டபுள் பெட்ரூம் வீட்டை தெலங்காணா அரசுக்கு திரும்ப அளித்த பெண்மணி! காரணம் என்ன?

Published:

flat-returned-to-cm

சித்திபேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமிக்கு டபுள் பெட்ரூம் வீடு ஒதுக்கப்பட்டது. தானும் தன் மகளும் மட்டுமே இருப்பதாக இருப்பதாகவும் பெண்ணுக்கு திருமணமாகி சென்று விட்டால் தான் ஒருவரே இருக்க வேண்டிவரும் என்றும் ஒருத்தருக்காக டபுள் பெட்ரூம் எதற்கு என்று கூறிய லக்ஷ்மியை அமைச்சர் ஹரீஷ் ராவு பாராட்டினார்.

சித்திப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்மணியின் பெயர் இப்போது செய்திகளில் உலாவருகிறது. அரசாங்கம் ஒதுக்கிய டபுள் பெட்ரூம் வீட்டை திரும்பக் கொடுத்து விட்டதே இதற்கு காரணம். அவருடைய நல்ல மனதை பாராட்டி மாவட்ட கலெக்டர் சால்வை அணிவித்து கவுரவித்தார்.

சித்திப்பேட்டையில் அமைச்சர் ஹரீஷ்ராவு தலைமையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் லக்ஷ்மி வீடு தொடர்பான பத்திரங்களை அரசாங்கத்திற்கு திரும்பக் கொடுத்தார். இந்த சந்தர்ப்பத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட வீட்டினை ஏன் திரும்ப கொடுத்து விடுகிறேன் என்று லட்சுமி விவரித்தார்.

தற்போது தானும் தன் மகளும் மட்டுமே இருப்பதாகவும் மகளுக்கு திருமணமாகி மாமியார் வீட்டுக்கு சென்று விட்டால் தான் ஒருவருக்கே டபுள் பெட்ரூம் வீடு எதற்காக என்று குறிப்பிட்டு அதனால் தான் திரும்ப கொடுப்பதாகவும் கூறினார்.

flat-returned-to-cm1

யாராவது மிகவும் ஏழையான குடும்பத்திற்கு இந்த வீடு ஒதுக்கப்பட்டால் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் லக்ஷ்மி குறிப்பிட்டார். தனக்கு வீடு ஒதுக்கியதற்காக அவர் அமைச்சர் ஹரீஷ் ராவுக்கு நன்றி தெரிவித்தார்.

ALSO READ:  செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

மிகவும் பெரிய மனதோடு ஆலோசித்து வீட்டை திரும்ப ஒப்படைத்த லட்சுமியை அமைச்சர் மனப்பூர்வமாக பாராட்டினார். லட்சுமியின் நடவடிக்கை அனைவருக்கும் ஆதர்சமாக இருக்கும் என்று புகழ்ந்தார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img