கடைக்காரர் யாருமில்லை… வியாபாரம் கச்சிதமாக… நேர்மையாக! எங்கே தெரியுமா?

shops without owners
shops without owners
  • சொந்தக்காரர் இல்லாத கடைகள்…
  • எங்கோ அல்ல… இந்தியாவில்தான்…

இங்கு ஒரு கடை உள்ளது. அதில் தேவையான பொருட்கள் எல்லாம் உள்ளன. ஆனால் விற்பதற்கு கடையின் சொந்தக்காரர் மட்டும் இருக்க மாட்டார். பின் எவ்வாறு வாங்குவார்கள்? அது ஒன்றும் சிரமமில்லை. நீங்கள் எடுத்துக்கொள்ளும் பொருளுக்கான விலை அங்கு போர்டில் எழுதியுள்ளது. அதன்படி பணத்தை அங்கு வைப்பதோ அல்லது ஆன்லைனில் பேமென்ட் செய்வதோ செய்து வாங்கிச் செல்கிறார்கள்.

ஒருவேளை பணம் செலுத்தாமல் பொருட்களை எடுத்துச் சென்று விடுவார்கள் என்று சந்தேகப்படுகிறார்களா? அது போல் என்றுமே நடந்தது இல்லை. இந்த கடை நேர்மைக்கும் நம்பிக்கைக்கும் பெயர் போனதாக உள்ளது. இந்த கடை குறித்து அறிந்தவர்கள் யாருமே ஏமாற்ற மாட்டார்கள்.

சரி.. இந்த கடை எங்குதான் உள்ளது? வெளிநாட்டில் என்று நினைக்கிறீர்கள் அல்லவா? அல்ல அல்ல…

shops without owners
shops without owners

நம் பாரத தேசத்தில் தான் உள்ளது. மிசோரம் தலைநகர் ஐஸ்வால் அருகில் உள்ள கிராமத்தில் இதுபோன்ற கடைகள் தென்படுகின்றன. இந்த பழக்கத்தை அங்கு ‘நாகஹா லோ டாவர்’ என்றழைக்கிறார்கள்.

வியாபாரிகள் காலையிலேயே கடைக்கு வந்து சாமான்களை அடுக்கி வைத்துவிட்டு சென்று விடுகிறார்கள். மீண்டும் மாலை வந்து மீதி உள்ள சாமான்களையும் பணத்தையும் எடுத்துச் செல்கிறார்கள்.

பணமோ பொருளோ அவ்வாறு வெளியில் இருந்தாலும் யாரும் திருடுவதில்லை. இந்த கடைகள் கரோனா வைரஸ் பரவும் சமயத்தில் மிகவும் உபயோகமாக இருந்தன.

இந்த பழக்கம் பிடித்திருப்பதால் மணிப்பூரிலும் கூட இதுபோன்ற கடைகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறார்கள்.

இந்த கடைகளின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகின்றன. இந்த முறையை நம் ஊர்களிலும் கடைபிடித்தால் எப்படி இருக்குமோ என்று நெட்டிசன்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories