April 28, 2025, 3:40 PM
32.9 C
Chennai

கொரோனாவுக்கு ஆயுர்வேத லேகியம்: ஆனந்தய்யாவுக்கு ஆந்திர அரசு அனுமதி!

anandaiah andhra
anandaiah andhra

கிருஷ்ணபட்டணம் ஆனந்தய்யா ஆயுர்வேத மருந்துக்கு ஆந்திரா அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

ஆந்திர மாநில அரசாங்கம் ஆனந்தய்யாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்துள்ளது. எத்தகைய அழுத்தத்திற்கும் ஆளாகாமல் ஆயுர்வேதம் காப்பாற்றப்பட்டுள்ளது. ஆனந்தய்யா அளிக்கும் ஆயுர்வேத மருந்துகளுக்குத் தடையில்லை. ஆனந்தய்யா அளித்துவரும் மருந்துகளால் எந்த ஒரு தீமையும் இல்லை என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனாவோடு போராடி ரிடயர்டு ஹெட்மாஸ்டர் கோட்டைய்யா இறந்த இதேநாளில் ஆனந்தய்யாவின் ஆயுர்வேத மருந்துக்கு ஆந்திரா அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

ஆனால் ஆனந்தய்யாவிடம் மருந்து வாங்குவதற்கு கோவிட் பாசிடிவ் உள்ள நோயாளிகள் வராமல் இருக்க வேண்டும் என்று மாநில அரசாங்கம் தெரிவிக்கிறது அவர்களுக்கு பதிலாக அவர்கள் குடும்பத்தினர் வந்து மருந்து வாங்கிச் சென்றால் கோவிட் பரவும் ஆபத்து இல்லாமல் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

ஆந்திரப் பிரதேச மக்களுக்கு இது ஒரு இனிய செய்தி. இறுதியில் ஆனந்தய்யாவின் ஆயுர்வேத மருந்துக்கு ஆந்திர அரசாங்கம் அனுமதி அளித்தது. தேசிய ஆயுர்வேத பரிசோதனை நிலையம் (சிசிஆர்ஏஎஸ்) கமிட்டி கடந்த சில நாட்களாக செய்த பரிசோதனையின் அறிக்கை வெளி வந்ததால் நெல்லூர் மாவட்டம் கிருஷ்ண பட்டணத்தைச் சேர்ந்த ஆனந்தய்யா கொரோனா நோயாளிகளுக்கு அளித்து வரும் ஆயுர்வேத மூலிகை மருந்து குறித்து மாநில அரசாங்கம் முக்கிய முடிவு எடுத்துள்ளது.

ALSO READ:  திருப்புனவாசல் விவேகானந்த மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா!

ஆனால் கண்ணில் விடும் சொட்டு மருந்தை தவிர பிற ஆயுர்வேத மருந்துகளுக்கு அரசாங்கம் கிரீன் சிக்னல் அளித்துள்ளது. ஆனந்தய்யா தயார் செய்து வரும் ஆயுர்வேத மருந்தை எடுத்துக்கொண்டாலும் பிற மருந்துகளையும் பயன்படுத்துவதை விட வேண்டாம் என்று மாநில மக்களுக்கு ஆந்திரப்பிரதேச அரசாங்கமும் அறிவுறுத்தியுள்ளது.

ஆனந்தய்யாவின் ஆயுர்வேத மருந்துகளை பயன்படுத்துவதால் எந்த பக்கவிளைவும் இருக்காது என்றும் இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களால் மூலிகை மருந்தை அவர் தயார் செய்வதாகவும் அறிக்கையில் வெளியிட்டுள்ளார்கள். கண்ணில் விடும் மூலிகை மருந்து குறித்து முழு அறிக்கை வெளிவருவதற்கு இன்னும் இரண்டு மூன்று வாரங்கள் பிடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆனந்தய்யா ஆயுர்வேத மருந்து பயன்படுத்தினால் covid-19 குறைந்துவிடும் என்று சொல்வதற்கு எப்படிப்பட்ட ஆதாரங்களும் இல்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்கள். மறுபுறம் கண்ணில் விழும் சொட்டு மருந்து எடுத்துக்கொண்டு குணமடைந்த ரிடயர்டு ஹெட்மாஸ்டர் கோட்டையா இன்று மரணமடைந்தார்.

கொரோனா தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் மருந்து வாங்கிச் செல்வதற்கு அங்கு செல்ல கூடாது என்று அரசாங்கம் எச்சரித்துள்ளாது. அவர்களுடைய குடும்ப அங்கத்தினர்கள் அல்லது நண்பர்கள் மட்டுமே சென்று ஆயுர்வேத மருந்து எடுத்து வரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

ALSO READ:  திருவிழா சீரியல் லைட் அமைத்த போது மின்சாரம் பாய்ந்து மூவர் உயிரிழப்பு!

சட்டப்படி ஆனந்தய்யா மருந்து வழங்குவதற்கு மாநில அரசாங்கம் அனுமதி தேவையில்லை என்று ஆனந்தய்யா தரப்பு வக்கீல் கோர்ட்டில் வாதிட்டார். அவர் இலவசமாகவே இயற்கை மருந்துகளை வழங்குகிறார் என்றூம் அவர் குடும்பத்தினர் இதில் 90 வருடங்களாக அனுபவம் உள்ளவர்கள் என்றும் வழக்கறிஞர் கூறிப்பிட்டார். பாரத தேசத்தில் பல வீடுகளில் இயல்பாகவே பல குடும்பங்கள் இயற்கை மருத்துவத்தை கடைபிடித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

ஆந்திர பிரதேஷ் அரசாங்கமே ஆனந்தய்யா மருந்தை அதிகாரப்பூர்வமாக அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று மேலும் இரு விண்ணப்பங்கள் செய்த மனு குறித்து ஐகோர்ட்டில் விசாரணை நடந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Entertainment News

Popular Categories