December 6, 2025, 1:23 AM
26 C
Chennai

அது ஃபேக்.. இது ரியல்..! நொந்து போன விஜய் சேதுபதி… கீதை குறித்த கருத்துக்கு விளக்கம்!

vijaysethupathi pic - 2025

பகவத் கீதை குறித்து, தான் பேசியதாக பரப்பப்படும் வதந்தி குறித்து, நடிகர் விஜய் சேதுபதி பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில் ஒரு செய்தி நிறுவனத்தின் உண்மை செய்தியையும், பொய்யாக பரப்பப்பட்டு வரும் செய்தியையும் ஒன்றாக சேர்த்து பதிவிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராகத் திகழும் விஜய் சேதுபதி, புனித நூலான பகவத் கீதையைக் கொச்சைப்படுத்தி பேசியதாகக் கூறி, ஒரு டிஜிட்டல் படம் ஒன்று வைரலாகி வருகிறது.

விஜய் சேதுபதியின் இந்தக் கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. சபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு கொடுத்து கருத்து தெரிவித்த விஜய் சேதுபதிக்கு கேரளத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனால் அதிர்ந்தார் விஜய் சேதுபதி. இந்நிலையில், பகவத் கீதை குறித்தும் அவர் அவதூறாகச் சொல்லியிருந்ததாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பரப்பப் பட்டது. இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன.

இதனையறிந்த விஜய் சேதுபதி தனது பேஸ்புக், டுவிட்டர் பக்கம் மூலம் விளக்கம் அளித்திருக்கிறார். அதில் ஒரு செய்தி நிறுவனத்தின் உண்மை செய்தியையும், பொய்யாக பரப்பப்பட்டு வரும் செய்தியையும் ஒன்றாக சேர்த்து பதிவிட்டுள்ளார்.

மேலும், ’என் அன்பிற்குரிய மக்களுக்கு‬ ‪பகவத்கீதை மட்டுமல்ல; எந்த ஒரு புனிதநூலைப் பற்றியும் எப்பொழுதும் நான் அவதூறாகப் பேசியதும் இல்லை‬ பேசவும் மாட்டேன்‬. ‪சில சமூகவிரோதிகள் பரப்பிய அவதூறான செய்தி இது‬.

‪எந்தச் சூழ்நிலையிலும் என் மக்களின் நம்பிக்கையும் ஒற்றுமையும் குலைக்குமாறு நான் நடந்துகொள்ளவே மாட்டேன்‬.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக கடந்த 6ஆம் தேதி செல்போன் திருட்டைக் கண்டுபிடிக்கும் ’டிஜிகாப்’ என்ற காவல்துறையின் ஏற்பாட்டில் நடைபெற்ர மொபைல் செயலி அறிமுக விழாவில் விஜய் சேதுபதி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ‘செல்போன் பறிப்பு சம்பவங்களால் மக்களிடையே பெரும் அச்சம் நிலவுகிறது. காவல்துறைக்கும் பொதுமக்களுக்குமான இடைவெளி டிஜிகாப் செயலி மூலம் குறையும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

தான் பேசியது இதுதான் என்றும் அந்த வீடியோவை பதிவு செய்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories