கடைக்குள் நுழைந்து திருடிய பாகிஸ்தான் தூதரக ஊழியர்கள்!

pakistan
pakistan

தென் கொரிய தலைநகர் சியோலில் பொருட்களை திருடிய போது 2 பாகிஸ்தான் தூதரக ஊழியர்கள் பிடிபட்டதாகவும் அந்நாட்டு காவல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தென் கொரியாவின் Yongsan மாவட்டத்தில் உள்ள Itaewon பகுதியில் உள்ள கடை ஒன்றுக்கு சென்ற குறிப்பிட்ட பாகிஸ்தான் தூதரகத்தை சேர்ந்த 2 ஊழியர்களும் 10 அமெரிக்க டாலர் மற்றும் 1.70 அமெரிக்க டாலர் மதிப்புள்ள 2 பொருட்களை திருடி சென்றதாக யோங்சன் காவல் நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் ஊழியர்கள் திருடி சென்ற இரு பொருட்களை பற்றிய தகவல்களையும் தென்கொரிய போலீஸ் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி சாக்லேட்கள் மற்றும் ஒரு தொப்பியை ஒன்றரை மாத இடைவெளியில் இருவரும் திருடி சென்றுள்ளனர்.

இது குறித்து மேலும் தகவல் தெரிவித்துள்ள போலீஸ் அதிகாரிகள் கடந்த ஜனவரி 10ம் தேதி 1.70 அமெரிக்க டாலர் மதிப்புள்ள சாக்லேட் ட்ரீட்ஸ்களையும், தொடர்ந்து பிப்ரவரி 23 அன்று 10 அமெரிக்க டாலர் மதிப்புள்ள தொப்பி ஒன்றையும் திருடியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

கடையில் இருந்து தொப்பி திருடப்பட்ட பின், கடை ஊழியர் ஒருவர் தொப்பி இல்லாததை கண்டு உடனடியாக சிறிது நேரத்திலேயே போலீஸாரை அழைத்து புகார் தெரிவித்தார்.

எனினும் தூதரக நல்லுறவை பேணும் விதமாக தென் கொரிய அதிகாரிகள் இந்த திருட்டு சம்பவத்தில் சந்தேக நபர்கள் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் புகாரை முடித்து வைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories