December 5, 2025, 7:43 PM
26.7 C
Chennai

இறந்தவர்களின் ஆதார், பான், போன்றவற்றை எப்படி கையாள வேண்டும்..?

Id card - 2025

அன்புக்குரியவர்களின் மரணத்திற்குப் பிறகு நிதி முறைகேடுகள் அல்லது தளர்வான முனைகள் காரணமாகத் தவிப்பில் இருக்கும் காயத்திற்குக் கூடுதல் வலியைச் சேர்க்கின்றன.

நம்மை விட்டுப் பிரிந்த ஒரு நபரின் நிதி ஆவணங்களை நாம் சரியாக நிர்வகிப்பது மிகவும் முக்கியமானது. இதை எப்படி நிர்வகிப்பது என்பதை அறிந்து கொள்வது என்பதை அனைவரும் தெரிந்துகொள்வது சிறப்பானது.

இதை அறிந்துகொள்வதன் மூலம், இறந்தவர்களின் ஆவணங்களைத் தவறான காரியம் அல்லது மோசடிகளுக்கு ஆளாகாமல் நீங்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம். சரி, இந்த ஆவணங்களை எப்படிப் பராமரிப்பது என்று தெரிந்துகொள்ளலாம்.

இறந்த நபரின் அரசாங்க ஐடிகளை என்ன செய்வது?
இறந்த நபரின் உத்தியோகபூர்வ ஆவணங்கள் மற்றும் அரசாங்க ஐடிகள் போன்றவற்றைக் கையாள சரியான வழி என்று நாம் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள் இங்கு உள்ளது.

அதை நாம் அனைவரும் அறிந்து செயல்படுவது பாதுகாப்பானது. இறந்த நபரின் PAN அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் போன்ற முக்கிய ஆவணங்களை என்ன செய்வது என்று சரியாகத் தெரியாதவர்கள் இந்த பதிவை முழுமையாகப் படித்து பயன்பெறுங்கள்.

இறந்த நபரின் ஆதார் ஆட்டையை என்ன செய்வது?
ஆதார் அட்டை மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். ஏனெனில், இது அடையாளச் சான்றாகவும் முகவரிச் சான்றாகவும் செயல்படுகிறது. அரசாங்கத்திடம் இருந்து எல்பிஜி மானியம், உதவித்தொகைப் பலன்கள் அல்லது மானியப் பலன்களைப் பெறும்போது, ​​EPF கணக்குகள், ITR தாக்கல் செய்தல் போன்றவற்றின் போதும், இதை மேற்கோள் காட்டுவது அல்லது இதன் நகலைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக உள்ளது.

ஆதார் ஒரு தனித்துவமான அடையாள எண்ணாக இருக்க வேண்டும் என்பதால், இந்த எண் அந்த நபர் இறந்த பின்னரும் தொடர்கிறது.

இறந்த நபரின் ஆதார் அட்டையை ஏன் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் தெரியுமா?

ஆதார் வைத்திருப்பவரின் மறைவுக்குப் பிறகும் ஆதாரை நீங்கள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். தற்போது, ​ஆதாரை நிர்வகிக்கும் அமைப்பான இந்தியத் தனித்துவ அடையாள ஆணையமான UIDAI, மாநிலங்கள் முழுவதும் உள்ள இறப்புப் பதிவேடுகளுடன் இணைக்கப்படவில்லை என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்.

இதனால், ஆதார் வைத்திருப்பவரின் இறப்பைப் பிரதிபலிக்கும் வகையில் ஆதார் தானாகவே புதுப்பிக்கப்படாது. இறப்பைப் பதிவு செய்வதற்கும் இறப்புச் சான்றிதழைப் பெறுவதற்கும் ஆதார் கட்டாயமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இறந்த நபரின் ஆதாரை மற்றவர் பயன்படுத்தாமல் இருக்க என்ன செய்வது?

இதனால் தான் இறந்தவரின் ஆதார் அட்டை தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதைக் குடும்ப உறுப்பினர்கள் ஆதார் அட்டையைப் பத்திரமாக வைத்துக்கொள்வதை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.

இறந்த நபரின் ஆதார் அட்டையைச் செயலிழக்கச் செய்வது அல்லது ரத்து செய்வதற்கு UIDAI இடம் சரியான வழி என்று இப்போது வரை எதுவும் இல்லை என்றாலும் கூட, mAadhaar செயலி அல்லது UIDAI இணையதளம் மூலம் இறந்த நபரின் சான்றுகளின் பயோமெட்ரிக் சான்றுகளை நீங்கள் லாக் செய்து வைக்கலாம்.

இதன் மூலம் இறந்த நபரின் பயோமெட்ரிக் அங்கீகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதை நாம் தடுக்க முடியும்.

இறந்த நபரின் PAN அட்டையை என்ன செய்வது?
நிரந்தர கணக்கு எண் அட்டை அல்லது பான் அட்டை என்பது நாட்டின் மிக முக்கியமான நிதி ஆவணங்களில் ஒன்றாகும். வங்கிக் கணக்குகள், டீமேட் கணக்குகள், இறந்தவரின் வருமான வரிக் கணக்கு (ITR) தாக்கல் செய்தல், நிதிப் பரிவர்த்தனைகள் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக இது ஒரு கட்டாயப் பதிவாகும்.

ஒருவர் இறந்த பிறகும், PAN அட்டையை மேற்கோள் காட்டுவது கட்டாயமானது. ஐடிஆர்களை தாக்கல் செய்யும் பட்சத்தில், ஐடி துறையால் வரிக் கணக்கு தாக்கல் செய்யப்பட்டு செயலாக்கப்படும் வரை நீங்கள் பான் அட்டையைப் பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.

இறந்த நபரின் பான் அட்டை உங்களுக்குத் தேவையில்லை என்றால் மட்டும் இதைச் செய்யுங்கள்

பிற்காலத்தில் எந்த நோக்கத்திற்காகவும் இது ஒரு சான்றாகத் தேவைப்படலாம் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் அதைச் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை, அதை நீங்கள் உங்கள் கைகளிலேயே தக்க வைத்துக் கொள்ளலாம்.

ஒரு வேலை இறந்த நபரின் பான் அட்டை உங்களுக்குத் தேவையில்லை என்று நீங்கள் உணர்ந்தால், அது தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் அதை வரித் துறையிடம் மேற்கோள்காட்டிய விதத்தில் சமர்ப்பித்து, அதன் சேவையை யாரும் பயன்படுத்தாமல் தடுக்கலாம்.

இறந்த நபரின் பாஸ்போர்ட்டை என்ன செய்வது?

ஆதார் அட்டையைப் போலவே, பாஸ்போர்ட்டுக்கும் சரணடைவதற்கோ அல்லது இறந்தவுடன் ரத்துசெய்வதற்கோ எந்த ஏற்பாடும் இல்லை. தேவையான அதிகாரிகளிடம் தெரிவிக்கும் நடைமுறையும் இங்கு இல்லை.

இருப்பினும், ஒரு பாஸ்போர்ட் வெறும் 10 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதனால், அது காலாவதியானவுடன் தானாகவே செல்லுபடியாகாமல் செயல் இழந்துவிடும்.

நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த ஆவணத்தை செல்லுபடியாகும் வரை அதைத் தக்கவைத்துக்கொள்வது புத்திசாலித்தனமானது, ஏனெனில் இது எதிர்பாராத சூழ்நிலைகளில் முகவரிச் சான்றாக பயன்பெறும்.

இறந்த நபரின் ஓட்டுனர் உரிமம் அல்லது டிரைவிங் லைசன்ஸை என்ன செய்வது?

இறந்த நபரின் ஓட்டுனர் உரிமம் அல்லது டிரைவிங் லைசன்ஸை என்ன செய்வது?
ஆதார் மற்றும் பாஸ்போர்ட்டைப் போலவே, இறந்தவரின் ஓட்டுநர் உரிமத்தைச் சரணடையச் செய்வதற்கோ அல்லது ரத்து செய்வதற்கோ எந்த ஏற்பாடும் வழிகளும் இங்கு இல்லை.

ஒவ்வொரு மாநிலமும் ஓட்டுநர் உரிமத்தின் சிக்கல், இடைநீக்கம் மற்றும் ரத்து ஆகியவற்றை தனித்தனியாக நிர்வகிக்கிறது. அதனால் தான், நீங்கள் மாநிலம் குறிப்பிடும் விதிமுறைகளை உறுதிப்படுத்திப் பின்பற்றுவது நல்லது. இறந்த நபரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய நீங்கள் அதற்குச் சம்பந்தப்பட்ட ஆர்டிஓ அலுவலகத்தை அணுகலாம்.

இறந்தவரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட வாகனத்தை எப்படிப் பெயர் மாற்றம் செய்வது?

இறந்தவரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட வாகனத்தை வேறொருவரின் பெயருக்கு மாற்றுவதற்கான மாநில குறிப்பிட்ட செயல்முறையையும் நீங்கள் அங்கு மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இறந்த நபரின் அனைத்து முக்கிய ஆவணங்களும் ஒரு பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட வேண்டும் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

இதனால், அந்த ஆவணங்கள் மோசடி செய்பவர்கள் மற்றும் பிற தவறான நபர்களால் இறந்தவரின் குடும்பத்தைப் பின்னர் சிக்கலில் சிக்க வைக்கும் சிக்கல்களில் இருந்து பாதுகாக்கும் படி பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories