January 18, 2025, 5:12 AM
24.9 C
Chennai

சின்னத்திரை நடிகை சித்ரா… தூக்கிட்டு தற்கொலை!

vjchitra
vjchitra

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா (வயது 29) சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கேரக்டரில் நடித்து வந்தார் சித்ரா. கடந்த ஆகஸ்ட் மாதம்தான் அவருக்கு தொழில் அதிபர் ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. கொரோனா ஊரடங்கு முடிந்த பின்னர் திருமணத்துக்கான தேதியை முடிவு செய்யவிருந்தார்.

இந்நிலையில், சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகக் கூறப் படுகிறது.

இவர் டிச.9 இன்று அதிகாலை 2.30க்கு, ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் நேற்றிரவு படப்பிடிப்பை முடித்துவிட்டு விடுதி அறைக்கு வந்துள்ளார். தனக்கு திருமணம் நிச்சயிக்கப் பட்டுள்ள ஹேம்நாத் ரவி என்பவருடன் சித்ரா ஒன்றாகவே தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் சித்ரா ஹேமநாத்திடம் தான் குளிக்கச் செல்வதாகக் கூறி அறைக்கு வெளியே செல்லச் சொன்னதாகவும், வெகுநேரம் ஆகியும் அறையின் கதவைத் திறக்காததால், அறைக் கதவைத் தட்டியதாகவும் ஹேம்நாத் கூறியுள்ளார்.

chitra2
chitra2

இதன் பின்னர், விடுதி ஊழியர்களிடம் சொல்லி மாற்று சாவியை எடுத்துவந்து திறந்து பார்த்தபோது சித்ரா அறையில் உள்ள மின்விசிறியில் புடவை மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிய வந்தது.

ALSO READ:  பொங்கலுக்காக... கொத்து மஞ்சள் அறுவடை தீவிரம்!

இது குறித்து நசரத்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது இந்த விபரீத முடிவு சின்னத்திரை நடிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

செகந்திராபாத் – கொல்லம் ரயில் மேலும் ஒரு சேவை நீட்டிப்பு!

முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும். தென்காசி, விருதுநகர் மாவட்ட பயணிகளுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஹிந்துத்துவமே ஒரே தீர்வு!

ரஷ்யாவில் 15 தனி அடையாளங்கள், 15 தனி நாடுகளாக உருவாகின. ஆனால் இங்கோ வாய்ப்பு கிடைத்த போதிலும் 565 சமஸ்தானங்களும் ஒரே நாடாக ஆகின.

ஆன்மீகம் – வாழ்வின் நோக்கம்

வாழ்க்கையின் நோக்கம் என்ன ? இது மகத்தான கேள்வி. நீங்கள் விழிப்புணர்வுடனோ அல்லது தெரியாமலோ இதை கேட்டிருக்கலாம். நம் அனுபவத்தின் அடித்தளமாக இந்த கேள்வி உள்ளது.

பஞ்சாங்கம் ஜன.17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை