இரு தெலுங்கு மாநிலங்களிலும் 500 புதிய கோயில்கள்: ஒய்வி சுப்பாரெட்டி!

Published:

gopooja-in-telangana-1
gopooja-in-telangana-1

இரு தெலுங்கு மாநிலங்களிலும் 500 கோவில்களை கட்ட போகிறோம். கோவிலுக்கு ஒரு கோமாதா நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்த ஒய்வி சுப்பா ரெட்டி அறிவிப்பு.

ஹிந்து தர்ம பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தெலுங்கு மாநிலங்களில் ஐநூறு கோவில்களை கட்டப் போவதாக திருமலா திருப்பதி தேவஸ்தானம் சேர்மன் ஒய்வி சுப்பாரெட்டி கூறினார்.

இவற்றை கிரிஜனங்கள், தலித்துகள், பலவீன வர்கத்தினர், மீன் பிடிப்பவர்கள் இருக்கும் கிராமங்களில் உள்ள காலனிகளில் கட்டப் போவதாக தெரிவித்தார்.

கிழக்கு கோதாவரி மாவட்டம் காகிநாடா பாலா திரிபுரசுந்தரி அம்மன் கோவிலில் ‘கோவிலுக்கு ஒரு கோமாதா’ நிகழ்ச்சியை சனிக்கிழமை தொடங்கி வைத்தார். அவர் உரையாற்றுகையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 25 லிருந்து ஜனவரி 3 வரை 10 நாட்கள் திருமலை கோவிலில் வைகுண்ட துவாரம் திறந்து வைக்கப்படும் என்றும் சாமானிய பக்தர்களுக்கு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறினார். பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பாகவே டிக்கெட் ரிசர்வ் செய்து கொண்டு திருமலைக்கு வரவேண்டும் என்று குறிப்பிட்டார்.

டிடிடி நிகழ்ச்சிகள் பற்றி எதிர்க்கட்சிகள் தீய பிரச்சாரம் செய்கிறார்கள் என்று ஆத்திரம் அடைந்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் விஸ்வரூப், கன்னபாபு, செல்லுபோயின வேணு, எம்பி வங்கா கீதா மற்றும் பலர் பங்கு கொண்டார்கள்

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img