தமிழகத்தில் நவோதயா பள்ளிகளின் அவசியம்.., தடுக்கும் ஆளும் அரசியல் கட்சிகள்! தமிழக அரசுக்கு பால குருசாமி வலியுறுத்தல்!

navothaya
navothaya

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை துவக்க, தமிழக அரசு உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்’ என அண்ணா பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி வலியுறுத்தி உள்ளார்

தமிழக அரசியல் கட்சி தலைவர்களுக்கு அவர் விடுத்து உள்ள வேண்டுகோள் அறிக்கை: நாடு முழுதும் தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில், 638 நவோதயா பள்ளிகள் செயல்படுகின்றன. மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில், உறைவிட பள்ளிகளாக செயல்படுகின்றன.

இந்த பள்ளிகளில் 75 சதவீதம், ஊரக பகுதி மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். ஐ.ஐ.டி., சேர்க்கைக்கான ஜே.இ.இ., தேர்வில் தேர்ச்சி பெறுவோரில் 20 சதவீதம் பேர், நவோதயா பள்ளி மாணவர்கள்.

அதேபோல, ‘நீட்’ தேர்வில் 80 சதவீதம், நவோதயா பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெறுகின்றனர். இந்த அளவுக்கு சிறப்பாக செயல்படும் நவோதயா பள்ளிகளை, தமிழகத்தில் திறக்க அனுமதி வழங்காமல், தமிழகத்தை ஆளும் அரசியல் கட்சிகள் தடுத்து வருகின்றன.

bala gurusamy
bala gurusamy

கடந்த 2017ல் கன்னியாகுமரியை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், பொது நல வழக்கு தொடர்ந்தது. அதில், அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் ஒரு நவோதயா பள்ளி திறக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போதைய, அ.தி.மு.க., அரசு இந்த பணியை துவங்கவில்லை.

நவோதயா பள்ளி விதிகளின்படி, அந்த பள்ளிகள் அமைந்துள்ள மாநில மொழிகளே, முதல் மற்றும் பயிற்று மொழியாக கடைப்பிடிக்கப்படும்.

இதை பார்க்கும் போது, தமிழக மொழி கொள்கைக்கு மாற்றம் இல்லாமல், நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் செயல்பட முடியும். எனவே, தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க விரும்பும் தமிழக அரசு, நவோதயா பள்ளிகளை திறக்க உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழக அரசியல் கட்சிகள் அதற்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இவ்வாறு பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories