December 5, 2025, 1:46 PM
26.9 C
Chennai

சுபாஷிதம்: கோபத்தின் வகைகள்!

subhashitam
subhashitam

சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்:

தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

29. கோபத்தின் வகைகள்!

செய்யுள்:

உத்தமே து க்ஷணம் கோபோ மத்யமே கடிகாத்வயம் |
அதமே ஸ்யாதஹோராத்ரம் பாபிஷ்டே மரணாந்தகம் ||
போஜ சரித்திரம்

பொருள்:

உத்தமமான முதல்நிலை மனிதர்களுக்கு கோபம் வந்தால் கணநேரம் மட்டுமே இருந்து மறைந்துவிடும். இடைநிலை மனிதர்களுக்கு கோபம் இரண்டு கடிகைகள் (ஒரு கடிகை என்பது 24 நிமிடங்கள்),  கடைநிலை மனிர்களுக்கு கோபம் ஒரு இரவும் ஒரு பகலும் இருக்கும். இனி வாழ்நாள் முழுவதும் மனதில் கோபத்தை நிறைத்து வைத்திருப்பவர்கள் பாவிகள்!

விளக்கம்:

கோபம் யாருக்கு வேண்டுமானாலும் அவ்வப்போது வரும். ஆனால் அந்த கோத்தை அடக்கி ஆளவேண்டும் என்பது பெரியவர்களின் அறிவுரை. மனிதர்களிடம் கோபம் எத்தனை நேரம் இருக்கும் என்பதைப் பொறுத்து அவர்களின் ஆளுமையை வரிசைப்படுத்துகிறார் கவி இந்த சுலோகத்தில்.

கோபம் வந்தது போல் நடிக்க வேண்டும் என்று கூறுவார்கள் பெரியவர்கள். உண்மையிலேயே கோபம் வந்தால் நிலைதடுமாறி சொல்லக்கூடாத சொற்கள் வாயில் வரும். ஆத்திரத்தில் செய்யக்கூடாத கோரங்கள் நடந்து விடும். அதனால்தான் சினம் கொண்டது போல் நடித்தால் போதும் என்று கூறுவார்கள்.

சினம் எப்போது வரும்? எதனால் வரும்? யாராவது நாம் நினைத்தது போல் நடக்காவிட்டாலோ திட்டமிட்ட செயலுக்கு நஷ்டம் ஏற்படுத்தினாலோ நமக்கு எதிராக நடந்து கொண்டாலோ அவர்கள் மேல் கோபம் வரும்.

தவறு செய்தவர்களை சரியான வழியில் நடக்க வைப்பதற்காகவே உத்தம மனிதர்கள் கோபம் வந்தது போல் காட்டிக் கொள்வார்கள். அதுவும் ஒரு கண நேரம் மட்டுமே இருக்கும். உடனே மனதில் இருந்து மறைந்து விடும். இடைநிலை மனிதர்கள் சற்று நேரம் கோபத்தால் அவதிப்பட்டாலும் பின்னர் கோபத்தை குறைத்துக் கொள்வார்கள். நடந்து முடிந்த நஷ்டத்தை எவ்வாறு சரிசெய்வது என்பது புரியும் வரை மட்டுமே அந்தக் கோபம் இருக்கும்.

அதமர்களான கடைநிலை மனிதர்களுக்குத் தம் வேலையைக் கெடுத்தவர்கள் மேல் ஒரு நாள் முழுவதும் கோபம் இருக்கும். வாழ்நாள் முழுவதும் கோபம் கொண்டிருப்பவர்கள் பாவிகள்! அரக்க குணம் உடையவர்கள்! அதனால் கோபத்தை அடக்கி உத்தம மனிதர்களாக வாழ முயற்சிக்க வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories