December 6, 2025, 7:10 AM
23.8 C
Chennai

காதலா காமமா? கண்டறிந்து பழகுங்கள்!

lovers
lovers

உங்களது காதலா காமமா? கண்டுபிடிக்க வழிகள் இதோ

காதலில், உங்களை பற்றிய விஷயங்கள் மற்றும் கடந்த கால நினைவுகள் என எதையும் உங்களது காதல் துணையிடம் மறைக்க விரும்பமாட்டீர்கள். பயமும் இருக்காது. காமத்தில், தயக்கம் இருக்கும். உங்களைப் பற்றி பேசும் போதும், உங்கள் காதல் துணையைப் பற்றி பேசும் போதும் தயக்கமும் பயமும் இருக்கும். உங்களை பற்றிய கடந்த கால நினைவுகள் வார்த்தை தவறி கூட வெளிவந்துவிட கூடாது என்கிற அச்சம் உரையாடல் தொடங்கியதில் இருந்து முடியும் வரை இருந்துக் கொண்டே இருக்கும்.

love
love

காதலில், வாக்குவாதம் ஏற்படும் போது தயக்கம் தலை தூக்காது. நினைத்ததை எல்லாம் பேசிவிடுவார்கள். ஆனால், கடைசியில் ஒரு கருத்தில் உடன்பாடு ஏற்படும். காமத்தில், எந்த ஒரு விஷயத்தைப் பற்றி பேச்செடுத்தாலும் மறைத்து மறைத்து பேசுவதிலேயே நேரம் முடிந்துவிடும். கடைசி வரை எந்த உடன்பாடும் இல்லாமல், பதற்றம் மட்டுமே பாக்கி இருக்கும்.

காதலில், ஒருவருக்கு ஒருவர் நேர்மையாக இருப்பார்கள். எந்த ஒரு செயலாக இருந்தாலும், காதலரிடம் கூறிவிட்டு செய்யும் பழக்கம் இருக்கும். காமத்தில், உணர்வளவில் நெருக்கம் பாராட்டமாட்டார்கள். எப்படி மறைப்பதென்ற நோக்கம் மட்டுமே இருக்கும். நேர்மைக்கு அங்கு இடமே இருக்காது.

காதலில், எந்த ஒரு பிரச்சனை என்றாலும் ஆதரவு கரம் நீட்ட உங்கள் காதல் துணை உடனிருப்பார்கள். காமத்தில், பிரச்சனை வந்தால் காரணம் காட்டிப் பிரிந்து போக மட்டுமே முற்படுவர்

காதலில், தியாகம் என்பது பொதுவான ஒன்று. தங்களுக்கு பிடித்த விஷயங்கள் கூட காதல் துணைக்கு மன அளவில் சிறிது துன்பம் தந்துவிடும் என தோன்றினால் கூட அதை தியாகம் செய்துவிடுவார்கள். காமத்தில், சின்ன சின்ன விஷயமாக இருந்தால் கூட, மனம் ஒத்துபோகாமல் பிரிந்து சென்றுவிடுவார்கள்.

lovers1
lovers1

காதலில், ரகசியங்கள் என்பது இருவர் மத்தியில் பாதுகாக்கப்படும். இருவரும் ஒளிவுமறைவு இன்றி இருப்பார்கள். காமத்தில், தங்களைப் பற்றிய எந்த ஒரு ரகசியங்களும் கசிந்துவிடக்கூடாது என எண்ணுவார்கள்.

காதலில், உணர்வு ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பொருத்தமாக இருப்பார்கள். காமத்தில், எப்போதாவது பொருத்தம் ஏற்படும் அதுவும் உடல் ரீதியான விஷயங்களுக்காக மட்டும். மற்றபடி பொருத்தம் என்பது இங்கு மொத்தம் ஏழரை தான்.

காதலில், நம்பிக்கை என்பது தான் வேர். அது வலிமையாக இருக்கும். அது இல்லையெனில் அது காதலே இல்லை. காமத்தில், ஒருவர் மேல் ஒருவர் நம்பிக்கையாக உள்ளதாக காட்டிக்கொள்ள மிக மிக போராடுவார்கள். ஆனால், அனைத்தும் ஒரு தருணத்தில் உடைந்துவிடும்.

காதலில், தவறுகளும் ஏற்றுகொள்ளப்படும். பின் நாட்களில் அதை காதல் திருத்திவிடும். காமத்தில், தவறுகள் சுட்டிக்காட்டப்படும். மிக பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும். பிரிவில் போய் முடியும்.

காதலில், எவ்வளவு தூரம் கடந்திருந்தாலும், எவ்வளவு நாட்கள் பிரிந்திருந்தாலும், காதலின் வலிமை கூடுமே தவிர குறையாது. காமத்தில், இடைவேளை கூடும் போது வலிமை இழந்துவிடுவார்கள். அடுத்தவர் மீது உணர்வு பாதை மாறத்தொடங்கிவிடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories