நான் முதல்வரின் இரண்டாவது மனைவி… பெண் கூறிய பரபரப்பு புகார்!

Published:

jagan
jagan

நான் முதல்வரின் இரண்டாவது மனைவி… பெண் கூறிய பரபரப்பு.
அதிர்ச்சியளித்த திருப்பம்.

ஆந்திர முதல்வரின் இரண்டாவது மனைவி நான் என்று கூறிக்கொண்டு ஒரு பெண் பரபரப்பை ஏற்படுத்தினாள். தடுக்கச் சென்ற உள்ளூர் மக்கள் மீது கல்லெறிந்தாள். விஷயம் தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரோடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டள். தான் முதல்வரின் இரண்டாவது மனைவி என்று கூறி அட்டகாசம் செய்தாள். அதுவும் முதல்வரின் காம்ப் ஆபீஸ் மற்றும் இருப்பிடமான தாடேபல்லியில்.

முதல்வரின் வீட்டிற்கு மிக அருகிலுள்ள தடேபல்லி மகாநாடு என்ற இடத்தில் இந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

ஆனால் அந்தப் பெண்ணுக்கு மனநிலை சரியில்லை என்பது தெரிந்ததால் போலீசார் அப்பாடா என்று பெருமூச்சு விட்டனர்.

தாடேபல்லி நகர எல்லையில் கிருஷ்ணா நதி தீரத்த்தை ஒட்டி உள்ள மகாநாடு என்ற இடத்தில் மனநிலை சரியில்லாத பெண் போகி பண்டிகையன்று பரபரப்பை ஏற்படுத்தினாள். தான் முதல்வரின் இரண்டாவது மனைவி என்று கூறி தகராறில் ஈடுபட்டாள்.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

அவள் மனநிலை சரியில்லாததால் உள்ளூர் மக்கள் அவளை தடுத்து நிறுத்துவதற்கு முயற்சித்தாலும் இயலாமல் போனது. ஆத்திரமடைந்த பெண் அவர்களை எதிர்த்து அவர்கள் மீது கல்லெறிந்தாள். அதனால் உள்ளூர் மக்கள் தாடேபல்லி போலீஸாருக்கு செய்தி தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மனநிலை சரிஇல்லாத அந்த பெண்ணை பாதுகாப்பில் எடுத்துக்கொண்டு விவரங்களை சேகரித்தனர்.

சிலுக்கலூர்பேட்டை யைச் சேர்ந்த தனலட்சுமி ஆக அடையாளம் கண்டனர். மகாநாடாடைச் சேர்ந்த ஒரு ஒய்சிபி ஆதரவாளரின் புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img