December 6, 2025, 2:40 AM
26 C
Chennai

தமிழகம் முழுதும் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு தடை: அரசாணை வெளியீடு!

friends of police logo
friends of police logo

தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. 

தமிழகத்தில் காவல்துறையினருக்கு உதவுவதற்காக 1993ஆம் ஆண்டு காவல் துறை அதிகாரியால்  பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற போலீஸ் நண்பர்கள் குழு உருவாக்கப்பட்டது. பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே கால் நூற்றாண்டைக் கடந்துவிட்ட இந்த அமைப்பு கடந்த மாதம் சாத்தான்குளம் சம்பவத்தால் பெரிதும் சிக்கலுக்கு உள்ளானது. 

சாத்தான்குளம் வர்த்தகர்களான தந்தை, மகன் கொலை வழக்கில், போலீஸாருடன் இணைந்து பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பைச் சேர்ந்த சிலரும் தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதை அடுத்து, தமிழகம் முழுவதும் அந்த அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்தன. 

இந்தக் கோரிக்கைகளை ஏற்று, பல்வேறு மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தடை விதித்தனர். எனினும், இந்தத் தடைகளின் தொடர்ச்சியாக, காவல் நிலையங்கள் மற்றும் ரோந்து பணிகளில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினரை ஈடுபடுத்தக்கூடாது என்று காவல் உயரதிகாரிகளுக்கு டிஜிபி திரிபாதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர், பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு குறித்து டிஜிபி ஓர் அறிக்கை அளித்தார். அந்த  அறிக்கையை ஏற்று தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 1993ம் வருட அரசாணை ரத்து செய்யப் படுவதாகவும், டிஜிபி.,யின் அறிக்கையை ஏற்று இந்த அமைப்பு தடை செய்யப் படுவதாகவும் அதில் கூறப் பட்டுள்ளது.

friendsof police rescinded
friendsof police rescinded

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories