கேர்லஸ்… கொழுப்பு… சுகாதாரப் பணியாளர் அலட்சியத்தால்… பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

corona vaccine
corona vaccine

மதுரையில் சுகாதாரப் பணியாளர்களின் அலட்சியத்தாலும் வீம்பினாலும், பெண் ஒருவர் பெரும் அவஸ்தைகளைச் சந்தித்துள்ளார். இந்த அவலம், தமிழகத்தில் கொரோனா தாக்குதலின் அடுத்த மையம் என கூறப்படும் மதுரையில் நடந்திருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மாநகராட்சி ஆம்பூலன்ஸ் மதுரையில், வீரவாஞ்சி தெருவில் வந்து ஒரு வீட்டின் அருகே வந்து நின்றதாம். அதிலிருந்து சுகாதார செவிலியர், மாநகராட்சி சுகாதாரத் துறை பணியாளர்கள், கவசம் அணிந்த ஒருவர் என சிலர் இறங்கி வந்துள்ளனர்.

அதில், சுகாதார செவிலியர் மட்டும் ஆம்பூலன்ஸ் நின்ற வீட்டின் அருகே சென்று வாசலில் பெண் ஒருவரை பெயரை சொல்லி அழைத்துள்ளனர். அவர்கள் அழைத்ததால், வெளியே வந்த அந்தப் பெண் அவர்களிடம் என்ன என்று கேட்டுள்ளார்

அந்தப் பெண், மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் மூத்த பொறியாளர்! அவரிடம், சுகாதார செவிலியர் கொரோனா குறித்து கூறி, உடன் வருமாறு வற்புறுத்தியுள்ளனர்.

ஆனால் அந்தப் பெண்ணோ சுகாதார செவிலியரைப் பார்த்து எனக்கு கொரோனா தொடர்பாக எந்த வித அறிகுறியும் இல்லை, நீங்கள் வேண்டுமானால், காய்ச்சலுக்கு சோதிக்கும் கொரோனா கிட் கொண்டு என்னை சோதித்துப் பாருங்கள் என்று கூறியுள்ளார்.

ALSO READ:  மதமாற்ற விவாதம் ... மீண்டும்!

ஆனால், இதை எல்லாம் காதில் போட்டுக் கொள்ளாத அந்த மாநகராட்சிப் பணியாளர்கள் வேறு எதுவும் பதில் அளிக்காமல், அந்தப் பெண் பொறியாளரை ஆம்பூலன்சில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

மறுநாள் காலை விசாரித்தபோது, அந்த ஆம்பூலன்சின் உள்ளே ஏழு பேர் அமர்ந்திருந்தனராம். அந்த வேன் மதுரையில் பல இடங்களில் சுற்றி விட்டு, மதுரை அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டின் வாசலில் நிறுத்தப்பட்டு, ஆம்பூலன்சில் இருந்த அனைவரும் கீழே இறங்கச் செய்யப் பட்டுள்ளனர்.

அப்போது அங்கிருந்த அலுவலர் ஒருவர், இந்த பெண் பொறியாளர் பெயர் லிஸ்டில் இல்லையே, ஏன் அழைத்து வந்தீர்கள் என்று சுகாதாரப் பணியாளர்களிடம் கேட்க, அவர்களும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், அந்தப் பெண்ணை, வாசலோடு வீட்டுக்குப் போங்க… ஆனா 14 நாட்கள் வீட்டிலே தனிமைப் படுத்திக்குங்க… என்று கூறி அனுப்பினராம்.

எந்தவித அறிகுறியும் இல்லாமல், வீட்டில் அமைதியாக தன் வேலையைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த பெண்ணை, கொரொனா அறிகுறி என்று சொல்லி கொரோனா அறிகுறியுடன் வந்த சிலருடன் ஒன்றாக வேனில் அமர வைத்து அழைத்துச் சென்று, இப்போது அந்தப் பெண்ணுக்கும் கொரோனா பீதியைக் கிளப்பி விட்ட அந்த மாநகராட்சிப் பணியாளர்களை என்னவென்று சொல்வது? அவர்களை என்ன செய்வது?

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

இருந்தாலும், அந்தப் பெண்ணும், மாநகராட்சி அதிகாரிகளின் சொல்லை மதித்து வீட்டுக்குள்ளே இருந்து வருகிறார் என்பதுதான் கூடுதல் தகவல்!

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories