கடந்த வருட நெருக்கடி போல்… புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது தமிழக அரசு!

tnsecretariat
tnsecretariat

கடந்த வருட நெருக்கடி போல்… புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது தமிழக அரசு!

  • திரையரங்குகள் உடற்பயிற்சிக் கூடங்கள் ஆகியவை 26 ஆம் தேதி முதல் செயல்பட தடை!
  • சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து மாநகராட்சி, பெரிய நகராட்சிகளில் இயங்கும் சலூன் பியூட்டி பார்லர் போன்றவை இயங்க தடை!
  • அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி கிடையாது!
  • அனைத்து உணவகங்கள், தேநீர் விடுதிகளில் பார்சல் சேவை மட்டும் வழங்க அனுமதி!
  • புதுச்சேரி தவிர்த்து அனைத்து மாநிலங்களில் இருந்தும் தமிழகத்திற்கு வருவோருக்கு இ பாஸ் கட்டாயம்!

கொரோனா பரவலைத் தடுக்க மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன.

இன்று தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில்…

வருகிற 26ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.

தியேட்டர்கள், பார்கள் மூடல்

திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கை விடுதிகள், பார்கள், பெரிய அரங்குகள் இயங்க அனுமதியில்லை

ஷாப்பிங் மால்களுக்கு அனுமதியில்லை

பெரிய கடைகள், ஷாப்பிங் மால்கள் இயங்க அனுமதியில்லை

சலூன்கள் இயங்க அனுமதியில்லை

அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில் அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க அனுமதியில்லை

உணவகங்கள், டீக்கடைகளுக்கு கட்டுப்பாடு

அனைத்து உணவகங்கள், தேநீர் கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி
உணவகங்களில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை

வழிபாட்டுத்தலங்களுக்கு அனுமதியில்லை

அனைத்து மத வழிபாட்டுத் தலங்களில் மக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை
நாள்தோறும் பூஜைகள், சடங்குகளை கோவில் ஊழியர்கள் மூலம் நடத்த மட்டுமே அனுமதி
குடமுழுக்கு விழாக்களுக்கு புதிய கட்டுப்பாடு
பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல் குடமுழுக்கு நடத்த மட்டும் அனுமதி

திருமண சுப காரியங்களுக்கு புதிய கட்டுப்பாடு

திருமணம், திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது

இறுதி ஊர்வலங்களுக்கு கட்டுப்பாடு

இறுதி ஊர்வலங்கள், அதைச்சார்ந்த சடங்குகளில், 25 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது

விளையாட்டு கிளப்புகளுக்கு அனுமதியில்லை

அனைத்து விளையாட்டு பயிற்சி சங்கம், குழுமங்கள் செயல்பட அனுமதியில்லை

வெளிமாநில ரிட்டர்னுக்கு இ.பதிவு கட்டாயம்

அனைத்து வெளிமாநிலங்களிலிருந்து தமிழகம் வருவோருக்கு இ.பதிவு கட்டாயம் http://eregister.tnega.org என்ற வலைத்தளத்தில் பதிவு செய்த பின்னரே அனுமதி!

வெளிநாடு ரிட்டர்ன்களுக்கு இ.பதிவு கட்டாயம்

வெளிநாடுகளிலிருந்து விமானம், கப்பல் மூலம் வருவோருக்கு இ.பதிவு கட்டாயம் http://eregister.tnega.org என்ற வலைத்தளத்தில் பதிவு செய்த பின்னரே அனுமதி!
இ.பதிவு செய்திருந்தால் மட்டுமே வெளிநாட்டிலிருந்து வருவோர், தமிழகத்திற்கு நுழைய அனுமதி

இரவு ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு தொடரும்

இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒருநாள் முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும்

மாஸ்க், தனிநபர் இடைவெளி கட்டாயம்

வீட்டை விட்டு வெளியில் செல்வோர், கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும்
பொது இடங்களில் தனிநபர் இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்
பொது இடங்களில் மாஸ்க் அணியாமல் நடமாட முயன்றால் அபராதம் விதிக்கப்படும்
பொது இடங்களில் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்காவிட்டாலும் அபராதம் விதிக்கப்படும்

ஐ.டி. நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் குறைந்தபட்சம் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்தே கண்டிப்பாக பணியாற்ற வேண்டும்

ஆன்லைன் டெலிவரிக்கு புதிய கட்டுப்பாடு

அனைத்து இ.காமர்ஸ் சேவைகள் வரையறுக்கப்பட்ட நேரக் கட்டுப்பாடுகளுடன் இயங்கலாம்

காய்கறி, மளிகை கடைகளுக்கு கட்டுப்பாடு

வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள், காய்கறி கடைகளுக்கு அனுமதியில்லை
தனியாக செயல்படும் மளிகை, காய்கறி விற்பனை செய்யும் பெரிய கடைகள் ஏசி வசதியின்றி இயங்க அனுமதி
ஒரே சமயத்தில் 50% வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்
மளிகை, காய்கறி கடைகள் மற்றும் இதர அனைத்து கடைகளும் உரிய வழிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி

தமிழக அரசின் அறிவிப்பு… முழு விவரம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

Topics

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories