லட்சியத்துடன் லட்சத்தில் குவிந்த பக்தர்கள்: வழியின்றி அனுமதித்த காவல்துறை! ஆய்க்குடியில் அசத்தல்!

ayikudi soorasamharam1
ayikudi soorasamharam1

இந்து மக்கள் லட்சியத்துடன் ஒன்று திரண்டால், தங்கள் குறிக்கோளில் உறுதியாய் நின்றால்… உரிமைகளைச் சரியாய்ப் பெறலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக… இன்று தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் நடந்த சூரசம்ஹார நிகழ்ச்சி தமிழகத்தின் பக்தர்களுக்கு முக்கியமான ஒரு செய்தியை எடுத்துரைத்துள்ளது.

இன்று முருகன் ஆலயங்களில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்வாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டிருந்தது. சூரசம்ஹார விழாவுக்கு புகழ்பெற்ற திருச்செந்தூர் கடற்கரையில் மக்கள் பெருமளவில் கூடுவதற்கு அறநிலையத் துறையும் மாநில அரசும் தடை விதித்திருந்தது. கடந்த இரு தினங்களுக்கு முன் திருச்செந்தூர் ஆலய வளாகத்தில் கலையரங்கத்தில் இரவு நேரம் மழைக்கு ஒதுங்கி இருந்த பக்தர்களை போலீசார் விரட்டியடித்தனர். தட்டிக்கேட்ட ஒரு பெண்ணை தரதரவென்று இழுத்துச் சென்று போலீசார் அராஜகத்தில் ஈடுபட்டனர் … இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. மக்கள் மத்தியில் இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது

இதுபோல் தென்காசி மாவட்டத்தில் புகழ்பெற்ற ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சூரசம்ஹார விழாவுக்கும் போலீசார் கெடுபிடிகளை முன்வைத்தனர். தென்காசி மாவட்ட காவல் துறையின் சார்பில் இதற்காக பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டன.

ALSO READ:  தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!
ayikudi soorasamharam3
ayikudi soorasamharam3

தென்காசி மாவட்ட காவல் துறையின் சார்பில் வைக்கப்பட்ட அறிவிப்பில்… அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் திருச்செந்தூர் நடைபெறும் கந்தசஷ்டி விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி வருகின்ற 09.11.2021 செவ்வாய்க்கிழமை மற்றும் 10.11.2021 புதன்கிழமை ஆகிய இரு தினங்களில் நடைபெறவுள்ள சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் விழாக்களுக்கு பொதுமக்கள் காண அனுமதி இல்லை. எனவே பொதுமக்கள் திருக்கோவிலுக்கு செல்வதை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இப்படிக்கு, ஆய்க்குடி காவல் நிலையம், தென்காசி காவல் உட்கோட்டம், தென்காசி மாவட்டம் – என்ற அறிவிப்பு பளிச்சிட்டது. அங்கங்கே டிஜிட்டல் பிளக்ஸ் போர்டுகளும் காவல்துறையின் சார்பில் தடுப்புகளும் அமைக்கப்பட்டு இருந்தன.

ayikudi soorasamharam4
ayikudi soorasamharam4

ஆயினும், காவல் துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பிளக்ஸ் பேனர்களில், சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. திருச்செந்தூர் கோவிலுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி அனுமதி இல்லை என்பதை தென்காசி மாவட்டம் ஆயக்குடியில் ஏன் வைக்க வேண்டும் என்ற கேள்விகளை பக்தர்கள் எழுப்பினர். பலர் காவல்துறையின் அறியாமையை எண்ணி சிரித்தபடி சென்றனர்!

ALSO READ:  தகுந்த வைத்தியம் தேவை!
ayikudi soorasamharam2
ayikudi soorasamharam2

ஆனால், வழக்கம்போல் ஆய்க்குடி ஸ்ரீ முருகன் கோவில் சூரசம்ஹார விழாவுக்கு பக்தர்கள் இன்று பெருமளவு திரண்டனர். போலீஸார் ஆங்காங்கே ஏற்படுத்தி வைத்திருந்த தடுப்புகளை மீறி பக்தர்கள் பெருமளவில் குவிந்து, தாங்கள் இந்த முறை சூரசம்ஹார நிகழ்வை வழக்கம் போல் நடத்தி பக்தர் தரிசனத்துக்கு திறந்து வைப்போம்… இடம் மாற்ற மாட்டோம், வேறு எங்கும் நடத்தப்படக் கூடாது, பக்தர்கள் முன்னிலையில் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.

தடுப்புகளை அகற்றி விழாவை வழக்கம்போல் நடத்துவதற்கு போலீசாரை வற்புறுத்தியதால் வேறுவழியின்றி போலீசாரும் பக்தர்களை அனுமதித்தனர். விழா வழக்கம்போல் சிறப்பாக நடைபெற்றது. பக்தர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதாலும், பக்தர்கள் உறுதியுடன் இருந்ததாலும், போலீசாரால் தங்கள் கெடுபிடிகளை காட்ட முடியவில்லை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

Topics

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

அஸ்ஸாமில் ஆர் எஸ் எஸ் கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று அந்த அமைப்பின் ஆண்டறிக்கை கூறுகிறது. வித்யா பாரதி மூலமாக அந்த மாநிலத்தில் 121 ஆரம்ப பள்ளிகளும் 115 நடுநிலைப் பள்ளிகளும் 341 மேல்நிலைப் பள்ளிகளும் நடத்தப்படுகின்றன. சுமார் இரண்டு லட்சம் மாணவர்கள் இதன்மூலம் பயன் பெறுகின்றனர்.

Entertainment News

Popular Categories