தல மோடிக்கு… மயிலாப்பூர் மக்கு எழுதும் மகத்துவமான மடல்..!

modi saifi mosque - 2026

தல மோடிக்கு, ஸலாம் வெச்சுக்கறேன் வாத்யாரே. எனுக்கு நானே ஒரு இன்றோடக்சன் தந்துக்கறேன்பா. நான் ஜாம்பஜார் ஜக்குவோட சிஷ்ய புள்ள மயிலாப்பூர் மக்கு.

உன்னிய நினைச்சா எனக்கு பாவமா கீது வாத்யாரே. உனுக்கு அர்சியலும் தெர்ல ஜனங்க மன்சுல இன்னா கீதுன்னும் தெர்ல..

நல்ல மருமவன்னு பக்கத்து ஊட்டு பஞ்சவர்ணமும் அடுத்த தெரு அங்கம்மாவும் சொன்னா இன்னா பிரயோஜனம், சொந்த மாமியார் சரோஜா சொன்னாத்தானே கெத்து.. அது கணக்கா உனுக்கு வெள்ளைக்காரனும் சப்பான்காரனும் நல்லா வேல செய்யறேன்னு இஷ்டாம்ப் அடிச்சு சொன்னா ஆருக்கு பிரயோஜனம் சொல்லு. .நம்ம மன்ஷாள் நீ சுகுர்ரா வேலை செய்யறேன்னு சொன்னாத்தானே டாப்பு..

ஒத்த மாமியாரை சமாளிக்கறதுக்குள்ளே டங்கு வார் அறுந்துடும். உனுக்கு ஊருக்குள்ள குந்தினுகிற மொள்ளமாரி, முடிச்சவுக்கி பிராடு வியாபாரிலேர்ந்து, மத மாத்த கும்பல், கம்மூனிஸ்டு.. கூட்டணி கட்சி, எதிர் கட்சின்னு அத்தினி பேரும் மாமியாதான்..அவ்ளோ ஏன், நீ யாரையும் துன்ன உடறதில்லேன்னு உன் கட்சி ஆளுங்களும் மாமியார் ஆயிட்டானுங்கோ..இத்தினி பேரை சமாளிக்கிறது பேஜார்தான் நைனா..

நான் ஒரு ரோசனை சொல்றேன்.. மாமியாக்காரி கைல நல்ல பேர் வாங்கணும்னா அவ போற போக்குலேயே போய்தான் மடக்கணும்..கைல வாங்கிக்கினியா? ..அவளுக்கு வறுத்த கறியும், செட் தோசையும் புடிக்கும்னு தெரிஞ்சா, நீ ரெண்டு நாளைக்கு அவளுக்கு புடிச்சது பண்ணி போடு.. அப்பால உனுக்கு புடிச்ச முட்ட போண்டாவை பண்ணி..அத்தே, உங்களுக்காக நா பெசலா பண்ணேன்னு சொல்லி குடு.. அக்கம் பக்கம் அல்லார் கிட்டேயும், என் மாமியா மாதிரி வருமா..அப்படின்னு இப்படின்னு பிட்டை போடணும்.. அப்பால பாரு, உன்ன தாங்கு தாங்குனு தாங்குவா..

ALSO READ:  ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

அதா மாறி நீ இன்னா பண்றே..மொதல்ல ஜனங்களுக்கு அவங்க ரூட்லே போய் பெப்பர்மிண்ட்டு குடு.. ஏதோ இன்கம்டேக்ஸ்சாமே மாச கூலிக்காரனுங்களுக்கு கம்மி பண்ணிடு.. வாணாம், வாணாம் அத்த காண்டி சூப்பர் யோசனை சொல்றேன்.. இந்த டேக்ஸ் புடிச்ச காசை அவங்க ஸம்ஸாரத்தோட பேங்க் அக்கவுண்டுல போட்டுடு.. அல்லாரும் உன்னை மாதிரி ஆரும் இல்லே ராசானு பாடுவாங்க..

அப்பாலிக்கா அல்லா திட்டத்துக்கும் நீ வாயிலே நுழையாத பேர் வெக்கறே..உங்கூர்ல இன்னவேனா கூப்டுக்கோ, தமிள்நாட்ல இன்னொரு பேரு வெச்சிடு.. பேட்டி பச்சாவோன்னு சொன்னா ஆருக்கு புரியும், சொல்லு.. மகள் திருமகள் அப்படின்னு மன்சுல நிக்கற மாதிரி தமிள் பேர் வெய்யி..இன்னா ?

ஏதோ பண வீக்கத்தை கொற்ச்சிட்டேன்னு சொன்னா, ஆருக்கு பிரியும்..காந்தி மண்டைல அடிச்சா வீங்கும்..ரூவா நோட்ல இருக்கற காந்தி மண்டைல அடிச்ச்சா வீங்குமா..நம்ம ஜனங்களுக்கு இதெல்ல்லாம் தெரியாது.. மாமா போன வருசம் உங்கூலி ரெண்டாயிரம், நீ அதுல எட்டு புல் வாங்கலாம்.. அதே காண்டி இந்த வருசம் அதே காசுக்கு ஒரு கோட்டரும் கூட வாங்கிக்கலாம்..அப்டி தெலிவா சொல்லு தலீவா..

ALSO READ:  திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

அல்லாத்தியும் காண்டி முக்கிமானது..இந்த அக்கா ..அதான் பப்பறக்கான்னா தலை விரிச்சி போட்ருக்குமே ..தமிலிசை அக்கா..அது இசை இல்லை இம்சை..அத்த ஊட்டுக்கு அனுப்பிட்டு விவரமா படிச்சவரா பாலீஷா பேசற ஆளை இட்டாந்து வை..

நீ அப்புறம் பாரு..ஆயுசுக்கும் நீ தான் ராஜா…கெலிச்சுக்கிட்டே இருப்பே..

சரி ..வாத்யாரே..நேரமாச்சி, சம்சாரம் மசாலா அரைக்க வெயிட்டிங்.. நா கழட்டிக்கிறேன்..பாரத் மாதா கி ஜெய்..

எழுத்து: மயிலாப்பூர் மக்கு @  V. வெங்கடேஷ், சிங்கப்பூர்

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

ஏ.வி.ஆர் ஸ்வாமியின் மறைவு ஒரு பொற்காலத்தின் முடிவைக் குறிக்கிறது. தில்லை திருச்சித்ரகூடமான சிதம்பரம் திருத்தலத்திற்கு அவர் ஆற்றிய கைங்கரியங்களும் அவரது நூல்களும் என்றும் நிலைத்து நின்று நல்வழிப்படுத்தும்.

Entertainment News

Popular Categories