காஷ்மீர இளைஞனை நேராக்கிய சுஷ்மா ஸ்வராஜின் அந்த ‘ட்வீட்’ !

Published:

sushmajitweet - 2026

சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பதிவில் வழிதவறிச் என்ற காஷ்மீர் இளைஞனுக்கு எப்படி சரியான வழியை காட்டினார் என்பதை இன்றளவும் பலரும் நினைவுகூர்ந்து வருகிறார்கள்!

ஷேக் என்ற காஷ்மீரில் இளைஞர் ஒருவர் தனக்கு உதவி செய்யுமாறு சுஷ்மா சுவராஜிடம் ட்விட்டர் பதிவில் கேட்டிருந்தார். தயவு செய்து எனக்கு உதவுங்கள்; என்னுடைய பாஸ்போர்ட் சிதிலமடைந்து விட்டது நான் என்னுடைய வீட்டுக்கு திரும்பி வரவேண்டும் என்னுடைய உடல்நிலை மோசமாக இருக்கிறது நான் ஒரு மாணவர் என்று அவர் அந்த ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்

அதற்கு பதில் அளித்த சுஷ்மா சுவராஜ் நீங்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தால் நான் நிச்சயம் உதவுவேன்! ஆனால் உங்களது டிவிட்டர் ப்ரொபைலில் நீங்கள் இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று குறிப்பிட்டுள்ளீர்கள் அப்படி ஒரு இடம் இல்லவே இல்லையே என்று பதில் அளித்திருந்தார்.

இதையடுத்து அந்த மாணவர் தனது தவறை உணர்ந்து ட்விட்டர் ப்ரொபைலில் இருந்து இந்தியா ஆக்குபைட் காஷ்மீர் என்ற வாசகத்தை தூக்கிவிட்டு தான் ஒரு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த இந்தியன் என்று குறிப்பிட்டார்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

இதையடுத்து பலரும் சுஷ்மா ஸ்வராஜுக்கு அப்போது பாராட்டுக்களை தெரிவித்தனர். ஒரு மாணவனை நல்வழிப்படுத்திய ஒரு ஆசிரியை என்ற வகையில் அவருக்கு பாராட்டுகள் குவிந்தன!

இதையடுத்து சுஷ்மா ஸ்வராஜ் மீண்டும் தனது ட்விட்டர் பதிவில் அவர் தன்னுடைய ப்ரோபைலை சரி செய்வதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று குறிப்பிட்டுவிட்டு, இந்திய தூதரகத்தை சேர்ந்த அதிகாரிக்கு, ”ஜெய்தீப் இவர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இந்தியர். இவருக்கு உதவி செய்யுங்கள்” என்று டிவிட்டரிலேயே  உத்தரவிட்டிருந்தார்! அவரது அந்த டிவிட்டர் பதிவினை இப்போது பலரும் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர்னு ஓர் இடம் இல்லியே!: மாணவனைத் திருத்திய சுஷ்மாவுக்கு குவியும் பாராட்டுகள்!

இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர்னு ஓர் இடம் இல்லியே!: மாணவனைத் திருத்திய சுஷ்மாவுக்கு குவியும் பாராட்டுகள்!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img