யுடியூப்பரை போட்டு வெளுத்து வாங்கிய கடை உரிமையாளர்… ஏன் தெரியுமா?!

Published:

youtuber fight - 2026

ஹைதராபாத்தில் யூடியூபரைப் போட்டு அடித்த கடை உரிமையாளர்…

பிராங்க் வீடியோ சேனலால் ஹைதராபாத் ஜெகதீஷ் மார்க்கெட்டில் ஒரு மொபைல் கடையில் தகராறு நேர்ந்தது.

‘ஹைதராபாதி ப்ராங்க்’ என்ற பெயருள்ள ஒரு யூடியூப் சேனலின் ஆங்கர் தாங்கள் எடுக்கும் ஒரு குறும்பு வீடியோவின் ஒரு பாகமாக ஹைதராபாத் அபிட்ஸ் என்ற இடத்தில் ஒரு மொபைல் கடை உரிமையாளரோடு தகராறு செய்தார்.

abid police station - 2026

அந்த தகராறு முற்றியதால் கோபத்துக்காளான கடை முதலாளி அந்த யூடியூப் ஆங்கரை போட்டு அடித்து சாத்து சாத்தென்று சாத்தினார். அதற்குள் வீடியோ எடுத்தவர்கள் இது வெறும் குறும்புத்தனமான வீடியோ… எங்கள் யூடியூப் சேனலுக்காக எடுக்கிறோம் என்று பலமுறை எடுத்துச் சொன்னாலும் கேட்காமல் கோபம் தலைக்கேறிய கடை முதலாளி ஆங்கரை மேலும் வேகமாக அடித்தார்.

விவரம் அறிந்த அபிட்ஸ் போலீசார் இருவரையும் பாதுகாப்பில் எடுத்து ஸ்டேஷனுக்கு அனுப்பி வைத்தனர்.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img