மயங்கி விழுந்து உயிரை விட்டவரை… போலீஸ் அடித்து உயிரிழந்ததாகக் கதை விட்டு… ஊடகம் கூப்பாடு போட்டு… என்ன இதெல்லாம்?!

madurai fake claim on police1 - 2026

மதுரை கருப்பாயூரணி பகுதியில் இயற்கையாக மயங்கி விழுந்து இறந்த மாமனாரை, போலீசார் அடித்ததால் அவர் உயிரிழந்துவிட்டார் என்று கூறிய அவரது மருமகன், பிரேத பரிசோதனைக்கு உடலைக் கொண்டு செல்ல முயன்றதால், வேறு வழியின்றி உண்மையை ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கேட்டார்.

மதுரை மாவட்டம் கருப்பாயூரணி முகமது சேட், அப் பகுதியில் கறிக்கடை நடத்தி வருகிறார். தமிழகம் முழு வதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. ஆனால் அரசு கொடுத்த சலுகையை மீறி, கருப்பாயூரணியில் கடைகள் பல திறக்கப்பட்டதால், மக்கள் கூட்டம் அந்தப் பகுதியில் அலைமோதியது.

அப்போது அந்த வழியாக ரோந்து வந்த போலீசார், கடைகளை அடைக்கும்படி கூறினர். அங்கிருந்த முகமது சேட், தன் கறிக்கடையை மூட தாமதம் செய்தார். கடையை விரைந்து பூட்டும்படி போலீசார் சத்தம் போட்டனர்.

இந்நிலையில், கடைக்கு வெளியே நின்றிருந்த முகமதுசேட்டின் மாமனார் அப்துல் ரஹீம் (75), திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்தார். அவரை பரிசோதித்தபோது, அவர் இறந்துபோனது தெரியவந்தது.

ஆனால், கறிக்கடை முகமதுசேட் மற்றும் அவரது உறவினர்கள் ஒன்று திரண்டு, போலீசார் அடித்ததால்தான் அப்துல்ரஹீம் உயிரிழந்துவிட்டார் என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

இதை அடுத்து அங்கே போலீசார் (குவிக்கப் பட்டனர். செய்தி சேகரிக்கச் சென்ற நிருபர்களிடமும், கறிக்கடை முகமதுசேட் உறவினர்கல், “போலீசார் அடித்ததால்தான் அப்துல் ரஹீம் உயிரிழந்தார்’ என்று பேட்டி அளித்தனர்.

அப்போது டிஎஸ்பி தலைமையிலான போலீசார் அங்கே வந்தனர். “போலீசார் அடித்ததில் இறந்தார் என்று நீங்கள் கூறினால், உடனடியாக புகார் ஒன்று கொடுங்கள். நாங்கள் வழக்குப்பதிவு செய்து, உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க வேண்டும்” என்று கூறினர்.

பிரேத பரிசோதனை என்றதும் பதறிய முகமதுசேட், “போலீ சார் அடித்ததில் என் மாமனார் உயிரிழக்கவில்லை. அவர் திடீரென மயங்கி விழுந்துதான் உயிரிழந்தார். போலீசார் என் கடையை அடைக்கச் சொல்லி மிரட்டியதால், நான் அவ்வாறு கூறினேன்” என்றார்.
இதை அடுத்து, அவர் சார்ந்த ஜமாத்தார் முன்னிலையில் இதனை எழுதிக் கொடுத்து விட்டு, முகமது சேட் தன் மாமனார் அப்துல் ரஹீம் உடலை பெற்றுக் கொண்டார்.

இவ்வளவு நடந்த பின்பும், காலை முதலே ஊடகங்களில் போலீசார் அடித்ததில் கறிக்கடை முகமது சேட்டின் மாமனார் அப்துல் ரஹீம் உயிரிழந்தார் என்று, சம்பந்தப் பட்ட நபர் சொன்னதை மட்டுமே உண்மையான செய்தியாக எண்ணி தொடர்ந்து ஒளிபரப்பிய நிலைமையில் தமிழக ஊடகங்கள் உள்ளனவே என்று பொதுமக்கள் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகத் தளங்களில் திட்டியபடி பதிவுகளைப் போட்டுக் கொண்டிருந்தனர் .

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?
https://twitter.com/KalyanBJP/status/1247468211399839744

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories