February 19, 2026, 8:02 PM
26.7 C
Chennai

ஆரோக்கிய மந்திரம்…! ஆவியில் வேக்காடு…!

IMG 20191115 WA0003 - 2026

இட்லி வேணும்…! எனக்கு இட்லி வேண்டும்…! இட்லி மட்டும் தான் வேண்டும்…! ஆரோக்கிய மந்திரம்…! ஆவியில் வேக்காடு…!

அனந்தப்பூர் மாவட்டத்தில் இரு மடங்கு உயர்ந்த இட்லி வியாபாரம்.

” எளிதாக ஜீரணமாகும். சாப்பிடுங்க!” என்று கூறும் மருத்துவர்கள்.

சத்தான உணவு என்று பத்திரம் வழங்கும் நியூட்ரிஷியன்கள்.

ஹோட்டல்களில் பெருமளவு அதிகரித்த விற்பனை!

” தினமும் இட்லி தானா?” என்று சாப்பாட்டு மேஜை அருகில் முகம் சுளித்த டயலாக்கை இதுவரை கேட்டிருக்கிறோம்.

ஹோட்டலுக்குச் சென்றாலும் இட்லியை தவிர வேறே வெரைட்டிக்கே முதலிடம் அளித்ததையும் கண்டிருக்கிறோம்.

பலப்பல காம்பினேஷன்களில் தோசையை சுவைத்து உண்டிருக்கிறோம்.

ஆனால் இந்த மாவட்டத்தில் ஹோட்டலுக்கு வரும் கஸ்டமர்கள் மட்டும் “எங்களுக்கு இட்லி தான் வேண்டும்!” என்று மெனு கார்டை பார்க்காமலேயே ஆர்டர் செய்து இட்லி சாம்பார் சாப்பிட்டு “அப்பாடா …!”என்று மகிழ்ச்சியோடு எழுந்து செல்கிறார்கள்.

பெயர்பெற்ற ஒரு ஹோட்டலில் ஒரு நாளைக்கு 2000 இட்லிகள் விற்பனை ஆனது. இப்போது அந்த எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

திடீரென்று இட்லிக்கு இத்தனை டிமாண்ட் ஏன் என்று கேட்கிறீர்களா?

அனந்தபூர் மாவட்டத்தில் மருத்துவமனைகள் எல்லாம் ஜுரத்தால் பாதிக்கப்பட்டவர்களால் நிரம்பி வழிகிறது.

எளிதாக ஜீரணமாகும் இட்லி சாப்பிடுங்கள் என்று மருத்துவர்கள் நோயாளிகளுக்கு அறிவுரை கூறி வருகிறார்கள்.

சாதாரணமாக காலையோ மாலையோ டிபனாக மட்டுமே இட்லியை உண்பது வழக்கம். இப்போது ஏன் ரிஸ்க் என்று மூன்று வேளையும் இட்லியும் சாம்பாரும் சாப்பிட்டு வயிற்றை நிரப்பிக் கொள்கிறார்கள்.

IMG 20191115 WA0002 - 2026

இங்கு மாவட்டம் முழுவதும் இரண்டு மாதங்களாக ஜுரம் தலைவிரித்தாடுகிறது.

ஒரு நாளைக்கு அரசாங்க மருத்துவமனைக்கு 3000 பேர் சிகிச்சைக்கு வருகிறார்கள். அதில் 1000 பேருக்கு மேல் ஜுரத்தால் பாதிக்கப்பட்டவர்கள்.

பலவீனமான அவர்களுக்கு இட்லிதான் சிறந்த உணவு என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பதால் வந்த விளைவுதான் இது.

ஒரு வேளைக்கு மூன்று இட்லி தின்றால் போதும். தேவையான சத்தும் போஷாக்கும் உடலுக்கு கிடைத்து விடுகிறது. எண்ணெய் சேர்ப்பது இல்லை . ஆவியில் வேகுவதால் விரைவில் ஜீரணமாகிறது. தானியம் பருப்பு சாம்பார் காம்பினேஷனில் முழுமையான சரிவிகித உணவு கிடைத்து விடுகிறது என்று திருப்தியாக செல்கிறார்கள் நோயாளிகள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

5 வருடம் ஏமாற்றினார்கள்… ஆட்சியை விட்டு போகும் போதும் ஏமாற்றுகிறார்கள்!

The DMK government, which has been deceiving the people of Tamil Nadu for the last five years, did not stop deceiving the public in its last budget speech.

Entertainment News

Popular Categories