மோடியின் பியூட்டி டிப்ஸ்… அந்த ரகசியத்தை வெளியிட்ட பிரதமர்!

IMG 20200124 WA0085 - 2026

ரகசியத்தை வெளியிட்ட பிரதமர் மோடி. முகம் பிரகாசமாக பொலிவோடு விளங்குவதற்கு காரணம் இதுவே என்று அந்த ரகசியத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி.!

நீண்ட நாட்களுக்கு முன் ஒருவர் என்னிடம் கேள்வி எழுப்பினார். “மோடிஜி! உங்கள் முகம் எவ்வாறு எவ்வளவு பிரகாசமாக இருக்கிறது? என்று கேட்டார். அவருக்கு நான் இவ்வாறு பதில் அளித்தேன்.

“நான் மிகவும் கடினமாக உழைக்க கூடியவன். அதனால் நெற்றியில் வியர்வை பெருகும். அப்பொழுது முகத்தை வியர்வையால் மசாஜ் செய்து கொள்வேன். அதனால்தான் என் முகம் ஒளியோடு விளங்குகிறது என்று கூறினேன் என்றார்.

IMG 20200124 WA0084 - 2026

குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடந்த சாகச பாலர் விருது நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்.

அப்போது பால புரஸ்கார் விருது பெற்ற சாகச சிறுவர்களுக்கு பிரதமர் பல அறிவுரைகளையும் ஐடியாக்களையும் அளித்தார்.

” ஒவ்வொருவரும் வியர்வை சிந்த உழைக்க வேண்டும். ஒரு நாளைக்கு நான்கு முறை வியர்வை வழிய கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டும்” என்றார்.

“வாழ்க்கையில் எத்தனை விருதுகள் பெற்றாலும் கஷ்டப்பட்டு உழைப்பதை நிறுத்த கூடாது. இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. சிலர் தம் திறமைக்கு ஏற்ப பரிசும் மதிப்பும் கிடைத்தவுடன் கர்வம் கொள்வார்கள். மேற்கொண்டு வேலை செய்வதை நிறுத்தி விடுவார்கள். வேறு சிலர் எத்தனை அவார்டு வந்தாலும் அவற்றை ஊக்கமூட்டும் விதமாக ஏற்று மேலும் உற்சாகமாக உழைத்து முன்னேறுவார்கள். அவார்ட் கிடைத்ததும் இனி சாதிப்பதற்கு எதுவுமில்லை என்று எண்ணக்கூடாது. பரிசுகள் வாழ்க்கைக்கு ஆரம்பப் படிகள் என்று எண்ண வேண்டும்” என்று சிறுவர்களிடம் பிரதமர் எடுத்துரைத்தார்.

IMG 20200124 WA0081 - 2026

இது குறித்து இங்கு நான் ஒரு சட்டத்தை இயற்றி விட்டதாக எண்ணுகிறேன் என்று பிரதமர் ஜோக் அடித்தார்.

இத்தனை சிறிய வயதில் நீங்கள் வயதுக்கு மீறிய திறமையையும் சாகசத்தையும் காட்டி உள்ளீர்கள் என்பதை பார்க்கும்போது எனக்கு வியப்பாக உள்ளது. எதிர்காலத்தில் இன்னும் மிகப் பல அரிய செயல்கள் செய்வதற்கு இது ஊக்கமளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். உங்களிடமிருந்து நானும் ஊக்கமும் உற்சாகமும் பெறுகிறேன் என்றார் பிரதமர் மோடி.

49 சிறுவர்கள் இந்த நிகழ்ச்சியில் பால புரஸ்கார் விருது பெற்றார்கள்.

IMG 20200124 WA0082 - 2026

இவர்கள் ஜம்மு காஷ்மீர், அருணாச்சல பிரதேஷ், மணிப்பூர் மற்றும் பல மாநிலத்தைச் சேர்ந்த சிறுவர்கள். கலை, கலாச்சாரம், சமூக சேவை, விளையாட்டு, கல்வி போன்ற பல பிரிவுகளில் இவர்களுக்கு பால புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.

அவர்களுள் உலகெங்கும் 50க்கு மேல் மேஜிக் ஷோ நடத்திய 12 வயது தர்ஷ் மலானி, தபலா வாசிப்பில் திறமை பெற்ற 11 வயது மனோஜ்குமார் லோஹர் உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories