முதல்முறையாக குளுகுளு வசதியில் பயணிகள் ரயில்; ஜனவரி முதல் இயக்கம்.!

ELACREK TRIAN - 2026

இந்தியாவில் குறைந்த தூரத்தில் இயக்கப்படவுள்ள முதல் ஏசி பயணிகள் ரயில் தற்போது மும்பையில் உள்ள குர்லா கார் ஷெட்டிற்கு வந்துள்ளது.

12 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயில் விரைவில்,தானே முதல் துறைமுகம் வரையில் பன்வால், வஷி வழியாக இயக்கப்படவுள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு மத்திய ரயில்வே அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த ரயில் ஜனவரி இரண்டாவது வாரத்தில் இருந்து இயக்கப்படலாம் எனக் கூறப்பட்டு வருகிறது.

சாதாரணமாக பயணிகள் ரயிலில் 9 பெட்டிகள் இருக்கும். இந்த ரயிலில் 12 பெட்டிகள் வரை இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.

அனைத்துப் பெட்டிகளும் முற்றிலுமாக குளிரூட்டப்பட்டவை.

மேலும் கூட்டம் அதிகமாக உள்ள சமயங்களில் பெட்டியினுள் காற்று சீராக இருப்பதற்காக ஒவ்வொரு பெட்டியிலும் இரண்டு ஏர் சஸ்பென்சன்கள் வைக்கப்பட்டுள்ளன.

meto trian 2 - 2026

இந்த ரயிலில் மக்கள் வண்டி ஒட்டுநரிடம் பேசுவதற்கும், ஓட்டுநர் பயணிகளிடம் பேசுவதற்கும் இண்டர்காம் மற்றும் ரயில் ரேடியோ வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் பெட்டி எண், முதியவர் பெண்கள் இருக்கைக் குறியீடுகள் அனைத்துமே எல்இடியில் பொறிக்கப்பட்டுள்ளன.

ALSO READ:  வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

பயணிகளின் பாதுகாப்பிற்காக அனைத்துப் பெட்டிகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன.

அவசரக் காலத்தில் ரயிலை நிறுத்துவதற்காக மற்ற ரயில்களைப் போன்றே இதிலும் செயின் கொடுக்கப்பட்டுள்ளது.

இதைப் பயணிகள் இழுத்து ரயிலை நிறுத்தும் போது, பெட்டியின் ஓரங்களில் விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கும்.

அவை செயல்படத்தொடங்கும். இதை வைத்து நிலையத்தில் உதவிக்கு வருபவர்கள் எளிதாக பெட்டியை அடையாளம் காணலாம்.

அதேபோல் அவசர காலத்தில் உதவிக்காக ஒவ்வொரு பெட்டியிலும் வைக்கப்பட்டிருக்கும் இன்டர்காம் மூலம் ஓட்டுநரைத் தொடர்பு கொள்ளலாம்.

அதோடு ரயில் நீண்ட நேரமாக ஒரே இடத்தில் இருந்தாலோ, கதவுகள் தன்னிச்சையாக திறக்கவில்லை என்றாலோ, கதவுகளை நாமாக திறப்பதற்கான வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories