December 6, 2025, 5:17 AM
24.9 C
Chennai

கேர்லஸ்… கொழுப்பு… சுகாதாரப் பணியாளர் அலட்சியத்தால்… பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

corona vaccine
corona vaccine

மதுரையில் சுகாதாரப் பணியாளர்களின் அலட்சியத்தாலும் வீம்பினாலும், பெண் ஒருவர் பெரும் அவஸ்தைகளைச் சந்தித்துள்ளார். இந்த அவலம், தமிழகத்தில் கொரோனா தாக்குதலின் அடுத்த மையம் என கூறப்படும் மதுரையில் நடந்திருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மாநகராட்சி ஆம்பூலன்ஸ் மதுரையில், வீரவாஞ்சி தெருவில் வந்து ஒரு வீட்டின் அருகே வந்து நின்றதாம். அதிலிருந்து சுகாதார செவிலியர், மாநகராட்சி சுகாதாரத் துறை பணியாளர்கள், கவசம் அணிந்த ஒருவர் என சிலர் இறங்கி வந்துள்ளனர்.

அதில், சுகாதார செவிலியர் மட்டும் ஆம்பூலன்ஸ் நின்ற வீட்டின் அருகே சென்று வாசலில் பெண் ஒருவரை பெயரை சொல்லி அழைத்துள்ளனர். அவர்கள் அழைத்ததால், வெளியே வந்த அந்தப் பெண் அவர்களிடம் என்ன என்று கேட்டுள்ளார்

அந்தப் பெண், மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் மூத்த பொறியாளர்! அவரிடம், சுகாதார செவிலியர் கொரோனா குறித்து கூறி, உடன் வருமாறு வற்புறுத்தியுள்ளனர்.

ஆனால் அந்தப் பெண்ணோ சுகாதார செவிலியரைப் பார்த்து எனக்கு கொரோனா தொடர்பாக எந்த வித அறிகுறியும் இல்லை, நீங்கள் வேண்டுமானால், காய்ச்சலுக்கு சோதிக்கும் கொரோனா கிட் கொண்டு என்னை சோதித்துப் பாருங்கள் என்று கூறியுள்ளார்.

ஆனால், இதை எல்லாம் காதில் போட்டுக் கொள்ளாத அந்த மாநகராட்சிப் பணியாளர்கள் வேறு எதுவும் பதில் அளிக்காமல், அந்தப் பெண் பொறியாளரை ஆம்பூலன்சில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

மறுநாள் காலை விசாரித்தபோது, அந்த ஆம்பூலன்சின் உள்ளே ஏழு பேர் அமர்ந்திருந்தனராம். அந்த வேன் மதுரையில் பல இடங்களில் சுற்றி விட்டு, மதுரை அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டின் வாசலில் நிறுத்தப்பட்டு, ஆம்பூலன்சில் இருந்த அனைவரும் கீழே இறங்கச் செய்யப் பட்டுள்ளனர்.

அப்போது அங்கிருந்த அலுவலர் ஒருவர், இந்த பெண் பொறியாளர் பெயர் லிஸ்டில் இல்லையே, ஏன் அழைத்து வந்தீர்கள் என்று சுகாதாரப் பணியாளர்களிடம் கேட்க, அவர்களும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், அந்தப் பெண்ணை, வாசலோடு வீட்டுக்குப் போங்க… ஆனா 14 நாட்கள் வீட்டிலே தனிமைப் படுத்திக்குங்க… என்று கூறி அனுப்பினராம்.

எந்தவித அறிகுறியும் இல்லாமல், வீட்டில் அமைதியாக தன் வேலையைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த பெண்ணை, கொரொனா அறிகுறி என்று சொல்லி கொரோனா அறிகுறியுடன் வந்த சிலருடன் ஒன்றாக வேனில் அமர வைத்து அழைத்துச் சென்று, இப்போது அந்தப் பெண்ணுக்கும் கொரோனா பீதியைக் கிளப்பி விட்ட அந்த மாநகராட்சிப் பணியாளர்களை என்னவென்று சொல்வது? அவர்களை என்ன செய்வது?

இருந்தாலும், அந்தப் பெண்ணும், மாநகராட்சி அதிகாரிகளின் சொல்லை மதித்து வீட்டுக்குள்ளே இருந்து வருகிறார் என்பதுதான் கூடுதல் தகவல்!

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories