கனிமொழி Vs தமிழிசை; வேட்புமனு பரிசீலனை வரை ஒற்றுமை!

kanimozhi thamizisai - 2026

தூத்துக்குடி நிலவரம் சுவாரஸ்யமானதுதான்! இங்கே போட்டியிடுபவர்களுக்கு நடுவே சில வேற்றுமைகள் இருந்தாலும், முக்கியமாக பாஜக., வேட்பாளர் தமிழிசை சௌந்தர்ராஜன், மற்றும் திமுக., வேட்பாளர் கனிமொழி ஆகியோருக்கு இடையேயான சில சுவாரஸ்யங்கள் பலராலும் பகிரப்பட்டு வருகின்றன.

அப்படிப்பட்ட சுவாரஸ்யங்களின் தொகுப்பை நம் வாசகர் ஒருவர் கட்டுரைக்கான கருத்தாக இட்டிருந்தார். அவை…

இருவருமே இலக்கியவாதி மற்றும் பெரும் அரசியல் பிம்பங்களின் மகள்கள்

தந்தையின் நிழலில் இருவரும் வளர்ந்தனர், இருவருமே இலக்கிவாதிகள், இருவரின் பேச்சிலும் எழுத்திலுமே தந்தையரின் சாயல் நன்றாக தெரியும்

ஆனால் இருவருக்கும்தான் அரசியலில் எவ்வளவு வேறுபாடு?

கலைஞரால் வலிந்து திணிக்கபட்டு , அரசியலில் பாதுகாக்கபட்டு வளர்ந்தவர் கனிமொழி

வழி முதல் ராஜ்யசபா எம்பி வரை அவருக்கு சிகப்பு கம்பளம் விரித்து வழங்கபட்டது, பெரும் சிரமம் என ஏதுமில்லை

அரசியல் அவருக்கு மல்லிகைபூ தூவிய மலர்ப்பாதை

கனிமொழி கலைஞரின் வடிவமாக கருதபட்டு வணங்கபட்ட காலங்கள் உண்டு

ஆனால் தமிழிசை அப்படி அல்ல, அவர் சுயம்பு காங்கிரசோடு அவர் ஒட்டியவரல்ல. வேலாயுதம் எனும் எம்.எல்.ஏவினை முதல் பாஜக உறுப்பினராக‌ அந்த விளவங்கோடு தொகுதி அனுப்பிய காலத்திற்கு முன்பே அக்கா பாஜக கட்சி

ALSO READ:  பிஜேபி., உள்ள வந்துடும்!

பாஜக கொஞ்சமும் தேறாது என கருதபட்ட காலங்கள் அவை

தமிழகத்தில் இந்த கெஜ்ரிவால் கட்சி, மாயாவதி கட்சி, திரினாமுல் காங்கிரஸ் எல்லாம் ஒரு சில நபரோடு இருப்பது போல் அன்று பாஜகவும் இருந்தது

தமிழிசை ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோற்ற காலங்களும் உண்டு

ஆனால் போராடினார், சளைக்காமல் போராடினார்

மலர்பாதையில் நடந்து வருவது சிரமமே அல்ல கனிமொழி அப்படித்தான் வந்தார்

ஆனால் தமிழிசை நடந்த பாதை கடுமையானது, கற்களும் முட்களும் நிரம்பிய பாதை அது, பலநேரம் பாதையே தெரியாமல் திகைக்க்க வேண்டியதிருக்கும்

அதுபோக அவர்மேல் வீசபட்ட அவமான கற்களும், மிக மட்டமான விமர்சன கற்களும் ஏராளம்

கடம்பை வண்டுகளை விட அவை அவரை மோசமாக கொட்டின‌

தன் சோகங்களை எல்லாம் கொட்டி தீர்க்க, தனக்கு வழிகாட்டுங்கள் என அழுது சாய அவருக்கு தந்தை கட்சியில் இல்லை

தனயனும் இல்லை, தமையனுமில்லை

மாறாக போராடினார், கடுமையாக போராடினார், அதை எல்லாம் தாண்டித்தான் அவர் மாநில தலைவராக உயர்ந்தார்

ALSO READ:  திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

கொஞ்சமும் சிக்கலே இல்லாமல் தந்தை என்ற ஒற்றை பெரும் பாதுகாப்பில் இளவரசி தோரணையில் வந்து நிற்பவர் கனிமொழி

தந்தையினை மீறி வேறு கானகம் புகுந்து கடைந்தேறி அனுபவமும் கல்லடியும் சொல்லடியும் பட்டு களத்திற்கு வந்திருப்பவர் தமிழிசை

தேர்தல் களத்தில் கவனிக்கபடுபவர் தமிழிசைதான், ஆச்சரியமாக நோக்கபடுகின்றார்

இருபெண்களையும் ஒப்பிட்டால் தமிழிசைக்கே பலத்த ஆதரவும் பரிதாபமும் மக்களிடம் உண்டு, ஆனால் அரசியல் அதற்கு அப்பாற்பட்டது

தமிழக யதார்த்தபடி கனிமொழி வெல்லலாம்

ஆனால் உண்மையான வெற்றி தமிழிசைக்கே, அவர் போராட்டமும் அவர் சுமந்த பாரமும் அப்படி

ஒருவிஷயம் நோக்க கூடியது

கனிமொழி இந்த தேர்தலுக்கு பின் இப்பக்கம் வருவாரா என்பது தெரியாது, கூடுமானவரை இருக்காது

நாளையே பெரும் சிக்கல் என்றால் அவர் கட்டம் கட்டபடலாம், அதிலிருந்து மீள்வது சிரமம்

முன்பு அவரின் காயங்களை எல்லாம் மிக கவனமாக மருந்திட்டு ஆற்றியவர் அவரின் தந்தை, மிகபெரிய அரண் அது

(ஸ்பெக்ட்ரம் வழக்கில் கலைஞரின் அணுகுமுறையே கனிமொழியினை காத்தது, ஆதாரம் இல்லை என முணுமுணுத்தபடிதான் தீர்ப்பு சொன்னார் ஷைனி)

அதாவது வழிகாட்ட ஆளில்லா , பாதுகாக்க தந்தையில்லா கனிமொழி பலத்த எதிர்ப்புகளை சந்தித்து நிற்பது சிரமம்

ALSO READ:  மலர்வளையம் வைப்பவர்கள்... சுடுகாட்டுக்கே வழி சொல்வார்கள்!

ஆனால் தமிழிசைக்கு மிகபெரும் அனுபவமும் எல்லா சிக்கலை தாண்டி வரும் தைரியமும் இருக்கின்றது!

இன்று இல்லையேல் என்றாவது ஒருநாள் அவரின் போராட்டத்திற்கான பலன் கிடைத்தே தீரும்! பார்த்து பார்த்து வளர்க்கபடும் ரோஜா செடியினை விட, தானாக முளைத்து போராடி வரும் மரத்திற்கு வலு அதிகம்.! எந்த சூழலும் அதை பாதிக்காது, அது நிலைத்தே தீரும்!

  • என்று ஒரு பகிர்வு நமக்கு அனுப்பப் பட்டது.

இதே நேரம், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதில், முதலில் தமிழிசை வேட்புமனுவும், பின்னர் கனிமொழியின் வேட்புமனுவும் ஏற்கப் படாமல் நிறுத்தி வைக்கப் பட்டு, பின்னர் பெருத்த விவாதங்களுக்கு இடையே ஏற்கப் பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories