December 6, 2025, 7:10 AM
23.8 C
Chennai

அரசு நிலத்தில் முறைகேடாக கட்டிய சர்ச்: நீதிமன்ற உத்தரவில் இடிக்கச் சென்றால் தடுத்து போராட்டம்!

court church demolished action - 2025

அரசு நிலத்தில் முறைகேடாக மதமாற்றச் செயல்களுக்காக கட்டப்பட்ட சர்ச் ஒன்றை நீதிமன்ற உத்தரவில் இடிக்கச் சென்ற போது, அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து, கிறிஸ்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை குரோம்பேட்டை துர்காநகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள மலை உச்சியில் இந்திய சுவிசேஷ சபையின் சர்ச் ஒன்று உள்ளது. அரசுக்கு சொந்தமான இடத்தில் உள்ள இந்த சர்ச்சினை அகற்றும்படி அப்பகுதியைச்சேர்ந்தவர்கள் இருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் அந்த சர்ச்சினை இடிக்கும் படி உத்தரவிட்டது. இதை எதிர்த்து சர்ச் நிர்வாகத்தினர் மேல்முறையீடு செய்தனர். அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை அடுத்து பல்லாவரம் தாசில்தார் ராஜேந்திரன் தலைமையில் வருவாய்த்துறையினர் அந்த சர்ச்சினை அகற்ற ஜே.சி.பி. எந்திரத்துடன் நேற்று அங்கே சென்றனர்.

காவல் உதவி ஆணையர்கள் அசோகன், சகாதேவன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். ஆனால் அந்த சர்ச்சினை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிறிஸ்தவர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

அங்கிருந்த பாஸ்டர் ஒருவர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்தனர். மேலும் சர்ச்ச்சின் கதவைப் பூட்டி உள்ளே அமர்ந்து கொண்டவர்களை வருவாய்த்துறையினர் வெளியேற்றினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வெளியேற்றிய பின்னர் சர்ச்சினை இடிக்கும் பணியை தொடங்கினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் வேனில் ஏற்றி சென்று அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்து பின்னர் அவர்களை விடுவித்தனர்.

இதுதொடர்பாக வருவாய்த் துறையினர் கூறும்போது, “சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படியே போலீஸ் பாதுகாப்புடன் சர்ச் இடிக்கப்படுகிறது. இது குறித்து சர்ச் நிர்வாகத்துக்கு முன்னரே தகவல் தெரிவித்து விட்டோம்” என்றனர்.

முறைகேடான வகையில் நிலத்தை ஆக்கிரமித்து அதில் சர்ச்சு கட்டுவதும், அவ்வாறு கட்டப்படும்போது எதிர்ப்பு தெரிவித்தால், அவர்களை மிரட்டியோ அதிகாரிகள் மற்றும் போலீஸ் துணை கொண்டு அடக்கி வைப்பதும், பின்னர் இது போன்று சர்ச்சு கட்டி நீதிமன்றம் உணர்ந்து உத்தரவு போட்டால் அதனை மதிக்காமல் தங்கள் நோக்கம் போல் செயல்படுவதும் வெகுகாலமாகவே மக்களால் பார்க்கப்பட்டு வருவதுதான் என்றனர் சிலர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories