December 6, 2025, 11:51 AM
26.8 C
Chennai

கேக் செய்யும் நாய்.. வைரல் வீடியோ!

dog cake
dog cake

மனிதர்கள் சமையல் செய்து பார்த்து இருப்பீர்கள், விலங்குகள் செய்து பார்த்து இருக்கிறீர்களா? அதுவும் ஒரு நாய் வாழைப்பழ கேக் ஒன்றினை தயார் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

சமையலை செய்வதே பெரிய காரியம். அதிலும் ஒழுங்காக கற்று கொண்டு சிறப்பாக செய்வது அதைவிட பெரிய காரியம் ஆகும். எந்த உணவு செய்தாலும் இது பொருந்தும். உங்களுக்கு வாழைப்பழ பாம்கேக்குகள் எப்படி செய்வது என்று தெரியுமா ? கவலையே இல்லை.

சுவையான வாழைப்பழ பாம்கேக்கை எப்படி செய்வது என்று நாய் உங்களுக்கு சொல்லு கொடுக்கிறது. எப்படி இந்த நாய் கேக்கினை தயார் செய்கிறது என்ற ஆச்சரியம் இந்த வீடியோவினை பார்க்கும் அனைவருக்கும் இருக்கிறது. நாய் செப் அணிந்திருக்கும் தொப்பியினை அணிந்து செய்வதை பார்க்கும் போதே , நாய் ஏதோ ஒரு உணவை சமைக்க போகிறது என்று தெரிகிறது.

அதுவும் கேக்கை அசால்ட்டாக செய்கிறது. இந்த வீடியோவை பார்த்து நாம் கூட கேக் எளிதாக கற்றுக்கொள்ளலாம் போல் இருக்கிறது. அந்த அளவுக்கு எளிமையாக இந்த நாய் வாழைப்பழ பாம்கேக்கை செய்கிறது. இந்த வைரல் வீடியோவை இதுவரை 5000க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.

dog
dog

இந்த வீடியோவில் வரும் நாயின் பெயர் ‘நக்கெட்கோ’. விளையாடுவது, குளிப்பது, முடி வெட்டுவது, ஓடுவது, தூங்குவது என இந்த நாய் அன்றாடம் செய்யும் குறும்புத்தனமான சேட்டைகளை ‘நக்கெட்கோ’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதன் உரிமையாளர் ஷேர் செய்து வருகிறார்.

இந்த நாயின் குறும்புத்தனமான செயல்கள் அடங்கிய வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகி வருகிறது.

இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. “ஒரு நாய் கேக் தயாரிப்பது வித்தியாசமானது” என்றும், கேக்கை இவரிடமே கற்றுக்கொள்ளலாம் என்றும், இன்னும் சிலரோ நாய் செய்த கேக்கை சாப்பிடுவது இன்னும் வேடிக்கையானது என்றும் கிண்டலாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

இதனிடையே நாய், பூனை இருக்கும் மற்றொரு வீடியோவும் வைரலாகி வருகிறது. நாய்களும் பூனைகளும் எதிரிகள். அது இரண்டும் சண்டையிட்டு கொண்டே இருக்கும் என்று நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் மனிதர்கள் மட்டும் தான் எதிரியாகவும், நண்பர்களாகவும் இருக்க முடியுமா, விலங்குகள் இருக்க முடியாதா? என கேள்வி எழுப்பும் வகையில் இவை இரண்டும் ஒன்றாக இருக்கிறது.

இந்த வீடியோ ஒரு நாய்க்கும், பூனைக்கும் இடையே உள்ள அன்பினை காட்டுகிறது. வீடியோவில் நாயும், பூனையும் ஒன்றாக அமர்ந்து இருக்கிறது. விளையாடி கொண்டே பூனை நாயின் முகத்தினை நக்குகிறது.

இந்த அன்பினை படம் எடுத்து சோசியல் மீடியாவில் பகிர, வைரல் செய்தியானது. அவ்வப்போது விலங்குகள் செய்யும் சேட்டைகளும் மக்களை ரசிக்க வைத்து வருகிறது என்பது இதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories