ஜிம்மில் பேய் செய்யும் அட்டகாசம்! வைரல் வீடியோ!

ghost
ghost

பேய், பூதம் இதெல்லாம் உண்மையா, நம்பிக்கை இருக்கிறதா? இல்லையா என்பது எல்லாம் வேறு விஷயம். சமூக ஊடகங்களில் வைரலாகும் ஒரு வீடியோவைப் பார்த்தால் அச்சமாக இருக்கிறது.

டிக்டோக் வீடியோவில் பதிவு செய்யப்பட்ட இந்த சம்பவத்தில், ஜிம் தரையில் படுத்திருக்கும் ஒரு நபர் இழுத்துச் செல்லப்படுவதைக் காட்டுகிறது. யாரும் அவரை இழுத்துச் செல்லாத நிலையில் அவரை இயக்குவது யார்? பேயா? இந்த கேள்வி எழுவதை தவிர்க்கமுடியவில்லை.

பயமுறுத்தும் வீடியோ, ஜிம்மில் (@carlosruizoficiall/TikTok) ‘கண்ணுக்கு தெரியாத சக்தியால்’ மனிதன் இழுக்கப்படுவதைக் காட்டுகிறது.

ஜிம்மில் ஒரு மனிதனை ஏதோ ‘கண்ணுக்கு தெரியாத சக்தி’ இழுத்துச் செல்லும் ஒரு திகிலூட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஒருவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யத் தயாராகும் போது வீடியோ தொடங்குகிறது. அவர் ஜிம்மில் தனியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திடீரென்று, TRX suspension தானாகவே முன்னும் பின்னுமாக மாறத் தொடங்குகிறது, அதை ஜிம்மில் இருக்கும் நபர் பார்க்கவில்லை. பின்னர் அதிக எடையுள்ள பந்து அவரை நோக்கி உருள்கிறது, அதே நேரத்தில் படிக்கட்டில் விளக்குகள் அணைந்து அணைந்து எரிகிறது…

ALSO READ:  'தாமரை வாக்குறுதிகள்' என்ற பெயரில் பாஜக., தேர்தல் அறிக்கை வெளியீடு!

ஜிம்மில் இருப்பவர் அங்கிருந்து வெளியேற பொருட்களைப் பிடிக்கிறார், ஆனால் தரையில் விழுகிறார். கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒன்று, ஜிம்மின் தரையில் கிடக்கும் அவரை இழுப்பதைப் பார்க்க முடிகிறது.

அதிலிருந்து விடுபட முயற்சிக்கும் அவருக்குக் அது மிகவும் சிரமமாக இருக்கிறது. தொடர்ந்து கண்ணுக்கு தெரியாத சக்தியிடம் இருந்து விடுபட முயற்சிக்கும் அவருக்கு ஒரு கட்டத்தில் வெற்றி கிடைக்கிறது.

உடனே அடித்துப் பிடித்துக் கொண்டு அவர் வெளியே ஓடுகிறார். தன்னுடைய பொருட்களையும் எடுக்காமல், தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடுகிறார்.

டிக்டாக்கில் @carlosruizoficial என்ற கணக்கில் இருந்து வெளியிடப்பட்ட வீடியோ, 12 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. ஃபேட் டிசைட் என்ற ஒரு யூடியூப் சேனலும் வீடியோவைப் பகிர்ந்துள்ளது.

“டிக்டோக்கில் ஒரு மனிதன் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்ய முயன்றபோது சில பயங்கரமான நிகழ்வுகள் நடக்கத் தொடங்கியது. கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு சக்தியால் அவர் இழுத்துச் செல்லப்படுவது தெரிகிறது.

“திகிலூட்டும் வீடியோவைப் பாருங்கள். இது அமானுஷ்யமா? அல்லது டிக்டாக் வீடியோவில் இருக்கும் காட்சிகள் போலியானவையா?” என்ற கேள்வியுடன் வீடியோ யூடியூபில் பகிரப்பட்டுள்ளது.

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

இந்த வீடியோவுக்கு பல்வேறுவிதமான பின்னூட்டங்கள் வந்து குவிந்துள்ளன. சிலர் பயப்படுகின்றனர். சிலர் வீடியோ சித்தரிக்கப்பட்டது என்று சொல்கின்றனர். எதுஎப்படியிருந்தாலும், அந்த வீடியோ நிச்சயம் அதிக பார்வைகளைப் பெற்றுள்ளது.

அதிகம் பேர் பார்க்க வேண்டும் என்பதற்காகவே அரங்கேற்றப்பட்ட நாடகமாகவும் இருக்கலாம் என்று ஒரு பயனர் கருத்திட்டுள்ளார். “இது அரங்கேற்றப்பட்டதாகத் தெரிகிறது, அவர் ஏன் தனியாக இருந்தார், கண்ணாடியைப் பார்ப்பதைத் தவிர அவர் ஏன் வேறு எதுவும் செய்யவில்லை? அவர் கண்ணாடியில் பார்ப்பதற்கு முன்பே கயிறுகளை அசைக்கத் தொடங்கினாரா? யாராவது திரைக்கு வெளியே இருந்தார்களா? எனக்கு தெரியாது.

அமானுஷ்யமாக, ஒரு பேயா அங்கிருந்தது, அல்லது ஒரு பொல்டர்ஜிஸ்ட் (poltergeist) இதன் பின்னணியில் இருக்கிறாரா? தரையில் இழுக்கப்படுவது போ அந்த நபர் நடிக்க முடியும் என்று நினைக்கிறேன். என்னுடைய யூகப்படி இந்த வீடியோ உண்மையானது அல்ல, நடித்து அரங்கேற்றப்பட்டது” என்று பயனர் தெரிவிக்கிறார்.

மற்றுமொருவரோ, “அவர் தவறான பிசாசுடன் ஒப்பந்தம் செய்திருக்கலாம். இதுபோன்ற முட்டாள்தனமான செயல்களைச் செய்த பலரை எனக்குத் தெரியும்” என்று சொல்கிறார். மற்றொருவர் நகைச்சுவையாக, “உங்களை விட பேய் அதிகமாக ஜிம்மிற்கு போகும் போல இருக்கிறது. உங்களுக்கு இன்னும் கொஞ்சம் உத்வேகம் வேண்டும்” என்று கருத்திட்டுள்ளார்.

ALSO READ:  நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

Topics

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Entertainment News

Popular Categories