January 20, 2025, 7:23 AM
23.3 C
Chennai

அரசு விளம்பரங்களை நிறுத்த சோனியா கூறிய யோசனை! வலுக்கும் எதிர்ப்பு!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்திய அரசு நாடு முழுதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மக்களை வீடுகளுக்குள் தனிமைப் படுத்தலில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது! தொழிற்சாலைகள் முடங்கியுள்ளன. இதனால் நிதி நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை அரசுமேற்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், அரசின் சிக்கன நடவடிக்கைக்கு உதவியாக, தனது யோசனைகளைக் கூறியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சோனியா காந்தி. அதில், அரசு விளம்பரங்களை நிறுத்துமாறு அவர் கூறியுள்ள யோசனைக்கு பலதரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. குறிப்பாக, தனியார் வானொலி நிறுவனங்கள் தங்கள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன.

அடுத்த 2 ஆண்டுகளுக்கு மத்திய அரசு விளம்பரங்கள் தருவதை நிறுத்த வேண்டும் என சோனியா காந்தி அளித்துள்ள யோசனைக்கு அகில இந்திய தனியார் ரேடியோ நிறுவனங்களின் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

முன்னதாக, நாடு சந்தித்து வரும் சவால்களை எதிர்கொள்ள தனது யோசனைகளை தெரிவித்து சோனியா காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் 5 அம்சங்களைக் குறிப்பிட்டு அரசு சிக்கனமாக செயல்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.

அந்தக் கடிதத்தில், ‘‘அடுத்த 2 ஆண்டுகளுக்கு அரசு மற்றும் அரசு பொது நிறுவனங்களின் விளம்பரங்களை தொலைக் காட்சி, பத்திரிகைகள் மற்றும் இணைய தளங்களுக்கு வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும். மக்களின் பொது சுகாதாரம் தொடர்பான கோவிட் 19 குறித்த விளம்பரங்களுக்கு அதில் விலக்கு அளிக்கலாம்.

ALSO READ:  ஐந்து நாள் கொண்டாடப்படும் அட்டகாசமான தீபாவளி!

இதன் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு சராசரியாக 1250 கோடி ரூபாய் மிச்சமாகும். இந்தத் தொகை கோவிட் 19 பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் சமூக பாதிப்புகளை சரி செய்ய பயன்படும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு அகில இந்திய தனியார் ரேடியோ நிறுவனங்களின் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவை பொறுத்த மட்டில், வானொலிகள் அந்தந்தப் பகுதி மக்களுக்கு அவர்கள் மொழியில், அவர்கள் எண்ணத்துடன் தகவல்களையும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் ஒலிபரப்பி வருகிறது.

மேலும், அரசின் திட்டங்கள், நிகழ்ச்சிகள், செயல்பாடுகள் மற்றும் உள்ளூர் தகவல்களையும் வழங்கி வருகின்றன. அண்மைக்காலமாக, வானொலி நிறுவனங்கள் பெரும் இக்கட்டில் தவித்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே அவை பெரும் சரிவை சந்தித்து வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளில் 20 சதவீதத்திற்கும் மேலாக விளம்பர வருமானம் குறைந்துவிட்டது.

இந்த நிலையில் அரசு விளம்பரத்தையும் நிறுத்தும் சோனியாவின் யோச்னையைக் கேட்டால் ரேடியோ நிறுவனங்கள் பெரும் பாதிப்பைச் சந்திக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

ALSO READ:  16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் செல்போனில் சமூகத் தளங்கள் பயன்படுத்த தடை! எங்கே தெரியுமா?

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திருமுருகாற்றுப் படையில் திருப்பரங்குன்றம்!

முதலில் திருப்பரங்குன் றமாகிய படைவீட்டைப் பற்றிச் சொல்கிறார். முருகப்பெருமான் ஆறு படைவீடு களில் எழுந்தருளியிருக்கிறான் என்ற வழக்கு, பலகால மாகத் தமிழ் நாட்டில் இருக்கிறது.

ஐதராபாத் ரயிலை தென்காசி வழியாக இயக்கக் கோரிக்கை!

திருநெல்வேலி தென்காசி ராஜபாளையம் சிவகாசி விருதுநகர் பாதையில் மாற்றி இயக்கவும் திருவனந்தபுரம் வடக்கு-செங்கோட்டை-மதுரை-தாம்பரம்

முருக பக்தர்களை திமுக அமைச்சர் சேகர் பாபு அவமதித்த விவகாரம்; இந்து முன்னணி கண்டனம்!

திருச்செந்தூரில் முருக பக்தர்களை திமுக., அமைச்சர் சேகர்பாபு அவமதித்த விவகாரத்தில், இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது அந்த அமைப்பின்

பயணிகள் கவனத்துக்கு… நெல்லை சிறப்பு ரயில் சேவையில் மாற்றம்!

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. திருநெல்வேலி சிறப்பு விரைவு ரயில் சேவையில் மாற்றம்எழும்பூர்...