அது ஃபேக்.. இது ரியல்..! நொந்து போன விஜய் சேதுபதி… கீதை குறித்த கருத்துக்கு விளக்கம்!

vijaysethupathi pic - 2026

பகவத் கீதை குறித்து, தான் பேசியதாக பரப்பப்படும் வதந்தி குறித்து, நடிகர் விஜய் சேதுபதி பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில் ஒரு செய்தி நிறுவனத்தின் உண்மை செய்தியையும், பொய்யாக பரப்பப்பட்டு வரும் செய்தியையும் ஒன்றாக சேர்த்து பதிவிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராகத் திகழும் விஜய் சேதுபதி, புனித நூலான பகவத் கீதையைக் கொச்சைப்படுத்தி பேசியதாகக் கூறி, ஒரு டிஜிட்டல் படம் ஒன்று வைரலாகி வருகிறது.

விஜய் சேதுபதியின் இந்தக் கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. சபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு கொடுத்து கருத்து தெரிவித்த விஜய் சேதுபதிக்கு கேரளத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனால் அதிர்ந்தார் விஜய் சேதுபதி. இந்நிலையில், பகவத் கீதை குறித்தும் அவர் அவதூறாகச் சொல்லியிருந்ததாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பரப்பப் பட்டது. இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன.

இதனையறிந்த விஜய் சேதுபதி தனது பேஸ்புக், டுவிட்டர் பக்கம் மூலம் விளக்கம் அளித்திருக்கிறார். அதில் ஒரு செய்தி நிறுவனத்தின் உண்மை செய்தியையும், பொய்யாக பரப்பப்பட்டு வரும் செய்தியையும் ஒன்றாக சேர்த்து பதிவிட்டுள்ளார்.

மேலும், ’என் அன்பிற்குரிய மக்களுக்கு‬ ‪பகவத்கீதை மட்டுமல்ல; எந்த ஒரு புனிதநூலைப் பற்றியும் எப்பொழுதும் நான் அவதூறாகப் பேசியதும் இல்லை‬ பேசவும் மாட்டேன்‬. ‪சில சமூகவிரோதிகள் பரப்பிய அவதூறான செய்தி இது‬.

‪எந்தச் சூழ்நிலையிலும் என் மக்களின் நம்பிக்கையும் ஒற்றுமையும் குலைக்குமாறு நான் நடந்துகொள்ளவே மாட்டேன்‬.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக கடந்த 6ஆம் தேதி செல்போன் திருட்டைக் கண்டுபிடிக்கும் ’டிஜிகாப்’ என்ற காவல்துறையின் ஏற்பாட்டில் நடைபெற்ர மொபைல் செயலி அறிமுக விழாவில் விஜய் சேதுபதி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ‘செல்போன் பறிப்பு சம்பவங்களால் மக்களிடையே பெரும் அச்சம் நிலவுகிறது. காவல்துறைக்கும் பொதுமக்களுக்குமான இடைவெளி டிஜிகாப் செயலி மூலம் குறையும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

தான் பேசியது இதுதான் என்றும் அந்த வீடியோவை பதிவு செய்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தாமரை வாக்குறுதிகள்’ என்ற பெயரில் பாஜக., தேர்தல் அறிக்கை வெளியீடு!

பாஜக.,வின் 27 வேட்பாளர்களைக் குறிக்கும் வகையில் 27 முக்கிய வாக்குறுதிகளைக் குறிப்பிட்டு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் உள்ள முக்கிய வாக்குறுதிகள்:

பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!

தேர்தல் நேரத்தில் திமுக வேட்பாளர் வீட்டில் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தாமரை வாக்குறுதிகள்’ என்ற பெயரில் பாஜக., தேர்தல் அறிக்கை வெளியீடு!

பாஜக.,வின் 27 வேட்பாளர்களைக் குறிக்கும் வகையில் 27 முக்கிய வாக்குறுதிகளைக் குறிப்பிட்டு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் உள்ள முக்கிய வாக்குறுதிகள்:

பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!

தேர்தல் நேரத்தில் திமுக வேட்பாளர் வீட்டில் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

Entertainment News

Popular Categories