December 5, 2025, 1:45 PM
26.9 C
Chennai

முதல்ல வேலை.. அப்பறம் கொஞ்சல்.. காத்திருக்கும் செல்லப்பிராணி! வைரல்!

dog
dog

பலரது வீட்டில் நாய்கள் மிகவும் செல்லமாகவும், குடும்பத்தில் ஒரு உறுப்பினரை போலவுமே வளர்க்கப்பட்டு வருகின்றன.

நாய்களின் சேட்டைகள் அடங்கிய வீடியோக்கள் அவ்வப்போது ஆன்லைனில் ஷேர் செய்யப்பட்டு சோஷியல் மீடியாக்களில் வைரலாகி பலரை மகிழ்விக்கின்றன.

வீட்டில் இருக்கும் சிறு குழந்தைகளை போலவே நாய்களும் நம்மிடையே பாசத்தையும், அரவணைப்பையும் கூடுதலான கவனிப்பையும் எதிர்பார்க்கின்றன. ஒருவேளை அதை நம்மால் சரியாக கவனிக்க முடியாவிட்டால் அதனுடன் நேரத்தை செலவழிக்கா விட்டால் வாயில்லா பிராணியாக இருந்தாலும், மனிதர்களை போலவே கவலை மற்றும் ஏக்கத்தை முகத்தில் மற்றும் செயல்பாடுகள் மூலம் வெளிப்படுத்துகின்றன.

இதனிடையே மிகவும் பொறுமைசாலியாக இருக்கும் ஒரு நாயின் வீடியோ சமீபத்தில் நெட்டிசன்களால் சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்யப்பட்டு மிகவும் வைரலாகி வருகிறது. முதலில் டிக்டாக்கில் ஷேர் செய்யப்பட்டு வைரலாகிய இந்த வீடியோ, தற்போது கோடிக்கணக்கான யூஸர்கள் பயன்படுத்தி வரும் இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோ பார்ப்பவர்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறது.

“அவன் மிகவும் பொறுமையாக காத்திருந்தான்” என்ற கேப்ஷனுடன் ஷேர் செய்யப்பட்டுள்ள குறிப்பிட்ட வீடியோவில் ஒருவர் சோஃபாவில் படுத்திருப்பதையும் அவரது செல்ல நாய் பொறுமையாக அவருக்கு அருகில் அமர்ந்திருப்பதையும் முதலில் பார்க்க முடிகிறது.

பின் சில வினாடிகளில், அவர் தனது மடியில் இருக்கும் லேப்டாப்பை எடுத்து தூர வைக்கிறார். இதற்காக தான் காத்திருந்தேன் என்ற மைண்ட் வாய்ஸ் கொண்ட அந்த நாய் உடனடியாக அவர் மார்பின் மீதேறி இரு முன்னங்கால்களையும் வைத்து கொண்டு கட்டிப்பிடித்தபடி தலையை சாய்த்து கொள்கிறது.

pubity என்ற இன்ஸ்டா பேஜில் ஷேர் செய்யப்பட்டுள்ள இந்த க்யூட் வீடியோ, இதுவரை 8 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்கள், 2,100-க்கும் மேற்பட்ட கமெண்ட்ஸ்களை குவித்துள்ளது.

“நான் இந்த தருணத்திற்காக காத்திருந்தேன்” என்பது போல் அந்த நாயின் செயல் இருப்பதாக பல நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து உள்ளார்கள்.

மற்றொரு இன்ஸ்டா யூஸர் “நான் என் பூனைக்கு இந்த வீடியோவைக் காண்பிப்பேன், இதன் மூலம் மேலும் சில பழக்கங்களை அது கற்று கொள்ளும் என்று நம்புகிறேன்” என குறிப்பிட்டு உள்ளார்.

மற்றொரு யூஸர் “Laptop to lapdog” என்று வேடிக்கையாக குறிப்பிட்டு உள்ளார். சில நாட்களுக்கு முன்பு, ஒரு அழகான குட்டி நாய் லேப்டாப்பை திறந்து உரிமையாளர் வேலை செய்ய முயலும் போது உடனுக்குடன் அதை க்ளோஸ் செய்த வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/reel/CWOO9ohItlH/?utm_source=ig_embed&utm_campaign=loading

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories