இளைஞர்களின் புதுமுயற்சி ! ஆல்டர் ஆகும் அங்கன்வாடி பள்ளிகள்!

alter govt school1 - 2026பராமரிப்பின்றிக் கிடக்கும் அரசு அங்கன்வாடி பள்ளிகளை  வண்ணம் பூசி, குழந்தைகளுக்குச் சீருடை, அடையாள அட்டை போன்றவற்றை இலவசமாக வழங்கி தனியார் பள்ளிக்கு நிகராக மாற்றியமைத்து வருகிறார்கள் சேலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர்.

இந்த இளைஞர் குழுவுக்குத் தலைமையேற்றுள்ள பிரதீப்பிடம் பேசினோம்:
அரசுப்பள்ளிகளில் மரக்கன்றுகளை நாங்கள் நடச் சென்றோம். அப்போது  அங்குக் கழிவறை வசதி கூட இல்லாமால் குழந்தைகள் கஷ்டப்படுவது தெரியவந்தது.  சேலத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் 25 க்கும் குறைவாக மாணவர்கள் இருக்கும் விவரமும் எங்களுக்குத் தெரியவந்தது. அதற்குக் காரணம் பள்ளிகளில் எந்த வசதியும் இல்லாததே என அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூறுகிறார்கள்.

சேலத்தில் இயங்கும் 36 அங்கன்வாடி மையங்களை புதுப்பித்து  அதனை தனியார் பள்ளிகளுக்கு நிகராக உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.நாங்கள் முதலில் சீரமைக்க நினைத்தது சின்னம்மாபேட்டை அங்கன்வாடி பள்ளி. இது இடியும் நிலையில் இருந்தது. மாநகராட்சி அதிகாரிகளிடம் இது தொடர்பாக மனு அளித்த போது, பள்ளியை சீரமைக்க அரசு நிதி ஒதுக்கவில்லை என்றார்கள். உடன் நாங்கள் எங்கள் கையிலுள்ள சிறுத் தொகையை சேகரித்து இடியும் நிலையில் இருந்த கட்டடத்தை முதலில் சீரமைத்தோம்.

குழந்தைகள் பாதுகாப்பான சூழ்நிலையை உணர்ந்தார்கள். முழுக்க வெள்ளை அடித்துக் கொடுத்தோம். மேலும் குழந்தைகளுக்குத் தேவையான விளையாட்டுப் பொருட்களையும் வாங்கி கொடுத்தோம். இதனால் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப மறுத்த பெற்றோர்கள் தானாக கொண்டு வந்து சேர்த்தார்கள்.alter govt school - 2026அதனைத் தொடர்ந்து தனியார் பள்ளிகளுக்கு நிகராக அம்மாபேட்டையிலுள்ள அங்கன்வாடி பள்ளியை மாற்றினோம். பள்ளி மாணவர்களுக்கு நாங்கள் சீருடை, அடையாள அட்டை தயார் செய்து வழங்கினோம். பள்ளி முழுக்க வண்ண மயம் ஆக்கினோம். இதற்கு அந்தப் பகுதி மக்கள் எங்களுக்குப் பெரிதும் உதவி செய்தார்கள்.

மொத்தமாகப் பள்ளியை சீரமைக்க 1 லட்சத்து 40 ஆயிரம் செலவானது. இதில் பெரும் பங்கு அந்தப்பகுதி மக்கள் கொடுத்து உதவினார்கள். மேலும் எங்கள் குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு எலக்ட்ரீசியன் வேலை, பிளம்பிங், கொத்தனார் வேலை, வெள்ளை அடிப்பது போன்றவை தெரியும் என்பதால்  கூலி என்ற செலவு கிடையாது.

நாங்கள் அம்மாபேட்டை பள்ளியை தயார் செய்து கொடுத்ததற்கு பல தரப்பினரும் இடமிருந்து பாராட்டு வந்தது.

அதனைத் தொடர்ந்து மூன்றாவது அல்லிக்குட்டை அங்கன்வாடி பள்ளியை சீரமைத்துத் தருமாறு அங்குள்ள மக்கள் கோரிக்கை வைத்தனர்.  இந்த ஆண்டு அரசு பல அங்கன்வாடி மையங்களின் தரத்தை உயர்ந்தியுள்ளது. உடனே அந்தப்பள்ளிக்கு சென்று அனைத்து விஷயங்களையும் மாற்றினோம்.

இப்போது அங்கன்வாடி பள்ளி தனியார் பள்ளிக்கு நிகராக விளங்குகிறது. நாங்கள் பணி மேற்கொண்ட மூன்று பள்ளிகளிலும் தற்போது மாணவர் சேர்க்கை நூறு சதவிகிதம் எட்டிவிட்டது. எங்கள் முயற்சி வீண் போகவில்லை. அந்தப்பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க பலரும் முன் வந்து இருக்கிறார்கள். ஆனால் பள்ளியில் இடமில்லை. அடுத்த மாதம் மற்றொரு பள்ளியில் பராமரிப்பு பணிகளைச் செய்ய இருக்கிறோம்” என்கிறார் பிரதீப்.

இது போன்று தமிழகதிலுள்ள மற்றைய இளைஞர்களும் நினைத்து செயல்பட்டால் பல அரசுப்பள்ளிகள் மேன்மை அடையும்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories