December 6, 2025, 2:30 AM
26 C
Chennai

நீட்- முதலிடம் பெற்று சாதித்த தமிழக மாணவன் பிரபஞ்சன்!

neet prapanjan - 2025
#image_title

விழுப்புரம் மாவட்டம் மேல்ஒலக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணிபுரியும் ஜெகதீஷின் மகன் பிரபஞ்சன இன்று வெளிவந்த NEET தேர்வு முடிவில் 720/720 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றார்.

நீட் தேர்வு முடிவுகளை அறிய… லிங்க்: https://testservices.nic.in/resultservices/neet-2023-auth

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக மற்றும் ஆந்திர மாணவர்கள் முதலிடத்தையும், தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர், பட்டியலில் முதல் 10 இடங்களிலும் இடம் பிடித்துள்ளனர்.

மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்பில் சேர நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுதும் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை கடந்த மாதம் 7 ம் தேதி 13 மொழிகளில் நடத்தியது. 499 நகரங்களில் நடைபெற்ற தேர்வில் 20.38 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில் 11,45,976 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்தேர்வை 30,536 பேர் தமிழிலும் எழுதியிருந்தனர்.

இந்தத் தேர்வில், தமிழகத்தில் அரசியல்வாதிகளால் ஏற்படுத்தப்பட்டுள்ள, குறிப்பாக ஆளும் திமுக.,வின் தடைகளை மீறி தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் தேசிய அளவில் முதலிடம் பிடித்து நீட் குறித்த அரசியலை பொய்யாக்கியுள்ளார்.

விழப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அருகே உள்ள மேல்ஓலக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபஞ்சன் 10 ஆம் வகுப்பு வரையில் மாநில பாடத்திட்டத்தில் பயின்றுள்ளார். தற்போது நடந்து முடிந்துள்ள நீட் தேர்வில் முதல் முயற்சியிலேயே மொத்த மதிப்பெண்களான 720க்கு 720 எடுத்து தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். பிரபஞ்சன் கூறுகையில், நீட் தேர்வு கடினம் என்ற மன நிலையில் இருந்து மாணவர்கள் வெளியே வரவேண்டும் என்று நீட் அரசியலுக்கு சாவு மணி அடித்துள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபஞ்சன் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த போரா வருண்சக்கரவர்த்தி ஆகிய மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். முதல் 10 இடங்களை பிடித்தவர்களில் 4 பேர் தமிழக மாணவர்களே!

நீட் தேர்வை தமிழகத்தைச் சேர்ந்த ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 516 பேர் தேர்வு எழுதினர். இதில் 78,693 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் பிரபஞ்சன் 99.99 மதிப்பெண்கள் எடுத்து தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories