ஆந்திராவில் தொடரும் தாக்குதல்கள்: மேலும் ஒரு ராமர் கோவில் சிலை உடைப்பு!

Published:

karnool-temple-vandolised-1
karnool-temple-vandolised-1

கர்னூல் மாவட்டத்தில் மற்றுமொரு ராமர் கோவில் விக்ரகம் உடைக்கப் பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஒருபுறம் ராமதீர்த்தம் சம்பவம் பக்தர்களை மன வேதனைக்கு உள்ளாக்கி வரும் நேரத்தில் கர்நூல் மாவட்டம் கோசிகி அருகில் உள்ள மர்லபண்ட ஆஞ்சனேய சுவாமி கோவிலின் காலிகோபுரத்தில் இருக்கும் சீதாராமர் விக்கிரகத்தின் கால்களை அடையாளம் தெரியாத குண்டர்கள் சேதப்படுத்தி உள்ளார்கள்.

அதன்பிறகு கோவிலில் நுழைந்து உண்டியலை கொள்ளை அடித்துள்ளார்கள். நேற்று ஆலய அர்ச்சகர்கள் காலை பூஜை செய்வதற்காக சென்றபோது இந்த சம்பவங்களை பார்த்து அதிர்ச்சிக்கு ஆளானார்கள். உடனடியாக கோவில் பொறுப்பாளர்களிடம் செய்தி தெரிவித்ததால் உடனடியாக ஆலய தர்மகர்த்தாக்கள் விசுவநாத ரெட்டி, மௌனய்யா ஆச்சாரி ஆகியோர் விக்கிரகங்களை பரிசீலித்தார்கள்.

ALSO READ: ஜெகனின் ஆந்திரத்தில் அதிகரித்துள்ள இந்து வழிபாட்டுத் தலங்கள் மீதான ‘கிறிஸ்துவ’ தாக்குதல்கள்!

மூன்று நாட்களுக்கு முன்பு மர்லபண்ட ஆஞ்சநேய ஸ்வாமி ஜாத்திரை உற்சவங்கள் மிக விமர்சையாக நடந்தேறின. ஜாத்திரை நடந்து முடிந்த மூன்று நாட்களிலேயே இவ்விதமாக விக்கிரகங்கள் மீது தாக்குதல் நடந்து உண்டியலைத் திருடி உள்ளார்கள் என்பது கவனிக்கத் தக்கது.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

ALSO READ: ஏசு சிலை தலையை துண்டித்தால் எப்படி இருக்கும்?! செயலற்ற ஜெகன் மீது பக்தர்கள் கடுங் கோபம்!

ஜாத்திரைக்கு வந்த பக்தர்கள் சுவாமிக்கு மிகப் பெருமளவில் பிரார்த்தனைகளை, வேண்டுதல்களை செலுத்தி இருந்தார்கள். அதன் காரணமாகவே அடையாளம் தெரியாத குண்டர்கள் சுவாமி ஆலயத்திற்குள் புகுவதற்கு இரும்பு கம்பிகளை வெட்டி உண்டியல் களையும் திருடி உள்ளார்கள் என்று தர்மகர்த்தாக்கள் தெரிவித்தார்கள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img