தனது சிறிய கனவை நனவாக்கிய நீரஜ் சோப்ரா!

neeraj chopra
neeraj chopra

தங்க மகன் நீரஜ் சோப்ரா தனது சின்னஞ்சிறிய கனவை நிறைவேற்றியிருக்கிறார். ஆம் முதன்முறையாக அவரது பெற்றோரை விமானத்தில் ஏற்றி அழகு பார்த்திருக்கிறார்.

அவரது பெற்றோர் விமானம் என்ற ஒன்றை நேரில் பார்ப்பதும், அதன் அருகில் சென்றதும், அதில் ஏறி அமர்ந்ததும், அதில் பயணித்ததும் இதுவே முதல்முறை. கிட்டத்தட்ட இதுவும் வாழ்நாள் கனவு. கனவை நீரஜ் பலிக்க வைத்திருக்கிறார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள நீரஜ் சோப்ரா, “என்னுடைய மிகச்சிறிய கனவு இன்று நிஜமாகியுள்ளது. என்னுடைய பெற்றோரை முதன்முறையாக விமானத்தில் அழைத்துச் செல்வதை என்னால் நிகழ்த்தி காட்டியிருக்க முடிகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Neeraj chopra 1
Neeraj chopra 1

மேலும் அதனுடன் பெற்றோருடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

முன்னதாக டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் பெற்றுக்கொடுத்தார் ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா.

தடகளத்தில் இந்தியா பெறும் முதல் தங்க பதக்கம் இதுவாகும். அதேபோல 121 வருடங்களுக்குப் பிறகு தடகளத்தில் ஒரு பதக்கத்தை இந்தியா பெற்றது. இவ்வாறு பல்வேறு வரலாற்று சாதனைகளைப் புரிந்தார் நீரஜ் சோப்ரா.

அவரின் சாதனைகளைப் போற்றும் வகையில் இன்டிகோ நிறுவனம், நீரஜ் சோப்ரா 1 வருடத்திற்கு இன்டிகோ நிறுவன விமானங்களில் எவ்விதக் கட்டணமும் இன்றி பயணிக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டிருந்தது கவனித்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

Entertainment News

Popular Categories