December 6, 2025, 3:58 AM
24.9 C
Chennai

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளின் அவசியம்.., தடுக்கும் ஆளும் அரசியல் கட்சிகள்! தமிழக அரசுக்கு பால குருசாமி வலியுறுத்தல்!

navothaya
navothaya

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை துவக்க, தமிழக அரசு உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்’ என அண்ணா பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி வலியுறுத்தி உள்ளார்

தமிழக அரசியல் கட்சி தலைவர்களுக்கு அவர் விடுத்து உள்ள வேண்டுகோள் அறிக்கை: நாடு முழுதும் தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில், 638 நவோதயா பள்ளிகள் செயல்படுகின்றன. மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில், உறைவிட பள்ளிகளாக செயல்படுகின்றன.

இந்த பள்ளிகளில் 75 சதவீதம், ஊரக பகுதி மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். ஐ.ஐ.டி., சேர்க்கைக்கான ஜே.இ.இ., தேர்வில் தேர்ச்சி பெறுவோரில் 20 சதவீதம் பேர், நவோதயா பள்ளி மாணவர்கள்.

அதேபோல, ‘நீட்’ தேர்வில் 80 சதவீதம், நவோதயா பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெறுகின்றனர். இந்த அளவுக்கு சிறப்பாக செயல்படும் நவோதயா பள்ளிகளை, தமிழகத்தில் திறக்க அனுமதி வழங்காமல், தமிழகத்தை ஆளும் அரசியல் கட்சிகள் தடுத்து வருகின்றன.

bala gurusamy
bala gurusamy

கடந்த 2017ல் கன்னியாகுமரியை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், பொது நல வழக்கு தொடர்ந்தது. அதில், அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் ஒரு நவோதயா பள்ளி திறக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போதைய, அ.தி.மு.க., அரசு இந்த பணியை துவங்கவில்லை.

நவோதயா பள்ளி விதிகளின்படி, அந்த பள்ளிகள் அமைந்துள்ள மாநில மொழிகளே, முதல் மற்றும் பயிற்று மொழியாக கடைப்பிடிக்கப்படும்.

இதை பார்க்கும் போது, தமிழக மொழி கொள்கைக்கு மாற்றம் இல்லாமல், நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் செயல்பட முடியும். எனவே, தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க விரும்பும் தமிழக அரசு, நவோதயா பள்ளிகளை திறக்க உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழக அரசியல் கட்சிகள் அதற்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இவ்வாறு பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories