நடிகர் அஜித்தின் மேனேஜர் பதிவை மறு பதிவு செய்த பாஜக நிர்வாகி, அண்ணாமலைக்கும், அஜித்துக்கும் ஒரே எண்ணம் தான் என குறிப்பிட்டிருக்கிறார்
அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அதில் ஒரு கணவன் மனைவி ஜோடி கழுதையை வைத்து எது செய்தாலும் அதை பார்பவர்கள் எதாவது ஒரு கருத்து கூறிக்கொண்டே இருப்பார்கள். நாம் எது செய்தாலும் உலகம் பேசிக்கொண்டே தான் இருக்கும், எல்லோரையும் நம்மால் திருப்தி படுத்த முடியாது என்ற கருத்து அந்த புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த புகைப்படத்தோடு இதன் பொருட்டு தொடர்பு உடையவருக்கு! நிபந்தனையற்ற அன்பு. அஜித் என குறிப்பிட்டிருந்தார்
இந்நிலையில், அஜித்தின் அந்தப் பதிவு தற்போது தமிழக பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவுத் தலைவராக உள்ள அமர்பிரசாத் ரெட்டி, அஜித்தும் அண்ணாமலையும் உயர்ந்த சிந்தனைகள் கொண்டவர்கள் எனக் கூறியுள்ளார்.
மேலும் தேவையற்ற விமர்சனங்களால் திசை திரும்பாமல் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற ஒரே மாதிரியான சிந்தனைகளைக் கொண்ட கதைகளை அஜித்தும் அண்ணாமலையும் கூறியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.