யாரு..? டிடிவி.,யா? நான் பார்த்ததே இல்லயே..: நடிகர் கார்த்திக்!

karthik interview in madurai - 2026

அனைத்து சமூகத்திலும் இட ஒதுக்கீடு கண்டிப்பாக வேண்டும்; அதை ஜாதியை அடிப்படை இல்லாமல் பொருளாதார பின்தங்கிய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினால் நல்லது… முதல்வர் எனக்கு சீட்டு வழங்குகிறேன் என்று கூறினார்… ஆனால் என் சமூக மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யுங்கள் என்று கூறி பிரச்சாரத்திற்காக வந்துள்ளேன் என்று, மனித உரிமைக் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

பொதுவாக நடிகர்கள் ஜாதி மதம் இனம் என பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் பொதுவானவர்கள். நானும் அரசியலுக்கு வருவதற்கு முன் அப்படி தான் இருந்தேன். ஆனால் நான் சார்ந்த இந்த கட்சி மனித உரிமைக் கட்சி, முக்குலத்தோர் உள்ள கட்சி.. இங்கு நாம் ஜாதிக்காக இல்லாவிட்டாலும் அனைத்து சமுதாய மக்களுக்காகவும் குரல் கொடுத்து வருகிறேன்.

பொதுவாக இட ஒதுக்கீடு.. நம் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று முதல்வருடன் கூறினேன். ஆனால் என்னுடைய தனிப்பட்ட கருத்து ஜாதி ரீதியாக இல்லாமல் அனைத்து சமூகத்திலும் பொருளாதார ரீதியாக பின்தங்கி அவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் வாய்ப்பு வழங்கினால் நன்றாக இருக்கும்…

நான் வசதியாக உள்ளேன்… எனக்கு எந்தவித தேவையும் இல்லை. ஆனால் நலிவடைந்த, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு ஏதாவது கிடைத்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

இதுகுறித்து முதல்வரை சந்தித்த போது எனது சமூக மக்களுக்கு ஏதாவது செய்யுங்கள் என்று கூறினேன். மேலும் அவர்கள் எனக்கு சீட் தருகிறேன் என்று கூறினார்கள். ஆனால் நான் பிரச்சாரத்திற்கு மட்டும் வருகிறேன் என்றேன். தற்போது பிரச்சாரத்திற்காக வந்துள்ளேன்

கோவில்பட்டியில் எனது பிரச்சாரத்தை மேற்கொள்கிறேன். நாளை மாலை செய்தியாளர் சந்திப்பு நடைபெற உள்ளது விரிவாக இது குறித்து பேசலாம்.. என்னுடன் இருந்த ஏராளமான பேர் மாற்றுக் கட்சிக்கு சென்று விட்டனர். ஆனால் சரணாலயம் அமைப்பில் இருந்து இன்று வரை என்னுடன் கூட இருக்கும் உண்மைத் தொண்டர்கள் என்னுடன் இன்றும் இருக்கிறார்கள். பிரச்சாரத்திற்காக செல்வதற்கு முன் என்னை மிரட்ட பார்க்கிறார்கள் .

karthik interview in madurai2 - 2026

நான் எனது கட்சிக்காரரிடமே கம்பு-2 கொண்டு வாருங்கள் ரொம்ப நாளாயிற்று சுற்றிப் பார்க்க (சிலம்பம்) வேண்டும் என்று கூறியுள்ளேன்… என்றார்.

மிரட்டுகிறார்கள் என்று கூறினீர்களே.. அது அ ம முக கட்சி டிடிவி தினகரன் தரப்பில் இருந்து யாரும் மிரட்டினார்களா என்ற கேள்விக்கு பதிலளித்த கார்த்திக், நான் இதுவரை அவரை (டி.டி.வி.யை) பார்த்ததேயில்லை. ஆனாலும் அவர் மரியாதைக்குரிய நபர் என்றார் கார்த்திக்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories