“கும்பகோணம் குசும்பு”

“கும்பகோணம் குசும்பு”
11951284 962294670510641 6334198986110958314 n - 2026

OXFORD DICTIONARY ல வெள்ளைக்காரன் காலத்திலேயே உங்கள் ஊரு KUMBAKONAM இடம் பெற்றிருந்தது . என்ன அர்த்தம் போட்டிருந்தான் தெரியுமா ? PLACE OF EDUCATED ROGUES என்று தான் !

ராஜாஜி இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ஆனவுடன் போராடித்தான் அந்த வரியை நீக்க வைத்தார் .

அந்த பின்னணி இது தான் .
மைலாப்பூரைச் சேர்ந்த ஒரு வக்கீலும் அவரது பார்யாவும் ( அதாங்க மனைவி ) அந்த காலத்தில் கும்பகோணம் செல்லும் ரயீலில் ஏறினர் . அவர் கட்டுக்குடுமீயுடன் பஞ்சகச்சம் கட்டியும் மாமி மடிசார் புடவையிலும் ஒரு துணிப்பையில் காய்கறி மற்றும் கூஜாவில் தண்ணீர் மற்றோரு சின்ன மஞ்சப்பையில் கோகுலாஷ்டமி பட்ஷணம் சகிதமாக அமர்ந்து இருந்தனர் . பெட்டியில் கூட்டம் இல்லை . ரயில் கிளம்புவதற்கு விசீல் ஊதியதும் இரண்டு வெள்ளைக்காரங்க ஒடி வந்து பெட்டியில் ஏறி வக்கீலுக்கு எதிரே காலியாக இருந்த பெஞ்சில் அமர்ந்தனர் . வண்டி கிளம்பியதும் வெள்ளைக்காரங்களுக்கு எதிரே இருந்த வக்கீல் தம்பதிகளின் நடை உடை பாவனைகளை தங்களுக்குள் கிண்டலடித்து பேசிக்கொண்டிருந்தனர் . எதிரில் உள்ள ஆள் ஆங்கிலம் தெரிந்த ஒரு வக்கீல் என்பது அவர்களுக்கு தெரியாது . வக்கீலுக்கு ரத்தம் கொதித்தது . ஆனால் என்ன செய்ய முடியும் ? நடப்பது வெள்ளையர் ஆட்சி. சிறிது நேரம் கழித்து வெள்ளைக்காரங்க தாங்கள் கொண்டு வந்த ஆப்பிள்களை பேனாக்கத்தி முலம் வெட்டி WINE ல முக்கி சாப்பிட்டு விட்டு தூங்க ஆரம்பித்தார்கள் .

வக்கீல் மட்டும் தூங்கவில்லை . அப்போது தான் அந்தயோசனை அவருக்கு உதித்தது . துணிப்பையில் மார்க்கெட்டில் வாங்கிய கருணைக்கிழங்கை பைரிய அளவில் ஒன்று எடுத்து தன் பேனாக்கத்தியின் மூலம் தோலை உரித்தார். சிவப்பு நிறத்தில் இருந்த கிழங்கை அழகான சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொண்டார் . பொழுது விடிந்து வண்டி கும்பகோணத்தை நெருங்கும் வேளையில் தன் பையிலிருந்த ஒரு தொன்னையை எடுத்து அதில் இரண்டு முறுக்கு சீடை மற்றும் வெட்டிய சிவப்பு கருணைக்கிழங்கு துண்டுகளை வைத்து PLZ HAVE THIS INDIAN APPLE & OUR SOUTH INDIAN TREAT என்று மட்டும் சொல்லிவிட்டு வக்கீல் தம்பதிகள் கும்பகோணத்தில் இறங்கி விட்டனர் . வெள்ள்க்காரங்க கும்பகோணம் தாண்டி எந்த இடம் போனார்களோ தெரியவில்லை .

வெள்ளைக்காரங்க முறுக்கு சீடையை ருசித்து சாப்பிட்டு விட்டு கருணைக்கிழங்கு துண்டுகளை WINE ல முக்கி நான்கு துண்டுகளை வாயில் கடித்து முழுங்கினர் . அவ்வளவு தான் ! தொண்டையில் தாங்க மூடியாத அரிப்பு ஆரம்பித்தது . துடிக்க ஆரம்பித்து எவ்வளவு தண்ணீர் குடித்தும் அடங்கவேயில்லை .அதற்கு ஒரே மருந்து புளியை உள் நாக்கில் தேய்க்க வேண்டும் என்பது வெள்ளைக்காரனுக்கு எப்படி தெரியும் ? அவர்கள் கருணைக் கிழங்கை பார்த்தது கூட கிடையாது .

அதன்பிறகே OXFORD DICTIONARY ல் அவ்வாறு எழுதினர் . நாடு சுதந்திரமடைந்து ராஜாஜி கவர்னர் ஜெனரலாகி அந்த வரி நீக்கப்பட்ட பிறகு தான் நடந்த நிகழ்ச்சியை விலா வாரியாக அந்த வக்கீல் வெளி உலகத்துக்கு தெரியப்படுத்தினார் !

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories