறோம் என்றனர்.

அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களின் பெயர், ஜான் மல்லிக்(20), நவீத்(20), சஜில் முகமது(21), ஷாகிப்(20), சையத் நபீல்(20), யூசுப் அகமது(20), முகமது ஆயுப்(20) என்பதும் இவர்கள் 7 பேரும் கல்லூரி மாணவர்கள் என்பதும் தெரியவந்தது.

முன் அனுமதியின்றி இந்தச் செயலில் ஈடுபட்டதால், போலீசார் அவர்களை கைது செய்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories