February 22, 2026, 4:57 PM
30.4 C
Chennai

விடாத வாரிசு அரசியல்! மகனுக்கு பட்டாபிஷேகம்? தெலங்காணா முதல்வராக கேடிஆர்?

kcr-ktr
kcr-ktr

பதவி ஏற்பு விழாவுக்கு முகூர்த்தம் கூட ரெடியாமே! தெலங்காணா மாநில முதல்வராக கேடிஆர் எப்போது பொறுப்பு ஏற்பார் என்று டிஆர்எஸ் கட்சித் தலைவர்கள் ஆசையோடு எதிர்பார்த்து வருகிறார்கள்.

டிஆர்எஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கூட கேடிஆர் விரைவில் மாநிலத்திற்கு முதல்வராவார் என்று கூறி வருகிறார்கள். அதன்படி பதவி ஸ்வீகாரத்திற்கு களம் ரெடி ஆகி விட்டதாக தெரிகிறது. தெலங்காணா மாநிலத்தின் இரண்டாவது முதல்வராக பிப்ரவரி 18ஆம் தேதி கேடிஆர் பதவி ஏற்பார் என்பது தற்போது பரபரப்பு செய்தி.

இதன்படி தந்தை கேசிஆர் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்து விட்டதாக தெரிகிறது. இதன்படி புரோகிதர்கள் முகூர்த்தம் குறித்து கொடுத்து விட்டார்களாம்.

இதற்காக கேசிஆர் யாகங்கள் கூட நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. அயுத சண்டி யாகத்தோடுகூட ராஜஸ்மாமளா யாகம் கூட முதல்வர் நடத்தப் போவதாக செய்தி. இந்த யாகங்கள் முழுமை அடைந்த பின்பு மகனுக்கு பட்டாபிஷேகம் செய்து வைப்பார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த இரண்டு மாதங்களாகவே கேடிஆர் முதல்வர் ஆவார் என்ற பிரச்சாரம் ஜோராக நடந்து வருகிறது. மண்டலி சேர்மன் குத்தா ராஜசேகர் ரெட்டி மற்றும் டிஆர்எஸ் தலைவர்கள் கேடிஆருக்கு முதல்வர் பதவி வகிப்பதற்கு அனைத்து தகுதிகளும் உள்ளன என்று கூறிவருகிறார்கள்.

கேடிஆரின் பதவியேற்புக்கு முன்பாகவோ அல்லது அதற்குப் பிறகோ அமைச்சர்கள் ஹரிஷ் ராவு, ஈட்டல ராகவேந்தர் ஆகியோர் கட்சி ஒர்கிங் பிரசிடன்டாக நியமிக்கப்பட உள்ளார்கள் என்று தெரிகிறது. கட்சியின் தலைவராக கேசிஆர் தொடர்வார்.

கேடிஆர் 2014 லிருந்து மாநில அமைச்சராகவும் டிஆர்எஸ் கட்சியின் ஒர்க்கிங் பிரசிடென்டாகவும் பணிபுரிந்து வருகிறார். ஆனால் எதிர்க்கட்சிகள் மட்டும் அப்படிப்பட்டது எதுவும் இருக்காது… நடக்காது என்று எடுத்தெறிந்து பேசி வருகிறார்கள்.

மொத்தத்தில் கேடிஆர் முதல்வராக வரப் போகிறாரா இல்லையா என்ற விஷயம் இன்னும் கொஞ்ச நாட்கள் பொறுத்திருந்தால் தெரிந்துவிடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories