குடியுரிமை, பதிவேடு… அடுத்து என்ன நடக்கும்?!

Published:

modi amitsha - 2026

CAA விற்கு பிறகு அடுத்து வரப்போகிற #NRC எனப்படும் இந்திய குடிமகன்களுக்கான அதிகார புத்தகத்தில் ஒவ்வொரு இந்திய குடிமகனும் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஆனால் அப்படி செய்யப் போவதில்லை என போராளிகள் பலரும் அறிவித்துள்ளனர். சரி, இதை இப்படியே மோதிஜியும் அமீத் ஷாவும் விட்டு விடுவார்களா? அடேய், போராளி கூமுட்டைகளா புரிந்து கொள்ளுங்கள் அடுத்து என்ன நடக்கும் என்று..!

அரசாங்கத்திடம் ஏற்கனவே இந்திய குடிமகன்களின் அனைத்து விவரங்களும் ஆதார், பான் கார்டு, ரேஷன்கார்டு, டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், எரிவாயு இணைப்பு, வங்கிக் கணக்கு இன்னும் பல ஆவணங்கள் மூலமாக பத்திரமாக உள்ளது.. இப்போது நீங்கள்.. நான் NRC ல் பதிவு செய்து கொள்ள மாட்டேன் என்றால் என்ன நடக்கும்?

உங்களை உடனே நாடு கடத்தி விட மாட்டார்கள்.. தைரியமாக இருங்கள்..

மத்திய அரசு ஒரு கட் ஆஃப் டேட்ஐ உதாரணமாக 30/08/2020 வரை நீங்கள் NRC ல் பதிவு செய்து கொள்ளுங்கள் என்று அறிவுறுத்துவார்கள். நீங்கள் செய்யவில்லை என்றால் 01/10/2020 முதல்…

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

1) உங்களது மொபைல் போனுக்கு NRC யிலிருந்து ஒரு மெசேஜ் வரும்.. இனிமேல் இந்த மொபைல் சேவை உங்களுக்கு நிறுத்தப்படுகிறது என்று..!

2) உங்கள் வங்கியிலிருந்து ஒரு கடிதம் வரும்…நீங்கள் NRC ல் பதிவு செய்து கொள்ளவில்லை என்றால், உங்கள் வங்கிக் கணக்கு முடக்கப்படும் என்று..!

3) நீங்கள் வீட்டு உரிமையாளராக இருந்தால், நீங்கள் பிராப்பர்ட்டி டாக்ஸ் கட்ட முடியாது..பிறகு உங்களது மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு, டிவி இணைப்பு, கேஸ் இணைப்பு, ரேஷன் கார்டு இவை ரத்து செய்யப்படும். மேலும் நீங்கள் புது சொத்துக்களும் வாங்க முடியாது..!

4) உங்களது டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்

5) உங்களது பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும்

6) நீங்கள் வாடகை வீட்டில் இருப்பவராக இருப்பின், வீட்டு உரிமையாளருக்கு உங்களை காலி செய்யச் சொல்லி நோட்டீஸ் அனுப்பப்படும்

7) நீங்கள் வேலை பார்ப்பவராக இருப்பின், உங்களது நிறுவனத்திற்கு கடிதம் செல்லும்

???? நீங்கள் சுய தொழில் செய்பவராக இருந்தால், உங்களது டிரேட் லைசென்ஸ் கேன்சல் செய்யப்படும்..

ALSO READ:  இமயமலையில் சீனக் கட்டுமானங்களே வெள்ளத்திற்குக் காரணமா?

9) நீங்கள் ஒரு கம்பெனியின் இயக்குநராக இருப்பின் அந்த கம்பெனி ஆர்ஓசி (ROC) யால், முடக்கப்படும்..!

உங்களது நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருக்கு அனைத்து சான்றிதழ்களும்…உதாரணமாக Company Registration, PAN, GST இவையெல்லாம் தாற்காலிகமாக முடக்கப்படும்.

10) IRCTC மூலமாக ரயிலில் முன்பதிவு செய்ய முடியாது. அந்த கணக்கு முடக்கப்படும்…

மேலே குறிப்பிட்டுள்ளது வெறும் சாம்பிள் மட்டும்தான். இன்னும் நிறைய ஸ்பெஷல் ஐட்டங்கள் இருக்கும். அவை என்னென்ன என்று நண்பர்கள் மேலும் இந்த லிஸ்டை விரிவு படுத்தலாம்..!

இப்படி எல்லாம் நடக்குமா என்று யோசிக்க வேண்டாம்…நடக்கக் கூடிய சாத்தியங்கள் உண்டு…நான் கேள்வித் தாளை லீக் செய்து விட்டேன்…

புத்திசாலித்தனமாக இருக்க வேண்டியது உங்கள் சமத்து..????????

Girish DS ஆங்கில பதிவிலிருந்து சில புல்லட் பாயிண்ட்டுகள்..!

  • ஸ்ரீதரன் ஸ்ரீனிவாசன், (Sridharan Srinivasan)

Related articles

Recent articles

spot_img