ஆரோக்கிய மந்திரம்…! ஆவியில் வேக்காடு…!

IMG 20191115 WA0003 - 2026

இட்லி வேணும்…! எனக்கு இட்லி வேண்டும்…! இட்லி மட்டும் தான் வேண்டும்…! ஆரோக்கிய மந்திரம்…! ஆவியில் வேக்காடு…!

அனந்தப்பூர் மாவட்டத்தில் இரு மடங்கு உயர்ந்த இட்லி வியாபாரம்.

” எளிதாக ஜீரணமாகும். சாப்பிடுங்க!” என்று கூறும் மருத்துவர்கள்.

சத்தான உணவு என்று பத்திரம் வழங்கும் நியூட்ரிஷியன்கள்.

ஹோட்டல்களில் பெருமளவு அதிகரித்த விற்பனை!

” தினமும் இட்லி தானா?” என்று சாப்பாட்டு மேஜை அருகில் முகம் சுளித்த டயலாக்கை இதுவரை கேட்டிருக்கிறோம்.

ஹோட்டலுக்குச் சென்றாலும் இட்லியை தவிர வேறே வெரைட்டிக்கே முதலிடம் அளித்ததையும் கண்டிருக்கிறோம்.

பலப்பல காம்பினேஷன்களில் தோசையை சுவைத்து உண்டிருக்கிறோம்.

ஆனால் இந்த மாவட்டத்தில் ஹோட்டலுக்கு வரும் கஸ்டமர்கள் மட்டும் “எங்களுக்கு இட்லி தான் வேண்டும்!” என்று மெனு கார்டை பார்க்காமலேயே ஆர்டர் செய்து இட்லி சாம்பார் சாப்பிட்டு “அப்பாடா …!”என்று மகிழ்ச்சியோடு எழுந்து செல்கிறார்கள்.

பெயர்பெற்ற ஒரு ஹோட்டலில் ஒரு நாளைக்கு 2000 இட்லிகள் விற்பனை ஆனது. இப்போது அந்த எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

திடீரென்று இட்லிக்கு இத்தனை டிமாண்ட் ஏன் என்று கேட்கிறீர்களா?

அனந்தபூர் மாவட்டத்தில் மருத்துவமனைகள் எல்லாம் ஜுரத்தால் பாதிக்கப்பட்டவர்களால் நிரம்பி வழிகிறது.

எளிதாக ஜீரணமாகும் இட்லி சாப்பிடுங்கள் என்று மருத்துவர்கள் நோயாளிகளுக்கு அறிவுரை கூறி வருகிறார்கள்.

சாதாரணமாக காலையோ மாலையோ டிபனாக மட்டுமே இட்லியை உண்பது வழக்கம். இப்போது ஏன் ரிஸ்க் என்று மூன்று வேளையும் இட்லியும் சாம்பாரும் சாப்பிட்டு வயிற்றை நிரப்பிக் கொள்கிறார்கள்.

IMG 20191115 WA0002 - 2026

இங்கு மாவட்டம் முழுவதும் இரண்டு மாதங்களாக ஜுரம் தலைவிரித்தாடுகிறது.

ஒரு நாளைக்கு அரசாங்க மருத்துவமனைக்கு 3000 பேர் சிகிச்சைக்கு வருகிறார்கள். அதில் 1000 பேருக்கு மேல் ஜுரத்தால் பாதிக்கப்பட்டவர்கள்.

பலவீனமான அவர்களுக்கு இட்லிதான் சிறந்த உணவு என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பதால் வந்த விளைவுதான் இது.

ஒரு வேளைக்கு மூன்று இட்லி தின்றால் போதும். தேவையான சத்தும் போஷாக்கும் உடலுக்கு கிடைத்து விடுகிறது. எண்ணெய் சேர்ப்பது இல்லை . ஆவியில் வேகுவதால் விரைவில் ஜீரணமாகிறது. தானியம் பருப்பு சாம்பார் காம்பினேஷனில் முழுமையான சரிவிகித உணவு கிடைத்து விடுகிறது என்று திருப்தியாக செல்கிறார்கள் நோயாளிகள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories