April 27, 2025, 2:55 AM
29.6 C
Chennai

முதல்ல வேலை.. அப்பறம் கொஞ்சல்.. காத்திருக்கும் செல்லப்பிராணி! வைரல்!

dog
dog

பலரது வீட்டில் நாய்கள் மிகவும் செல்லமாகவும், குடும்பத்தில் ஒரு உறுப்பினரை போலவுமே வளர்க்கப்பட்டு வருகின்றன.

நாய்களின் சேட்டைகள் அடங்கிய வீடியோக்கள் அவ்வப்போது ஆன்லைனில் ஷேர் செய்யப்பட்டு சோஷியல் மீடியாக்களில் வைரலாகி பலரை மகிழ்விக்கின்றன.

வீட்டில் இருக்கும் சிறு குழந்தைகளை போலவே நாய்களும் நம்மிடையே பாசத்தையும், அரவணைப்பையும் கூடுதலான கவனிப்பையும் எதிர்பார்க்கின்றன. ஒருவேளை அதை நம்மால் சரியாக கவனிக்க முடியாவிட்டால் அதனுடன் நேரத்தை செலவழிக்கா விட்டால் வாயில்லா பிராணியாக இருந்தாலும், மனிதர்களை போலவே கவலை மற்றும் ஏக்கத்தை முகத்தில் மற்றும் செயல்பாடுகள் மூலம் வெளிப்படுத்துகின்றன.

இதனிடையே மிகவும் பொறுமைசாலியாக இருக்கும் ஒரு நாயின் வீடியோ சமீபத்தில் நெட்டிசன்களால் சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்யப்பட்டு மிகவும் வைரலாகி வருகிறது. முதலில் டிக்டாக்கில் ஷேர் செய்யப்பட்டு வைரலாகிய இந்த வீடியோ, தற்போது கோடிக்கணக்கான யூஸர்கள் பயன்படுத்தி வரும் இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோ பார்ப்பவர்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறது.

“அவன் மிகவும் பொறுமையாக காத்திருந்தான்” என்ற கேப்ஷனுடன் ஷேர் செய்யப்பட்டுள்ள குறிப்பிட்ட வீடியோவில் ஒருவர் சோஃபாவில் படுத்திருப்பதையும் அவரது செல்ல நாய் பொறுமையாக அவருக்கு அருகில் அமர்ந்திருப்பதையும் முதலில் பார்க்க முடிகிறது.

ALSO READ:  மதுரை பகுதியில் பங்குனி உத்ஸவ விழாக்கள்!

பின் சில வினாடிகளில், அவர் தனது மடியில் இருக்கும் லேப்டாப்பை எடுத்து தூர வைக்கிறார். இதற்காக தான் காத்திருந்தேன் என்ற மைண்ட் வாய்ஸ் கொண்ட அந்த நாய் உடனடியாக அவர் மார்பின் மீதேறி இரு முன்னங்கால்களையும் வைத்து கொண்டு கட்டிப்பிடித்தபடி தலையை சாய்த்து கொள்கிறது.

pubity என்ற இன்ஸ்டா பேஜில் ஷேர் செய்யப்பட்டுள்ள இந்த க்யூட் வீடியோ, இதுவரை 8 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்கள், 2,100-க்கும் மேற்பட்ட கமெண்ட்ஸ்களை குவித்துள்ளது.

“நான் இந்த தருணத்திற்காக காத்திருந்தேன்” என்பது போல் அந்த நாயின் செயல் இருப்பதாக பல நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து உள்ளார்கள்.

மற்றொரு இன்ஸ்டா யூஸர் “நான் என் பூனைக்கு இந்த வீடியோவைக் காண்பிப்பேன், இதன் மூலம் மேலும் சில பழக்கங்களை அது கற்று கொள்ளும் என்று நம்புகிறேன்” என குறிப்பிட்டு உள்ளார்.

மற்றொரு யூஸர் “Laptop to lapdog” என்று வேடிக்கையாக குறிப்பிட்டு உள்ளார். சில நாட்களுக்கு முன்பு, ஒரு அழகான குட்டி நாய் லேப்டாப்பை திறந்து உரிமையாளர் வேலை செய்ய முயலும் போது உடனுக்குடன் அதை க்ளோஸ் செய்த வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  திமுக என்ற கட்சி தொடங்கியதே தேசப் பிரிவினையை முன்னிறுத்திதான்!
https://www.instagram.com/reel/CWOO9ohItlH/?utm_source=ig_embed&utm_campaign=loading

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கத் தேவையான சக்தி..!

இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் படுகொலைச் சம்பவத்தில்

IPL 2025: கோலி அதிரடி; பெங்களூருக்கு சிறப்பான வெற்றி!

பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் ஹேசல்வுட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இன்றைய ஆட்டத்தில் இரண்டு

Entertainment News

Popular Categories