பகலில் காவலர், இரவில் எழுத்தாளர்! மதுரை மாநகர் காவல் உதவி ஆணையருக்கு சோழன் சேவைச் செம்மல் விருது!

madurai-police
madurai-police

*மதுரை மாநகர் காவல் உதவி ஆணையருக்கு சோழன் சேவைச் செம்மல் விருது.!!

மதுரை மாநகர கட்டுப்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரியாக பணிபுரிந்து வரும் காவல் உதவி ஆணையர் மணிவண்ணன் சேவையைப் பாராட்டி சோழன் சேவைச் செம்மல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது..

தொடர் முயற்சியினால் ஓய்வு நேரத்தை முறையாக பயன்படுத்தி பல்வேறு வகையான ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ள அவர் இதுவரை 250 அனாதைப் பிணங்களை தானே முன்னினன்று நல்லடக்கம் செய்துள்ள சேவையை பாராட்டியும், மாநகரில் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை மேம்படுத்தியமையை பாராட்டியும் இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

மதுரை மாநகர கூடுதல் காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் இவருக்கு பணப் பரிசளித்து பாராட்டியுள்ளார்.
ஓய்வு நேரத்தில் புத்தக வாசிப்பிற்கும் ஆராய்ச்சிகளுக்கும் செலவிட்டதினால் 2011 ஆண்டு திருச்சி பாரதிதாசன் கல்லூரியினால் ‘தமிழ்நாடு அனைத்து மகளீர் காவல் நிலையங்களில் பெண் உரிமைகளுக்கான பங்கு’ என்ற தலைப்பில் சமர்ப்பித்திருந்த ஆராய்ச்சித் தொகுப்பிற்காக வரலாற்றுத் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

2016 ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் மலேசிய இந்திய ஆய்வியல் நிறுவனமும் இணைந்து 500 அறிஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் வாழ்க்கை சுயசரிதையை நூலாக வெளியிட்டுள்ளது. அங்கு வைத்து இவரது சுயசரிதை புத்தகமும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

ALSO READ:  பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பணி நிறைவு காலத்தின் பின்னர், தனித் தமிழ் ஆர்வமுடைய தனது தாயாரின் பெயரான திருமதி K.R. செல்லம்மாள் உலகத் தமிழாராய்ச்சி மையம் என்ற பெயரில் ஒரு ஆராய்ச்சி மையத்தை உருவாக்கி பல அறிஞர்களை இணைத்து ஆண்டு தோறும் கருத்தரங்கங்கள் நடத்துவது, புத்தகங்கள் வெளியிடுவது, ஆராய்ச்சியாளர்கள் இலவசமாக பயன் பெற அனுமதிப்பது, மாணவ/மாணவிகளின் வாசிப்புத் திறனை ஊக்குவிக்க உதவுவது என்று பல ஆக்கபூர்வமான செயல்களுக்காக இப்போதே 4000ற்கும் மேற்பட்ட புத்தகங்களை தனது வீட்டில் சேர்த்து வைத்துள்ளார்.

இவரது அனைத்து ஆக்கபூர்வமான சேவைகளையும் பாராட்டி சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தினால் இந்த விருது வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் பொதுத் தலைவர் மருத்துவப் பேராசிரியர் தங்கதுரை MD, நிறுவனர் முனைவர்.நிமலன் நீலமேகம், வழக்கறிஞர் ராம்பிரபாகர், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந் நிறுவனத்தின் பல நாடுகளின் தலைவர்கள், மாநில, மண்டல ,மாவட்ட மற்றும் தாலுகா ரீதியிலான தலைவர்கள் என பலரும் விருது பெற்ற காவல் உதவி ஆணையரை வாழ்த்திப் பாராட்டினார்கள்.

ALSO READ:  நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

பஞ்சாங்கம் மே 30 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் மே 29 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

நரேந்திர மோதிஜி பிரதமராகப் பதவியேற்று 12 வருடங்கள் நிறைவடைவதையொட்டி சிறப்புப் பதிவு:

Entertainment News

Popular Categories