ஓட்டுப் போட்ட சனங்களுக்கு அல்வா கொடுத்துட்டாங்க!

rajan-chellappa
rajan-chellappa file pic

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, பெரியபுள்ளான், அய்யப்பன், ராஜன் செல்லப்பா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது…

கொரானா தொற்றால் ஒரு உயிர் கூட பலியாகக் கூடாது. ஆனால், தமிழகத்தில் கள நிலவரம் மாறாக உள்ளது. முன்களப் பணியாளர்களின் தியாகப் பணியால் தொற்று குறைந்துள்ளது. உயிரிழப்பு அதிகரித்துள்ளது கவலை அளிக்கிறது.

தமிழகத்தில் கொரானா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். அதிமுக ஆட்சியில் கொரானா பரிசோதனை அதிகமாக செய்தோம். பாதிப்பு அதிகம் இருக்கும் போதே பரிசோதனை 1 லட்சமாக மேற்கொண்டோம். தற்போது கொரானா பரிசோதனையை 3 லட்சமாக உயர்த்த வேண்டும்.

அதிமுக ஆட்சியில் கொரானா பரிசோதனை ரிசல்ட் 24 மணி நேரத்தில் கிடைத்தது. தற்போது 3நாள் ஆகிறது காலதாமதம் ஆகிறது. இதனால் கொரானா தொற்று சமூக பரவலாக மாற வாய்ப்புள்ளது.

தமிகத்தில் அதிமுக ஆட்சியில் கொரானா பரிசோதனை செய்தவரை தனிமைப்படுத்தும் நடைமுறையை கடைப்பிடிக்க வேண்டும். கிரமங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் தீவிரமாக நடைமுறை படுத்த வேண்டும்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

தமிழகத்தின் கள நிலவரமும் அரசு தெரிவிக்கும் விவரமும் வேறு வேறாக உள்ளது. தமிழகத்தில் ஆக்ஸிஜன் படுக்கைகளை தேவையான அளவு உருவாக்க வேண்டும். அசாதாரண சூழ்நிலை உள்ளதால் கொரானா மரணத்தை அரசு வெளிப்படையாக அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரானா இறுதிச் சடங்கில் அரசு வழிமுறைகள் கேள்விக்குறியாக உள்ளது. மக்கள் எதிர்ப்பார்பு கோரிக்கையை, வேண்டுகோளை அரசுக்கு கொண்டு வருவது தான் எதிர்க்கட்சியின் இலக்கணம்.

தடுப்பூசி குறித்து இளைஞர்களிடம் அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி மையங்களில் கட்டுங்கடங்காத கூட்டம் உள்ளதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கும் தொகுதிக்கு தமிழக அரசு வேறுபாடு காட்டுகிறதோ என்ற அச்சம் நிலவுகிறது… என்றனர்.

sellur-raju-2
sellur-raju-2 file pic

செல்லூர் ராஜூ பேசியபோது… அல்வா கொடுப்பது போல வெறும் நூறு பேருக்கு ஊசி போட்டுவிட்டு இல்லையென்று சொல்கின்றனர். எம்ஜிஆரை காண கூட்டம் கூடுவது போல தடுப்பூசி செலுத்திக் கொள்ள கூட்டமாக கூடியுள்ளனர்.

வெளிநாட்டில் தடுப்பூசி போட்டால்தான் அனுமதி என்றெல்லாம் சொல்கிறார்கள். தமிழகத்தில் தடுப்பூசி அதிகமாக கிடைக்க வேண்டும். மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

அதிமுகவினர் தங்கள் கெளரவத்தை பார்த்தில்லை. மக்கள் நலன் தான் எங்களுக்கு முக்கியம். முன்னாள் முதல்வரும் துணை முதல்வரும் கெளரவம் பார்க்காமல் தேவையான உதவிகளை கேட்டுப் பெற்றனர்.

மத்தியில் இருந்த காங்கிரஸ் மற்றும் பாஜக ஆட்சியோடு இணக்கமாக இருந்து தமிழகத்திற்கு தேவையானவற்றை பெற்றோம். இதனால் எங்களை திமுகவினர் விமர்சிக்கவும் செய்தனர்.

ஒரு மாநில முதல்வர் கெளரவம் பார்க்கக் கூடாது.கொரானா நடவடிக்கைகளுக்காக ஸ்டாலின் பாரதப் பிரதமரை பார்க்க நேரடியாக சென்றிருக்க வேண்டும்! என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories