இந்துக்களின் போராட்டத்துக்கு வெற்றி; விநாயகர் கோயில் எதிரில் உள்ள கல்லறைத் தோட்டத்தை மூட உத்தரவு!

manimukthiswarar tirunelveli e1523274887305

திருநெல்வேலி மாவட்டம் மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற உச்சிஷ்ட கணபதி கோயிலில் இருந்து சில அடி தொலைவில் ஏஜி திருச்சபை என்ற பெயரில் செயல்படும் கிறிஸ்துவ மிஷனரி அமைப்பு, கல்லறைத் தோட்டம் ஒன்றை அமைத்து இருந்தது.

கோயிலுக்கு அருகில் அமைந்திருந்த கல்லறைத் தோட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி உள்ளூர்வாசிகளும் பக்தர்களும் பலமுறை கோவில் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து சட்ட உரிமைகள் ஆய்வகம் அமைப்பின் நடவடிக்கை, மற்றும் இந்துக்களின் பல கட்டப் போராட்டங்கள் ஆகியவற்றின் விளைவாக மாவட்ட நிர்வாகம் தற்போது பணிந்துள்ளது. இதை அடுத்து உடனடியாக அந்தக் கல்லறையை வேறு இடத்துக்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது

manimoorthiswaram-vinayakar-temple
manimoorthiswaram-vinayakar-temple

திருநெல்வேலி மாவட்டம் மணிமூர்த்தீஸ்வரத்தில் அமைந்துள்ள உச்சிஷ்ட கணபதி கோவில் புகழ்வாய்ந்த ஒன்று. உலகிலேயே ராஜ கோபுரம் கொண்ட ஒரே விநாயகர் கோவில் இதுதான் என்பது இதன் சிறப்பு. இந்தக் கோபுர வாசலில் இருந்து சில அடி தொலைவில் கோவில் வாசலிலேயே ஏஜி சர்ச் என்ற மிஷனரி அமைப்பு ஒன்று, நிலத்தை விலைக்கு வாங்கி அதை கல்லறைத் தோட்டமாக பயன்படுத்தி வந்தது. ஆனால், இந்த நிலம் கோவிலுக்குச் சொந்தமானது என்று கூறப்பட்ட நிலையில், கோயிலுக்கு அருகே கிறிஸ்தவர்களின் சடலங்களைக் கொண்டு வந்து, புதைத்து வந்தது இந்துக்களின் மனத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கோயிலுக்கு அருகில் பிற மதத்தினரின் கல்லறைத் தோட்டத்துக்கு எப்படி மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுத்தது, அறநிலையத்துறை ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன.

இதை அடுத்து, உள்ளூர்வாசிகளும் பக்தர்களும் பல முறை கோவில் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். ஆனால், வெறும் புகார்களாலும் கோரிக்கை மனுக்களாலும் எந்தப் பலனும் ஏற்படவில்லை.

இதை அடுத்து, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் களம் இறங்கி, போராட்டத்தில் ஈடுபட்டன. இந்து அமைப்புகளின் கடும் போராட்டத்துக்குப் பின் கடந்த 2018இல் இரண்டு கல்லறைகளில் ஒன்றை மட்டும் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகம் கிறிஸ்துவ அமைப்புக்கு அறிவுறுத்தல் வழங்கியது. ஆனால், சில நாட்களிலேயே, இரண்டு கல்லறைகளிலும் சடலங்களைப் புதைக்கத் தொடங்கியதால், மீண்டும் இந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது.

ALSO READ: விநாயகர் ஆலயம் அருகே கல்லறை கட்டிய கிறிஸ்துவ வன்மம்: காவல் துறையால் அடங்கிப் போன அசம்பாவிதம்!

இந்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு Legal Rights Observatory- LRO என்ற அமைப்பு கல்லறையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியது‌. அதற்கு எந்த பதிலும் கிட்டாத நிலையில் தமிழக வருவாய்த் துறைச் செயலருக்கு மனு அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் அந்தப் பகுதியில் கிறிஸ்தவர் சடலங்களைப் புதைக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் எனவே இனி அங்கு சடலங்கள் புதைக்கப்படாது என்றும் கோவில் தக்கார் உறுதி அளித்தார்.

ஆனால் மீண்டும் அங்கே சடலங்கள் புதைக்கப் பட்டதால் மீண்டும் பிரச்னை பெரிதானது. இதை அடுத்து, நெல்லையில், இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள், பெரிய அளவில் அறவழிப் போராட்டத்துக்கு திட்டமிட்டு அறிவித்திருந்தன. ஆனால், அதற்கு இரு தினங்கள் முன்னரே, இந்து மக்கள் கட்சியினர், அந்தக் கல்லைறைத் தோட்டத்துகுள் புகுந்து, சேதப் படுத்தினர். இதை அடுத்து, இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த இந்து அமைப்பினர், ஒருதலைப் பட்சமான நெல்லை மாவட்ட காவல் துறையின் நடவடிக்கையைக் கண்டித்தும், பிரச்னைக்குக் காரணமான கிறிஸ்துவ அமைப்பு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் செயலற்று வேடிக்கை பார்த்த மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இது தொடர்பில், சட்ட உரிமைகள் ஆய்வகம், போலீஸ் கமிஷனர், துணை கமிஷனர் ஆகியோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டி நோட்டீஸ் அனுப்பியது.

கிறிஸ்துவ மிஷனரி அமைப்பின் தகாத செயலால் மீண்டும் மீண்டும் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் சூழலில், பிரச்னையைத் தவிர்ப்பதற்காக, கல்லறைத் தோட்டம் செயல்படுவதைத் தடுத்து, மாற்று இடத்தில் இயங்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு அரசு அறிவுறுத்தியது.

இதே இடத்தின் அருகில் சற்று தொலைவில் யாதவ சமுதாயத்தைச் சேர்ந்த இடுகாடு ஒன்றும் இருக்கும் நிலையில், அந்த அமைப்பையும் அழைத்து, மாவட்ட நிர்வாகம் பேச்சு நடத்தியது. பின்னர் இது குறித்து முடிவு எடுக்கப் பட்டது.

தங்களது நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும் நிலையில், ஆலய பக்தர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories