December 6, 2025, 11:17 PM
25.6 C
Chennai

மே 2 – உலக சிரிப்பு தினம்!

world laughter day
world laughter day

சிரித்து வாழ வேண்டும். பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே என்ற திரைப்படப் பாடலைக் கேட்டுள்ளோம். மன மகிழ்ச்சி சிரிப்பாக வெளிப்பட்டு நம்மையும் சுற்றுப்புறத்தையும் அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் வைக்கிறது. நேர்மறை உணர்வையும், நட்பையும் ஏற்படுத்துவதால் சிரிப்பு ஒரு உலக மொழி என்று கூறப்படுகிறது.

உலக சிரிப்பு தினம்  ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மே இரண்டாம் தேதி சிரிப்பு தினம்.

1998ல் டாக்டர் மதன் கடாரியா என்பவர் மும்பையில் முதன்முதலாக சிரிப்பு தினத்தை தொடங்கி வைத்தார். அது மிக விரைவில் உலகெங்கும் புகழ் அடைந்து சிரிப்பு யோகா என்பதாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இதில் சுமார் 150 நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சிரிப்பு கிளப்புகளுக்கு மேல் பங்கு பெறுகின்றன.

வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும். மனம் விட்டுச் சிரித்தால் முகத்தில் உள்ள தசைகளுக்கு மட்டுமின்றி இதயத்திற்கும் மிகவும் நன்மை விளையும். நேர்மறையான எண்ணமும்  உல்லாசமும் ஏற்படும். அனைவரும் தினமும் யோகாப்பியாசத்தில் ஒரு பாகமாக ஐந்து நிமிடங்கள் நிறுத்தாமல் சத்தமாக சிரிக்க வேண்டும். இதனால் மனிதர்களுக்கிடையே மட்டுமின்றி நாடுகளுக்கு இடையே கூட நல்லெண்ணமும் நட்பும் ஏற்படும் என்று மதன் கடாரியா கூறுகிறார். 

“சிரிக்க வைப்பது ஒரு யோகம். சிரிப்பது ஒரு போகம். சிரிக்காமல் இருப்பது ஒரு ரோகம்” என்று ஒரு பாடல் உள்ளது. சிரிக்கா விட்டால் நோய்கள் வரும் என்று எச்சரிக்கிறார் டாக்டர் மதன் கடாரியா.

உடல் முழுவதும் குலுங்கும்படி சத்தமாக சிரிப்பதால் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். தற்போது மருத்துவர்கள் டிப்ரஷன் எனப்படும் மனச்சோர்வு நோயாளிகளுக்கு சிரிப்பு தெரபியை பரிந்துரைக்கிறார்கள்.

உலக சிரிப்பு தினத்தில் பங்கு பெறுவோர் தினமும் கட்டாயம் ஒரு முறையாவது வாய் விட்டுச் சிரிப்பதாக சபதம் ஏற்கிறார்கள்.

2000 ஆண்டில் உலக சிரிப்பு தினத்தில் டென்மார்க் கோபென்ஹெகன் டவுன் ஹால் ஸ்கொயரில் பத்தாயிரம் பேருக்கு மேல் ஒன்று கூடி சிரித்து மகிழ்ந்தார்கள். அந்த நிகழ்வு கின்ன்ஸ் சாதனையாக பதிவில் ஏறியது.

வலியை மறக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், மன அழுத்தம் தீரவும், தசைகளுக்கு உடற்பயிற்சி கிடைக்கவும், வாய்விட்டு சிரிப்பது நல்ல மருந்து. தற்போது எந்த பார்க்கில் பார்த்தாலும் வாக்கிங், ஜாகிங், யோகாப்பியாசம் செய்பவர்களோடு கூட ஹாஸ்ய யோகா செய்பவர்களும் தென்படுகிறார்கள். சிரிப்பு கிளப்கள் பல நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளன.

காலையில் தூங்கி எழுந்தது முதல் பல பிரச்சினைகள்,  கவலைகள், நோய்கள், பொருளாதார அழுத்தங்கள். இவற்றுக்கு இடையில் நசுங்கும் மனிதனுக்கு சிரிப்பு ஒரு தென்றல் காற்றாக வீசி அனைவரையும் மகிழ்விக்கிறது.

குலம், மதம், ஆண், பெண், வயது, வரம்பு எதுவும் இன்றி அனைவரும் ஒன்றாக மகிழ்ச்சியாக சிரிக்க முடிந்தால் உலகம் ஒரு குடும்பம் என்ற வார்த்தையில் உள்ள உண்மை விளங்கும்.

உன் மகிழ்ச்சியை அனைவரோடும் பகிர்ந்து கொள். உன் துயரத்தை தனியாக அனுபவி என்று ஒரு பழமொழி கூட உள்ளது.

சிலருக்கு மனதின் எண்ணத்தை வெளியிடாமல் சிரிப்பு மறைந்து விடுகிறது. ஆனால் அத்தகைய சிரிப்பில் நேர்மை இல்லாததால் விரைவில் பிடிபட்டு போவார்கள். அதனால் எப்போதும் சிரித்த முகத்தோடு இருப்பவரையும் நம்பிவிட முடியாது. துரியோதனன் திரௌபதி சிரித்ததைப் பார்த்து எரிச்சலடைந்தான். அதுதான் மகாபாரதப் போருக்கு காரணம் என்பார்கள்.

சிரிக்கக் கூடிய ஒரே விலங்கு மனிதன்தான். இரண்டு பேர் சேர்ந்து உரையாடல் தொடங்குமுன் புன்சிரிப்போடு இருந்துவிட்டால் கோபத்தோடு வந்தவர் கூட தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டு நட்போடு பழக ஆரம்பித்து விடுவார்.

சிரிப்புக்குக் கூட ஒரு தினம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை நினைக்கும் போது மனிதன் எவ்வளவு தூரம் சிரிப்பில் இருந்து தொலைவில் விலகி விட்டான் என்பதை அறியமுடிகிறது.

இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சிரிப்பு தின கொண்டாட்டங்கள் இணையம் மூலம் நடத்தப் படுகின்றன. சிரிப்பின் மூலம் ஆரோக்கியம், ஆனந்தம், உலக அமைதி இவற்றைப் பெறும் வாய்ப்பு இருப்பதால் சிரிப்புதினம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று..

  • ராஜி ரகுநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories