23-03-2023 10:32 PM
More
    Homeஅடடே... அப்படியா?ரயில்வே முன் அறிவிப்பு இல்லாததால்... மாட்டிக் கொண்ட பயணிகள்... கடும் அவதி!

    To Read in other Indian Languages…

    ரயில்வே முன் அறிவிப்பு இல்லாததால்… மாட்டிக் கொண்ட பயணிகள்… கடும் அவதி!

    train traffic issue - Dhinasari Tamil

    மதுரை – தூத்துக்குடி அகல ரயில் பாதை பணிகள் நடந்து கொண்டிருப்பதாகவும் வருடத்தின் இறுதி நாளான நேற்று, அனைத்து தொழிலாளர்களையும் கொண்டு அகல ரயில் பாதை முடிக்கக்கூடிய பணியை செய்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டது. இதனால் வட மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய அனைத்து ரயில்களும் சுமார் 3 மணி நேரம் கால தாமதமாக திண்டுக்கல் முதல் மதுரை வரையிலான இடைப்பட்ட ரயில் நிறுத்தங்களில் நிறுத்தப்பட்டன.

    இந்நிலையில், பயணிகளுக்கு போதுமான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று புகார் தெரிவிக்கப் பட்டது. ரயில்வே துறை முன் அறிவிப்பு செய்யாததால் பயணிகள் பலர் சோழவந்தான் ரயில் நிலையத்தில் இறங்கி கோவில்பட்டி  திருநெல்வேலி தூத்துக்குடி ஆகிய ஊர்களுக்கு பஸ்களில் செல்ல கூட்டமாக வந்து அவதிப் பட்டனர்.

    இதில் கைக் குழந்தைகள் பெண்கள் உட்பட பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். குடிக்க தண்ணீர் இல்லாத பெரியவர்கள் மாத்திரை எடுக்கக் கூடியவர்கள் சரியான நேரத்தில் உணவு உண்ணாததால் உடல் உபாதைகள் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

    train traffic issue1 - Dhinasari Tamil

    இதுகுறித்து தூத்துக்குடியைச் சேர்ந்த வள்ளிநாயகம் என்பவர் தெரிவித்த போது, நாங்கள் நேற்று இரவு சென்னையில் இருந்து குடும்பத்துடன் புறப்பட்டு வந்தவர்கள். திண்டுக்கல்  வாடிப்பட்டி சோழவந்தான் ஆகிய இடங்களில் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளது. சென்னை தூத்துக்குடி முத்து எக்ஸ்பிரஸ் சென்னை செங்கோட்டை எக்ஸ்பிரஸ், சென்னை கொல்லம் எக்ஸ்பிரஸ் உள்பட சென்னையில் இருந்து புறப்பட்டு வந்த ரயில்கள் அனைத்துமே சுமார் 3 மணி நேரத்துக்கும் மேல் கால தாமதமாக ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பயணிகளுக்கு எந்தவித வசதியும் செய்து தரப்படாமல் மிகவும் அவதிப்பட்டனர் .

    எங்களுக்கு எந்த வித முன் அறிவிப்பும் செய்யவில்லை நாங்கள் ரயில் நிற்கக் கூடிய இடங்களில் குழந்தைகளுக்கு தண்ணீருக்கு அலைந்தோம். ரயில் நிலையங்களில் குடிக்க தண்ணீர் வசதி இல்லை ஏதோ சோழவந்தானில் குடிக்க தண்ணீரும் குடிப்பதற்கும் அருந்துவதற்கு சில இடங்களில் வைத்திருந்தனர்

    இருந்தாலும் நாங்கள் 9 மணிக்கு நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள வேண்டும் தூத்துக்குடியில்! தற்போது இங்கேயே பத்து மணி ஆகிவிட்டது. நாங்கள் தனியாக வேன் பிடித்து பொருட் செலவு செய்தும் கால விரயம் ஆனதால்,  குறித்த நேரத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் மன வருத்தத்தில் உள்ளோம் என்று தெரிவித்தார்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    ten − nine =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,036FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,630FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது..

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.விருதைபெரும் மகிழ்ச்சி...

    Latest News : Read Now...