December 5, 2025, 6:22 PM
26.7 C
Chennai

அமெரிக்க பங்கு சந்தை: சாதனைப் படைத்த தமிழர்!

krish2
krish2

இந்தியாவில் தற்போது பல முன்னணி ஐடி மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட்டு மிகப்பெரிய அளவிலான முதலீட்டைத் திருட்டி வருகிறது.

ஆனால் யாரும் அமெரிக்கப் பங்குச்சந்தையில் பட்டியலிடத் திட்டமிடவில்லை.

nastaq krish
nastaq krish

அமெரிக்கப் பங்குச்சந்தையில் பட்டியலிட வேண்டுமென்றால் கடுமையான விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது மட்டும் அல்லாமல் பல நிர்வாக மாற்றங்களைச் செய்தாக வேண்டும்.

அனைத்து தடைகளையும் தாண்டி திருச்சியைச் சேர்ந்த கிரிஷ் மாத்ருபூதம் 11 வருடத்திற்கு முன்பு உருவாக்கிய FreshWorks மென்பொருள் நிறுவனத்தை இன்று நாஸ்டாக் சந்தையில் பட்டியலிட்டு முதல் நாளே மிகப்பெரிய வளர்ச்சியைப் பதிவு செய்து மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

krish madhrupudam 2
krish madhrupudam 2

10 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் ஐபிஓ வெளியிட்ட FreshWorks நிறுவனம் முதல் நாளே சிறப்பான வரவேற்பு பெற்ற காரணத்தால் அதிகப்படியாக ஒரு பங்கு விலை 33 சதவீதம் வரையில் உயர்ந்து இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு என்பது 13 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்தது.

இதுகுறித்து FreshWorks நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ-வான கிரிஷ் மாத்ருபூதம் கூறுகையில், நாஸ்டாக் பங்குச்சந்தையில் முதல் நாளே 33 சதவீத வளர்ச்சியைப் பார்க்கும் போது இந்திய விளையாட்டு வீரர் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வாங்கியது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

nastaq2
nastaq2

2010ஆம் ஆண்டுக் கிரிஷ் மாத்ருபூதம் மற்றும் ஷன் கிருஷ்ணசாமி இருவரும் சேர்ந்து நிறுவனங்களுக்கான வாடிக்கையாளர் சேவை மென்பொருளை உருவாக்க வேண்டும் என்பதற்காக Freshdesk என்ற நிறுவனத்தை உருவாக்கினார். 2017ல் இந்த நிறுவனம் Freshworks நிறுவனமான உருமாற்றம் அடைந்தது.

கிரிஷ் மாத்ருபூதம் தலைமையில் FreshWorks நிறுவனம் சுமார் 11 வருடமாக இயங்கி வரும் நிலையில், இந்நிறுவனம் சென்னை, கலிபோர்னியா ஆகிய இரு இடங்களை Dual Headquaters என்ற அடிப்படையில் தனது தலைமையிடத்தைக் கொண்டு இயங்கி வருகிறது.

nastaq 3
nastaq 3

SAAS பிரிவில் இயங்கி வரும் FreshWorks நிறுவனம் அமெரிக்காவின் சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்துடன் போட்டிப்போடும் காரணத்தால் உலகளாவிய வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக அமெரிக்காவிலும் தலைமையிடத்தை அமைத்துள்ளது.

ஆனால் இந்நிறுவனத்தின் பெரும் பகுதி டெக் மற்றும் ஆப்ரேஷன்ஸ் ஊழியர்கள் சென்னை பெருங்குடி பகுதியில் இருக்கும் அலுவலகத்தில் இருந்து தான் பணியாற்றி வருகின்றனர்.

freshworks
freshworks

FreshWorks நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ-வான கிரிஷ் மாத்ருபூதம் திருச்சியைச் சேர்ந்தவர். இவர் தஞ்சாவூரில் இருக்கும் மிகவும் பிரபலமான சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் 1996ஆம் ஆண்டுப் பி.இ பட்டம் பெற்றார். இதைத் தொடர்ந்து மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் 1998ஆம் ஆண்டு மார்கெட்டிங் பிரிவில் எம்பிஏ பட்டம் பெற்றவர்.

zoho
zoho

கல்லூரி படிப்பை முடித்த கிரிஷ் மாத்ருபூதம் முதல் வேலையாக ஹெச்சிஎல் சிஸ்கோ நிறுவனத்தில் 1.3 வருடம் பணியாற்றினார். ஹெச்சிஎல் நிறுவனத்திற்குப் பின்பு கிரிஷ் மாத்ருபூதம் ஈபோர்ஸ், AdventNet ஆகிய இரு நிறுவனத்தில் 5 வருடம் பணியாற்றினார்.

krish madhrupudham
krish madhrupudham

இதைத் தொடர்ந்து சென்னையின் முன்னணி மென்பொருள் சேவை நிறுவனமான நிறுவனமான ZOHO-வில் பல உயர் பதவியில் சுமார் 5 வருடம் பணியாற்றினார்.

krish 1
krish 1

ZOHO நிறுவனத்தில் பிராடெக் மேனேஜ்மென்ட் பிரிவின் துணைத் தலைவர் பதவி வரையில் உயர்ந்த கிரிஷ் மாத்ருபூதம் அக்டோபர் 2010ல் FreshWorks நிறுவனத்தை நிறுவினார்.

nastaq1
nastaq1

பல தடைகள் பல தடுமாற்றங்கள் இருந்தாலும் கடுமையான உழைப்பு இன்று மிகப்பெரிய நிறுவனமாக வளர்ச்சி அடைந்து, கை மேல் பலன் கொடுத்துள்ளது.

FreshWorks நிறுவனம் உலகளவில் தற்போது சுமார் 50,000-க்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டு பல்வேறு சேவைகளை அளித்து வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

nastaq
nastaq

இதேபோல் இந்நிறுவனத்தில் சுமார் 4,300 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் 500 ஊழியர்கள் தற்போது ஐபிஓ வெளியிட்டுள்ளதன் மூலம் கோடீஸ்வரனாக உயர்ந்துள்ளனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories