April 30, 2025, 10:22 PM
30.5 C
Chennai

தடுப்பூசி போட்ட பிறகு இதை செய்யாதீங்க! எச்சரிக்கும் சைபர்!

கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டு அந்த சான்றிதழை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து மகிழும் மனநிலையில் உள்ளீர்களா. அப்போ இந்த தகவல் உங்களுக்குத்தான்.

நீங்கள் சமீப காலமாகவே இதுபோன்ற நிறைய போஸ்ட்களை பார்த்திருப்பீர்கள். “நான் தடுப்பூசி போட்டுவிட்டேன்.. அப்போ நீங்க..” என்பதை போல தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் தங்கள் சர்டிபிகேட்டை பேஸ்புக்கிலும், டுவிட்டரிலும், வாட்ஸ்அப் ஸ்டேடசிலும் வைத்திருப்பார்கள்.

பிறருக்கு இது ஊக்கம் தரும் என அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால், வெறுமனே ஊசி போட்டதை சொன்னால் ஓகேதான். சான்றிதழை பதிவேற்றம் செய்வதுதான் சிக்கல்.

certificate
certificate

சமூக வலைத்தளங்கள், ஆன்லைன் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய உள்துறை அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டுள்ள டுவிட்டர் அக்கவுண்ட் Cyberdost. இதில் தான் இந்த விழிப்புணர்வு தகவல் படத்தோடு வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக் கொண்டதுமே சான்றிதழ் வழங்கப்படும். அதில், உங்கள் பெயர், உங்கள் அடையாள அட்டையின் கடைசி நான்கு எண்கள், வேக்சின் பெயர் உள்ளிட்ட பல தனிப்பட்ட தகவல்கள் இடம் பெற்றிருக்கும். அதை பார்த்து, ஆன்லைன் மோசடி நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே இப்படிச் செய்யாதீர்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளது இந்த டுவிட்டர் பக்கம்.

ALSO READ:  பிரதமர் மோடி, அண்ணாமலையை தவறாக சித்திரித்து வீடியோ வெளியிட்டவரை கைது செய்க: பாஜக., ஆர்ப்பாட்டம்!

எனவே, நீங்களும் இனிமேல், சர்ட்டிபிகேட்டை ஷேர் செய்யாதீர்கள். அதேநேரம், தடுப்பூசி செலுத்திய தகவலை கம்பீரமாக சொல்லவும் மறக்காதீர்கள்.

சீனா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல நாடுகள், எதிர்காலத்தில் தடுப்பூசி சான்றிதழ் இருந்தால்தான் தங்கள் நாட்டுக்குள் அந்த பயணிகளை அனுமதிக்கப்போகின்றன. எனவே, இந்த சான்றிதழ்களிலுள்ள தகவல்கள் பிறரால் காப்பியடிக்கப்பட வாய்ப்புள்ளது என்பதுதான் இந்த எச்சரிக்கைக்கு காரணமாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலை திருவேங்கட பெருமாள் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்!

உசிலம்பட்டியில் 500 ஆண்டு பழமையான திருவேங்கட பெருமாள் கோவிலில் 28 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

அக்ஷய திருதியை … உள்ளர்த்தம் அறிவோம்!

சேதார கணக்கை சீர் திருத்த முடியாமல் ஆதாரத்தை அழித்து கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்பதே நிதர்சனம்!

காஞ்சி மடத்தின் 71வது சங்கராசார்யர் பட்டமேற்பு!

காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக கணேச சர்மா பொறுப்பேற்றார். அவருக்கு காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சன்யாச தீட்சை வழங்கினார்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 30 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய கொடியேற்றம்!

மே 8 (வியாழன்): மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், இது திருவிழாவின் உச்ச நிகழ்வாகும்.

Topics

உசிலை திருவேங்கட பெருமாள் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்!

உசிலம்பட்டியில் 500 ஆண்டு பழமையான திருவேங்கட பெருமாள் கோவிலில் 28 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

அக்ஷய திருதியை … உள்ளர்த்தம் அறிவோம்!

சேதார கணக்கை சீர் திருத்த முடியாமல் ஆதாரத்தை அழித்து கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்பதே நிதர்சனம்!

காஞ்சி மடத்தின் 71வது சங்கராசார்யர் பட்டமேற்பு!

காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக கணேச சர்மா பொறுப்பேற்றார். அவருக்கு காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சன்யாச தீட்சை வழங்கினார்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 30 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய கொடியேற்றம்!

மே 8 (வியாழன்): மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், இது திருவிழாவின் உச்ச நிகழ்வாகும்.

செங்கோட்டை சிவன் கோயிலில் விவேகானந்தா கேந்திரா சார்பில் விளக்கு பூஜை!

விவேகானந்தா கேந்திரம் கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை மற்றும் மாதர் மாநாடு நடந்தது.

சிந்து நதியும் இந்தியாவின் மனிதாபிமானமும்!

மேற்கு வங்க மாரீச்சபி படுகொலைகள் நடந்ததற்கு யார் பொறுப்பு ? சந்தோஷ் காளி, முர்ஷிதாபாத் கலவரங்களையும் சேர்த்து எழுதுவது தானே…. கொடுமை.

பஞ்சாங்கம் ஏப்ரல் 29- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories